Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 9 டிசம்பர், 2013

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
 முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.
எதிர்வரும்  ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக  நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

அன்புள்ள சகோதரா சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற  போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம்.
தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ,அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்கோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்கோ, தலைவர்களின் தர்ம தரிசனத்திற்காகவோ உங்களை அழைக்கவில்லை.
இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும் உங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும், நடத்தப்படும் உங்களுக்கான போராட்டம்.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை ஜெயட்லிதா அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை.
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும்,
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நாடெங்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதியையும் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும்  சிறை செல்லும் போராட்டம்(இன்ஷா அல்லாஹ்)
இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர்கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன்  வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதையும், மற்றவர்களுக்குச் சமமாக அரசியல் அதிகாரத்தை பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.
ஆனால் உங்களின் நிலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
முஸ்லிம்களின் தியாகத்தில் இந்திய விடுதலை
இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடமிருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களைவிட நாம் அதிக உழைப்பு செய்துள்ளோம்.
வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனது மொழியைப் படிக்கக்கூடாது என்றோம்.
படிப்பைப் பாதியில் நிறுத்தினோம்.
வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.
வழிபாட்டுத் தலங்களை கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது, வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் பிரச்சார மேடையாகப் பள்ளிவாசல்களை நாம் பயன் படுத்தினோம்.
வெள்ளையன் கொடுத்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறியபோது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.
உடலாலும், பொருளாலும், உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம்.
இன்றைய முஸ்லிம்களின் அவல நிலை
நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்றுவிட்டார்களே, அதுபற்றிச் சிந்தித்தீர்களா?
கூலித் தொழிலாளியாகவோ
இறைச்சிக் கடைக்காரராகவோ
நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ
கொல்லுப்பட்டரையில் கடின வேலை செய்பவராகவோ
தோல் பதனிடும் தொழிலாளியாகவோ
பெட்டிக்கடை நடத்துபவராகவோ
குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?
சொந்த நாட்டில் தகுந்த கல்வியும், தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?
ஒட்டகம் மேய்த்தல்
சாலை போடுதல்
கழிவுகளைச் சுத்தம் செய்தல்
உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டடங்களில் கூலித் தொழில் செய்தல்
தனியாருக்குக் கார் ஓட்டுதல்
வீடுகளைச் சுத்தம் செய்தல்
சமையல் வேலை செய்தல்
இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?
மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?
இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா?
சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா
ஆகியோரின் அறிக்கைகள் கூறுவதென்ன?
88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்கவேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் பேர் மட்டும்தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே? இந்த நிலை இனியும் தொடரலாமா?
பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம்கள் மூன்று சதவிகிதம்தான் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையைவிட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?
முஸ்லிம்களின் கல்வி, அரசியல், பொருளதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தவில்லையா?
முஸ்லிம்களின் அவலநிலைபற்றி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குறிப்பிடும்போது…
முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம் என்கிறார்.  அதாவது ஒவ்வொரு நூறு முஸ்லிம்களில் 35 பேர் ஒன்றாம் வகுப்பு கூடப் படிக்கவில்லை.
ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்புவரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது.  அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்புவரை படிக்கவில்லை.
எட்டாம் வகுப்புக்கு மேல் 10 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11பேர்தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.
பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரெண்டுவரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 5 பேர்கள்தான் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளனர்.
பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் 3 பேர்தான் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.
இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்த அவலநிலை என்றால் பொருளாதர நிலையிலாவது நமது நிலை உயர்ந்திருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா?
பொருளாதாரத்தில் கடைசிநிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டி போடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.
முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் 20 காசுகளும்தான் என்கிறது அந்த அறிக்கை.
அது மட்டுமன்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.
மற்ற சமுதாய மக்களில் 100க்கு 20 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ், இருக்கும்போது, நமது சமுதாயத்தில் 100க்கு 31பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?
வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.
சொந்தமாக இடம் இல்லாதவர்கள்
இரண்டு ஆடைகளுக்குக் குறைவாக வைத்துள்ளவர்கள்
ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள்
வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள்
வீட்டு உபகரணங்கள்(டீவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள்
படிப்பறிவு இல்லாதவர்கள்
கூலி வேலை செய்பவர்கள்
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாதவர்கள்
நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்
இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா இல்லையா?
100 முஸ்லிம்களில் 35 பேர் குடி தண்ணீர் கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும்
100 முஸ்லிம்களில் 41  பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி  இல்லாத வீடுகளிலும்
100க்கு 23 முஸ்லிம்கள்தான் வசிக்கத் தகுந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் ரங்கநாத் மிஸ்ரா கூறுகிறார்.
நமக்குத் தாராளமான உரிமை கிடைத்துள்ளது என்றால், வகுப்புக் கலவரங்களில் கொல்லப்படுவதில் கிடைத்துள்ளது.
குஜராத் கலவரத்துக்கு முன்வரை நடந்த மொத்த கலவரங்கள் 3949. இதில் 2289 பேர் கொல்லப்பட்டதில் இந்துக்கள் 530 பேரும் முஸ்லிம்கள் 1598 பேரும் ஆவர். அதாவது 65 சதவிகிதம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்தான் நமது சதவிகிதத்தைவிட நான்கு மடங்கு இடம் கிடைத்துள்ளது.
நாட்டில் உள்ள சிறைச் சாலைகளிலும் நமக்கு தாரளமான இடம் கிடைத்துள்ளது. மொத்த கைதிகளில் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் உள்ளனர்.
நமது பேரன் பேத்திகளுக்கு இதைத்தான் நாம் பரிசாக விட்டுச் செல்ல வேண்டுமா?
நம்முடைய சமுதாயமும் கலெக்டர்களாக
உயர் அதிகாரிகளாக
டாக்டர்களாக, எஞ்சினியர்களாக
தொழில் நுட்ப வல்லுனர்களாக
வெளிநாடு சென்றாலும் மனைவி மக்களுடன் சென்று அதிக ஊதியத்துடன் பணி புரிபவராக
பெரிய தொழில் அதிபர்களாக ஆக வேண்டாமா?
இதுபற்றி சிந்திக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
நீதிபதி மிஸ்ரா அவர்கள் நமது அவல நிலையை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. அரசாங்கம் என்ன செய்தால் இந்த அவல நிலை மாறும் என்பதற்கான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார்.
ரெங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரை
எல்லா நிலையிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு  தனியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.
எனவே நாடு முழுவதும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100க்கு 10 என்ற கணக்கில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகளில் மட்டுமின்றி சுய தொழில் தொடங்கக் கடன் வழங்குதல் போன்ற அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் பயன் பெறுவோரில் 100க்கு 10 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போல், முஸ்லிம்களுக்கும் மதிப்பெண்களைத் தளர்த்த வேண்டும்.
உத்திரப் பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் இருப்பதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்.
தரமான கல்வியை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் நவோதயா போன்ற கல்விக்கூடங்களை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தோறும் நிறுவ வேண்டும்.
கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்.
சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு சமையல் கேஸ் இணைப்பு மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை முக்கிய பரிந்துரைகளாகும்.
நமது அவல நிலையை படம் பிடித்துக் காட்டியதுடன் மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் எனவும் மிஸ்ரா வழிகாட்டியுள்ளார்.
உரிமையை வென்றெடுக்க
சரித்திரம் காணாத அளவுக்கு ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு எட்டும் வகையில் நாம் பொங்கி எழுந்தால் மட்டுமே மிஸ்ரா அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்படும். மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்.
ஜெயல்லைதா அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி 3.5 சதவிகிதம் உயர்த்தி தரப்படும்.
நாடு முழுவதும் பத்து சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் எனபதை மத்திய அரசுக்கு உணர்த்தவும்,
மாநிலத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க மாநில அரசுக்கு உணர்த்தவும்மே இந்தப் போராட்டம்.
தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உங்களைக் காட்டி விலை பேசுவோருக்கு, உங்களை அறியாமல் உதவ பல களங்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.
இப்போது உங்களுக்காக, நீங்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்காக, உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படாமல் தடுத்து நிறுத்திட…
நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய..
இத்தனை ஆண்டுகள் ஏமார்ந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம்  என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட ..
இடஒதுக்கீட்டை அடைய எந்த்த் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட..
குடும்பத்துடன் புறப்பட்டு வாருங்கள்
அலை அலையாய் திரண்டு வாருங்கள்
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவிருக்கும் போரட்டக்களங்களை நோக்கி புயலென புறப்படத் தயாராகுங்கள் …
இறையருளால் வென்று காட்டுவோம்.
அணி திரள அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு,
சென்னை – 600001  போன் – 044 2521 5226

26 கருத்துகள்:

  1. தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ,அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்கோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்கோ, தலைவர்களின் தர்ம தரிசனத்திற்காகவோ உங்களை அழைக்கவில்லை.
    சிரிப்பு கட்டுப்படுத்த முடியவில்லை
    அது உண்மை தான்
    10 லட்சம் மக்கள், 05 லட்சம் மக்கள் , கடைசியாக அது ஜெயலலிதா முன் 01 லட்சம் மாறிவிடும் .
    அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கு
    பி.ஜே. தரப்பு எந்தவொரு ஐக்கியத்தையும் ஒருபோதும் ஆதரவளிக்காது , அவர்கள் ஆதரித்ததில்லை. இந்த உண்மை நினைக்க கூடாது , அதனால் பல வசனங்கள் அவர்கள் கூறியுள்ளனர்
    இப்போது இவர்களுக்கு தமது கொடிகளை பிடிக்க மக்கள் வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களை திரட்டுவது எதற்காக என்று சிந்திக்க மாட்டீர்களா. நாங்கள் எங்கள் கட்சி பெருமையை பறைசாற்ற உங்களை அழைக்கவில்லை. இது போல் மக்களை திரட்டி போராடியதால்தான் 3 1/2 சதவீத இடஒதிக்கீடு கிடைக்கப்பெற்றோம். இதன் பயனை அணைத்து முஸ்லீம்களும் அனுபவித்து வருகிறார்கள். இதற்காக பொருளாதாரம், உடல் உழைப்பு செய்த மக்கள் அல்லாவின் திருபொருதத்தை நாடிதான் செய்தனர், செய்துவருகின்றனர் . உங்களால் முடிந்தால் இதில் பங்கேற்கட்கவும், இல்லையேல் அமைதிகாக்கவும், தவ்ஹித் சகோதாரர்கள் எந்த நல்ல விசயமும் செய்தாலும் குறைகாண்பதில் மட்டும் குறியாக இருக்கவேண்டாம். இப்போது நாம் போராடுவது நமது வருங்கால சமுதாயத்திற்கு என்பதை நினைவில் வைக்கவும்.

      நீக்கு
  2. பி.ஜே. கட்சி பெருமையுடன் கூறுவது வழக்கம்
    நாங்கள் அத்தகைய ஒரு பேச்சாளர்கள்
    நாம் பி ஜே பி வாக்களிக்குமாறு மக்களை CONVENCE முடியும்
    அவர்களின் தவறு அல்ல, கண்மூடித்தனமான பின்பற்றுபவர்கள் தவறு

    பதிலளிநீக்கு
  3. iமக்களை திரட்டுவது எதற்காக என்று சிந்திக்க மாட்டீர்களா. நாங்கள் எங்கள் கட்சி பெருமையை பறைசாற்ற உங்களை அழைக்கவில்லை. இது போல் மக்களை திரட்டி போராடியதால்தான் 3 1/2 சதவீத இடஒதிக்கீடு கிடைக்கப்பெற்றோம். இதன் பயனை அணைத்து முஸ்லீம்களும் அனுபவித்து வருகிறார்கள். இதற்காக பொருளாதாரம், உடல் உழைப்பு செய்த மக்கள் அல்லாவின் திருபொருதத்தை நாடிதான் செய்தனர், செய்துவருகின்றனர் . உங்களால் முடிந்தால் இதில் பங்கேற்கட்கவும், இல்லையேல் அமைதிகாக்கவும், தவ்ஹித் சகோதாரர்கள் எந்த நல்ல விசயமும் செய்தாலும் குறைகாண்பதில் குறியாக இருக்கவேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. iமக்களை திரட்டுவது எதற்காக என்று சிந்திக்க மாட்டீர்களா. நாங்கள் எங்கள் கட்சி பெருமையை பறைசாற்ற உங்களை அழைக்கவில்லை. இது போல் மக்களை திரட்டி போராடியதால்தான் 3 1/2 சதவீத இடஒதிக்கீடு கிடைக்கப்பெற்றோம். இதன் பயனை அணைத்து முஸ்லீம்களும் அனுபவித்து வருகிறார்கள். இதற்காக பொருளாதாரம், உடல் உழைப்பு செய்த மக்கள் அல்லாவின் திருபொருதத்தை நாடிதான் செய்தனர், செய்துவருகின்றனர் . உங்களால் முடிந்தால் இதில் பங்கேற்கட்கவும், இல்லையேல் அமைதிகாக்கவும், தவ்ஹித் சகோதாரர்கள் எந்த நல்ல விசயமும் செய்தாலும் குறைகாண்பதில் குறியாக இருக்கவேண்டாம்.

      நீக்கு
  4. நீங்கள் மற்றவர்கள் விஷயங்களில் இதே செய்கிறீர்கள் .
    பொது பிரச்சினை அனைத்து முஸ்லீம் jamath போராட்டத்தில்.
    TNTJ கைகோர்க்க மாட்டார்கள் .
    ஏன் மற்றவர்கள் அழைக்கின்ற இட ஒதுக்கீடு பேரணியில் TNTJ பங்கேற்க மாட்டார்கள் . காரணம், கட்சி விளம்பரம் , கொள்கை வேறுபாடுகள் , மற்ற முஸ்லிம்கள் வெறுக்கிறார்கள் . எனவே இட ஒதுக்கீடு முக்கியம் இல்லை, கட்சி கொடி, தலைவர்களின் பெயர் , கட்சி விளம்பரம் முக்கியம் .

    பதிலளிநீக்கு
  5. எந்த பொது பிரச்சனைக்கும் நாங்கள் TNTJ ஒதுங்கியதில்லை குறிப்பாக நமது சமுதாய பிரச்சனைக்கு கண்டன அறிக்கை முதல் ஆர்ப்பாட்டம் வரை இது உங்களுக்கு தெரிய்யவில்லை என்றாலும் ஆட்சியாளர்களுக்கு நன்றாக புரிந்து வைதிருகின்றார்கள்.எங்களை விளம்பரம் படுத்திக் கொண்டு எந்த தொகுதியில் எந்த பதவியில் போட்டி போட போகிறோம்.தயவு செய்து பொய்பிரச்சாரம் செய்யாதிர்கள்,மற்ற அமைப்பை போல ஆட்களை காட்டி அரசியல் சுய லாபம் தேட மாட்டோம்.அல்லாஹ்வை அஞ்சியவர்களாக ....மற்ற அமைப்பு மேடையில் கலந்து கொள்ளாததிற்கு காரணம் தனி மனிதர் புகழ்ச்சி, பொன்னாடை போர்த்துதல்,அந்த அமைப்புக்கு தொடர்புள்ள அரசியல் தலைவர்களோடு ஒரே மேடையில் இப்படி பல காரணம். ஆனால் இது முழுக்க முழுக்க நமது சமுதாயம் நமது குழந்தைகள் எதிர்காலம் எல்லாம் இருக்கு.என்பதனால் தான்.இந்த எடை ஒதுக்கீடு நமக்கு கிடைத்து இருந்தால் நாம இப்போ குடும்பத்தை இழந்து வாழாமல் சேர்ந்து இருந்து இருப்போம்.சிந்திப்பிராக....அல்லாஹ் உங்களையும் என்னையும் நேர் வழியில் செலுத்துவானாக..

    பதிலளிநீக்கு
  6. எந்த பொது பிரச்சனைக்கும் நாங்கள் TNTJ ஒதுங்கியதில்லை குறிப்பாக நமது சமுதாய பிரச்சனைக்கு கண்டன அறிக்கை முதல் ஆர்ப்பாட்டம் வரை இது உங்களுக்கு தெரிய்யவில்லை என்றாலும் ஆட்சியாளர்களுக்கு நன்றாக புரிந்து வைதிருகின்றார்கள்.எங்களை விளம்பரம் படுத்திக் கொண்டு எந்த தொகுதியில் எந்த பதவியில் போட்டி போட போகிறோம்.தயவு செய்து பொய்பிரச்சாரம் செய்யாதிர்கள்,மற்ற அமைப்பை போல ஆட்களை காட்டி அரசியல் சுய லாபம் தேட மாட்டோம்.அல்லாஹ்வை அஞ்சியவர்களாக ....மற்ற அமைப்பு மேடையில் கலந்து கொள்ளாததிற்கு காரணம் தனி மனிதர் புகழ்ச்சி, பொன்னாடை போர்த்துதல்,அந்த அமைப்புக்கு தொடர்புள்ள அரசியல் தலைவர்களோடு ஒரே மேடையில் இப்படி பல காரணம். ஆனால் இட ஒதுக்கீடு இது முழுக்க முழுக்க நமது சமுதாயம் நமது குழந்தைகள் எதிர்காலம் எல்லாம் இருக்கு.என்பதனால் தான்.இந்த இட ஒதுக்கீடு நமக்கு கிடைத்து இருந்தால் நாம இப்போ குடும்பத்தை இழந்து வாழாமல் சேர்ந்து இருந்து இருப்போம்.சிந்திப்பிராக அல்லாஹ் உங்களையும் என்னையும் நேர் வழியில் செலுத்துவானாக..

    பதிலளிநீக்கு
  7. சைபுல்லாஹ்...

    ஏபிசிடி அப்பளக்கட்டு இயக்கத்திற்கும், மாமாக கட்சிக்கும் சமுதாய நலனில் என்ன திடீர் அக்கறை தவ்ஹீத் சகோதரர்கள் குடும்பத்தினரின் மையத்தை அடக்க விடாமல் செய்வதும், பின் போலிசுக்கு பயந்து அடக்கம் செய்து கொள்ளுங்கள் ஆனால் மைக்கில் அறிவிப்பு செய்ய மாட்டோம் என்பதும்(மாற்று மதத்தினர் இறந்தால் விதிவிலக்கு) இது தான் நீங்கள் சமுதாய நலனில் கொண்ட அக்கரையா...

    உங்களுக்கு பகிரங்க சவாலாகவே விடுக்கிறோம் , மாமாகவும், ஏபிசிடி அப்பளக்கட்டு இயக்கமும் சமுதாய நலனில் அக்கரை இருப்பது போல் மக்களிடம் படம் காட்டுவது உண்மை என்றால் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் இருவரும் ஓரணயில் சேர்ந்து ஒரு தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க தயாரா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முஹம்மது உசேன்17 டிசம்பர், 2013 அன்று PM 7:54

      ABCD இயக்கம் என்றால் என்ன ? தமிழ் நாட்டில் TNTJ என்றும் கேரளாவில் அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் என்றும் உள்ளது தானே ABCD இயக்கம். முதல உங்க ---------------------- ஒழுங்கா கழுவுங்க சகோதரா சைபுல்லாஹ்.....

      நீக்கு
    2. நான் மேலே கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் அளிக்காமல், பெயருக்கு பதில் அளிப்பது நகைப்பாக இருக்கிறது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயர் முதலில் தமிழகத்திற்கு மட்டும் வைக்க பட்டது, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்த ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரம் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் சென்ற அடைந்த வண்ணம் உள்ளது,(அல்ஹம்துலில்லாஹ்)...

      கேராளாவில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என பெயர் வைப்பது எப்படி பொருந்தும் எனவே தான் கேராளாவில் உள்ளவர்களுக்கு ஆல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என பெயர் வைக்கப்பட்டது,,,

      எங்களுக்கு இரு பெயர் இருக்கலாம் ஆனால் ஒரே வழிமுறை (குர்ஆன்,ஹதீஸ்) ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கம் இவையே எங்கள் ஜமாஅத்தின் கொள்கை,

      உங்கள் அப்பளக்கட்டு இயக்கத்தின் கொள்கை என்னவென்று சொன்னால் வசதியாக இருக்கும்...

      நீக்கு
    3. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).. அன்புள்ள சகோதரர்களே !

      முஸ்லிம்களுக்காக உண்மையில் நீங்கள் போராடுபவர்களாக இருந்தால், முதலில் அனைவர்களையும் முஸ்லிம் என்று பகிரங்கமாக அறிவியுங்கள். பிறகு எங்களுக்காக போராடுங்கள். மற்ற எல்லோரையும் காபிர்னு மேடைக்கு மேடைக்கு முழுங்கிவிட்டு எந்த அடிப்படையில் எங்களுக்காக இடஒதுக்கீடு கேட்கிறீர்கள்?எங்கள் சகோதர சகோதரிகளை மேடையில் கழுவி கொட்டிவிட்டு கூட்டம் கூட்ட மட்டும் நாங்கள் வேண்டுமோ!!!

      ததஜ சகோதர்களே! நீங்கள் நேர்மையாளர்களாக இருந்தால் உங்கள் தலைமையிடம் அனைவர்களையும் முஸ்லிம்கள்தான் என்று அறிவிக்கச் சொல்லிவிட்டு பிறகு அனைவர்களையும் அழைக்கச சொல்லுங்கள்.

      சரிஇ நீங்கள் கேட்டபடி அரசியலில் இட ஒதுக்கீடு கொடுத்த பின்பு எந்த முஸ்லிமை ஆதரிப்பீர்கள்? நீங்களோ தேர்தலில் நிற்கப்போவது இல்லை. தேர்தலில் நிற்கும் மமகஇமுஸ்லீம் லீக் எஸ்டிபிஐ ஆகியோர் உங்கள் பார்வையில் சமுதாய துரோகிகள். பிறகு யாருக்காக ஐயா இடஒதுக்கீடு கேட்கிறீர்கள்?

      ததஜவின் கடந்த கால தேர்தல் நிலைப்பாடுகளின் மூலம் திமுகவும் அதிமுகவும் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகளை பிரித்து ஆதாயம் அடைந்தன. முஸ்லிம் சமுதாயம் அடைந்த நன்மை என்ன? தமிமுன் அன்சாரியை இயக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக அவருக்கு எதிராக கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலை செய்தீர்கள் சினிமா விநியோகிஸ்தர் அன்பழகனின் வெற்றியடைய செய்தீர்கள். அன்பழகன் நம் சமுதாயத்திற்காக செய்த சேவைகள் என்ன? பட்டியலிட முடியுமா??

      சிந்தியுங்கள் சகோதர்களே! உங்களிடம் வீண் விவாதம் செய்வதற்காக இதை எழுதவில்லை. உங்கள் தலைமை உங்களை ஏமாற்றுகிறது என்பதை உணர்த்துவதற்கே இதை எழுகிறேன். ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் என் பின்னே இத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டி பேரம் நடத்தி ஆதாயம் அடைவது மட்டுமே உங்கள் தலைவரின் நோக்கம் என்பதை இப்போதாவது உணருங்கள்.

      நீக்கு
    4. உங்கள் கேள்வி இஸ்லாத்தின் அடிப்படையை சரியாக விளங்காததால் வந்துள்ளது, அவை ஒன்றொன்ருக்கும் கீழே பதில் அளிக்கிறேன்...

      முஸ்லிம்களுக்காக உண்மையில் நீங்கள் போராடுபவர்களாக இருந்தால், முதலில் அனைவர்களையும் முஸ்லிம் என்று பகிரங்கமாக அறிவியுங்கள். பிறகு எங்களுக்காக போராடுங்கள். மற்ற எல்லோரையும் காபிர்னு மேடைக்கு மேடைக்கு முழுங்கிவிட்டு எந்த அடிப்படையில் எங்களுக்காக இடஒதுக்கீடு கேட்கிறீர்கள்?எங்கள் சகோதர சகோதரிகளை மேடையில் கழுவி கொட்டிவிட்டு கூட்டம் கூட்ட மட்டும் நாங்கள் வேண்டுமோ!!!

      பதில்: இஸ்லாத்தில் அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னித்து விடுவான் அல்லாஹ்விற்கு இணை கற்பித்ததை தவிர, எனவே நாங்கள் முஸ்லிம்களாக பிறந்து அறியாமையினால் மவ்லீது, தர்கா, தகடு, தாயத்து மற்றும் என்னற்ற அல்லாஹ்விற்கு சிர்க் வைக்க கூடிய காரியங்களை செய்யாதீர்கள், அவை அனைத்தும் இறைவனுக்கு சிர்க் வைக்க கூடிய காரியமாகும் என கூறி வருகிறோம்,

      ஒரு மனிதன் அப்துல் காதர் என பெயர் வைத்து விட்டால் உண்மையான முஸ்லிமாக ஆகிவிட முடியாது,சுவனம் சென்று விடவும் முடியாது, மாறாக இறைவனுக்கு இணை கற்பிக்காமல் (அவனுடைய பண்பை மகானுக்கு,அவுலியாக்களுக்கு வழங்காமலும்) இருந்தால் தான் சொர்க்கம் செல்ல முடியும்...

      நான் ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்கள் ஒரு உத்திரவாதம் தர முடியுமா, மவ்லீது ஓதினால், தர்கா சென்றால் தாயத்து தொங்கவிட்டால் அல்லாஹ் சுவனத்தில் நுழைய செய்வானா....

      நீக்கு
    5. (ததஜ சகோதர்களே! நீங்கள் நேர்மையாளர்களாக இருந்தால் உங்கள் தலைமையிடம் அனைவர்களையும் முஸ்லிம்கள்தான் என்று அறிவிக்கச் சொல்லிவிட்டு பிறகு அனைவர்களையும் அழைக்கச சொல்லுங்கள்.)

      பதில்: அனைவரையும் இந்த போராட்டத்திற்கு அழைக்க காரணம் மூஸா நபியின் சமுதாயம் எவ்வாறு ஃபிர்அவ்னால் கொடுமைக் குள்ளாக்கப்பட்ட போது, இஸ்ரவேலர் சமுதாயத்தை அக்கொடுமையில் இருந்து காக்க அல்லாஹ் மூஸா நபியை அனுப்பினான், மூஸா நபியை வைத்து அல்லாஹ் அந்த சமுதாயத்தை காப்பாற்றினான்,

      இதன் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் இளைக்கப்படும் அநீதிகள் ஏராளம், ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழ அவர்களும் இந்த நாட்டில் மனைவி மக்களோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது...

      நீக்கு
    6. (சரிஇ நீங்கள் கேட்டபடி அரசியலில் இட ஒதுக்கீடு கொடுத்த பின்பு எந்த முஸ்லிமை ஆதரிப்பீர்கள்? நீங்களோ தேர்தலில் நிற்கப்போவது இல்லை. தேர்தலில் நிற்கும் மமகஇமுஸ்லீம் லீக் எஸ்டிபிஐ ஆகியோர் உங்கள் பார்வையில் சமுதாய துரோகிகள். பிறகு யாருக்காக ஐயா இடஒதுக்கீடு கேட்கிறீர்கள்?)

      பதில்: ஆதரவளிப்போம் எப்போது உங்களால் சக இஸ்லாமியர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கும் போது, தவ்ஹீத் ஜமாஅத்தினர் யாராவது இறந்துவிட்டால் மையத்தை அடக்க விடாமல் செய்வதும் அவர்களை ஊர் விளக்கம் செய்வதும் தான் மேலே நீங்கள் கூறிய கட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு செய்த சாதனைகள்...

      எஸ்டிபிஐ:அதிராம பட்டிணம் கொலை, மார்க்கத்திற்கு முரணாக விநாயகர் சதூர்த்திக்கு பேனர் வைப்பது, மாற்று மதத்தவரின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது இது தான் இவர்களின் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகும் லட்சணம்..

      மமக: சுனாமி ஊழல், தானே புயல் வராத என பிற மாவட்ட மக்கள் ஏக்கம், இட ஒதுக்கீட்டில் ரோஸ்டர் முறை மற்றும் பல...

      நீக்கு
    7. (ததஜவின் கடந்த கால தேர்தல் நிலைப்பாடுகளின் மூலம் திமுகவும் அதிமுகவும் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகளை பிரித்து ஆதாயம் அடைந்தன. முஸ்லிம் சமுதாயம் அடைந்த நன்மை என்ன? தமிமுன் அன்சாரியை இயக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக அவருக்கு எதிராக கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலை செய்தீர்கள் சினிமா விநியோகிஸ்தர் அன்பழகனின் வெற்றியடைய செய்தீர்கள். அன்பழகன் நம் சமுதாயத்திற்காக செய்த சேவைகள் என்ன? பட்டியலிட முடியுமா??)

      பதில்: மாமாகவும் சட்டிபீயும் முதலில் இருவரும் ஒரு கூட்டணியில் சேருங்களேன், எஸ்டிபிஐ கட்சி எதற்கு ஆரம்பித்தீர்கள் , அதற்கு முன்பு தான் தேசியலீக், மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பல கட்சிகள் இருக்கும் போது ஒற்றுமையை விரும்பும் நீங்கள் ஏதாவது ஒரு கட்சியில் உங்கள் எஸ்டிபிஐ கட்சி இனையலாமே, இணைய தயாரா??? பகிரங்க சவாலாக விடுக்கிறேன்...

      ஒரு காலும் நீங்கள் இனைய மாட்டீர்கள் குர்ஆன், ஹதீஸ் இல்லாத ஒற்றுமை ஒரு காலும் நிலைக்காது...

      நீக்கு
    8. (சிந்தியுங்கள் சகோதர்களே! உங்களிடம் வீண் விவாதம் செய்வதற்காக இதை எழுதவில்லை. உங்கள் தலைமை உங்களை ஏமாற்றுகிறது என்பதை உணர்த்துவதற்கே இதை எழுகிறேன். ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் என் பின்னே இத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டி பேரம் நடத்தி ஆதாயம் அடைவது மட்டுமே உங்கள் தலைவரின் நோக்கம் என்பதை இப்போதாவது உணருங்கள்.)

      பதில்: ஆதாரத்துடன் நிரூபித்து காண்பியுங்கள் நான் ததஜ விலிருந்து விலக தயார்...

      அவதூறு செய்தியை அள்ளி வீசி பாவத்தை சம்பாதிக்க வேண்டாம்..

      நீக்கு
    9. ”மசாஅல்லாஹ் “

      பதில் அளித்த சகொ... அல்லாஹ் அருள் செய்யடும்...

      அவார்கள் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டடும்

      நீக்கு
  8. மமகவும்,SPDI கட்சிக்கும் சமுதாய நலனில் என்ன திடீர் அக்கறை தவ்ஹீத் சகோதரர்கள் குடும்பத்தினரின் மையத்தை அடக்க விடாமல் செய்வதும், பின் போலிசுக்கு பயந்து அடக்கம் செய்து கொள்ளுங்கள் ஆனால் மைக்கில் அறிவிப்பு செய்ய மாட்டோம் என்பதும்(மாற்று மதத்தினர் இறந்தால் விதிவிலக்கு) இது தான் நீங்கள் சமுதாய நலனில் கொண்ட அக்கரையா...

    உங்களுக்கு பகிரங்க சவாலாகவே விடுக்கிறோம் , மமகவும்,SPDI,தேசிய லீக்,முஸ்லீம் லீக், இயக்கமும் சமுதாய நலனில் அக்கரை இருப்பது போல் மக்களிடம் படம் காட்டுவது உண்மை என்றால் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் ஓரணயில் சேர்ந்து ஒரு தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க தயாரா??
    குறிப்பு: போன MLA தேர்தலில் ராமநாதாபுரத்தில் spdi யும் mmk யும் தனித்தனியே ஓட்டுக்காக அடித்துகொண்டது அந்த நேரத்தில் உங்ககிட்ட ஒற்றுமை இல்லை உங்களுக்கு மறந்து போயுடுச்சு இப்ப மறுபடியும் தேர்தல் திரும்ப ஒற்றுமையை வேண்டும் என்னப்பா நியாயம் இது
    நீங்க தானே ஒற்றுமையைப் பற்றி பேசுறீங்க.. இவன் ஒருத்தன் ஒற்றுமை என்று சிரிபுக்காடிகிட்டு ...

    பதிலளிநீக்கு
  9. மமகவும்,SPDI கட்சிக்கும் சமுதாய நலனில் என்ன திடீர் அக்கறை தவ்ஹீத் சகோதரர்கள் குடும்பத்தினரின் மையத்தை அடக்க விடாமல் செய்வதும், பின் போலிசுக்கு பயந்து அடக்கம் செய்து கொள்ளுங்கள் ஆனால் மைக்கில் அறிவிப்பு செய்ய மாட்டோம் என்பதும்(மாற்று மதத்தினர் இறந்தால் விதிவிலக்கு) இது தான் நீங்கள் சமுதாய நலனில் கொண்ட அக்கரையா...

    உங்களுக்கு பகிரங்க சவாலாகவே விடுக்கிறோம் , மமகவும்,SPDI,தேசிய லீக்,முஸ்லீம் லீக், இயக்கமும் சமுதாய நலனில் அக்கரை இருப்பது போல் மக்களிடம் படம் காட்டுவது உண்மை என்றால் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் ஓரணயில் சேர்ந்து ஒரு தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க தயாரா??
    குறிப்பு: போன MLA தேர்தலில் ராமநாதாபுரத்தில் spdi யும் mmk யும் தனித்தனியே ஓட்டுக்காக அடித்துகொண்டது அந்த நேரத்தில் உங்ககிட்ட ஒற்றுமை இல்லை உங்களுக்கு மறந்து போயுடுச்சு இப்ப மறுபடியும் தேர்தல் திரும்ப ஒற்றுமையை வேண்டும் என்னப்பா நியாயம் இது
    நீங்க தானே ஒற்றுமையைப் பற்றி பேசுறீங்க.. இவன் ஒருத்தன் ஒற்றுமை என்று சிரிபுக்காடிகிட்டு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் செய்யாததை மக்களிடம் செல்லாதீர்கள். நபிமொழி அவர்கள் பொது விசயத்திற்கு ஒற்றுமையாக வருகிறார்கள். ஆனால் TNTJ ????????

      நீக்கு
    2. தவ்ஹீத் சகோதரர்கள் குடும்பத்தினரின் மையத்தை அடக்க விடாமல் செய்வதும், பின் போலிசுக்கு பயந்து அடக்கம் செய்து கொள்ளுங்கள் ஆனால் மைக்கில் அறிவிப்பு செய்ய மாட்டோம் என்பதும்(மாற்று மதத்தினர் இறந்தால் விதிவிலக்கு) இது தான் நீங்கள் சமுதாய நலனில் கொண்ட அக்கரையா...

      உங்களுக்கு பகிரங்க சவாலாகவே விடுக்கிறோம் , மமகவும்,SPDI,தேசிய லீக்,முஸ்லீம் லீக், இயக்கமும் சமுதாய நலனில் அக்கரை இருப்பது போல் மக்களிடம் படம் காட்டுவது உண்மை என்றால் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் ஓரணயில் சேர்ந்து ஒரு தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க தயாரா??
      குறிப்பு: போன MLA தேர்தலில் ராமநாதாபுரத்தில் spdi யும் mmk யும் தனித்தனியே ஓட்டுக்காக அடித்துகொண்டது அந்த நேரத்தில் உங்ககிட்ட ஒற்றுமை இல்லை உங்களுக்கு மறந்து போயுடுச்சு இப்ப மறுபடியும் தேர்தல் திரும்ப ஒற்றுமையை வேண்டும் என்னப்பா நியாயம் இது
      நீங்க தானே ஒற்றுமையைப் பற்றி பேசுறீங்க..

      நீக்கு
    3. எல்லோரையும் முஸ்லிம் சகோதரர்கள் என்று நினைப்பதனால் தான் போராட்டதிற்கு அலைகின்றோம்.எங்கள் பள்ளியில் யார் வேண்டுமானாலும் வரலாம் தொழுகலாம் நாங்கள் ஒன்றும் பிறரை தடுப்பதும் இல்லை,போர்டு வைத்து எங்களுக்கு மட்டும் தான் அனுமதி நாங்கள் மட்டும் தான் முஸ்லிம் நாங்கள் மட்டும் தான் முஸ்லிம்என்று சொல்லவும் மாட்டோம்.

      நீங்கள் நேர்மையாளர்களாக இருந்தால் நீங்கள் எங்களை சகோதர்கள் என்று உண்மையில் நினைத்தால் உங்கள் தலைமையிடம் சொல்லி(மமக,SPDI,தேசிய லீக்,முஸ்லீம் லீக்....)நீங்கள் சொல்லும் ஒற்றும்மைக்கு முதல் முயற்சியாக அந்த கரும் போர்டை தூக்கி எறிய உங்களுக்கு துணிச்சல் இருகிறதா?

      தவ்ஹீத் சகோதரர்கள் குடும்பத்தினரின் மையத்தை அடக்க விடாமல் செய்வதும், மைக்கில் அறிவிப்பு செய்ய மாட்டோம் என்பதும்(மாற்று மதத்தினர் இறந்தால் விதிவிலக்கு)இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் யாருக்கு அதரவு என்று நாங்கள் சொல்லித்தான் மக்களுக்கு தெரியும் என்கிறது இல்லை...
      சும்மா எங்களை எப்போதும் திட்றாங்க காபிர் என்கிறார்கள்...என்று யாரை? எந்த மேடை குறிப்பிட்டு சொன்னோம் ? என்று உங்களுக்கு நான் கேள்வியை வைக்கிறேன் .அல்லாஹ் விற்கு இணை வைக்காதீர்கள் என்று அல்லாஹ்வின் வேதத்தை, நபி வழியில் பிச்சாரம் செய்தால் உங்களுக்கு ஏன் உறுத்துகிறது நீங்கள் என்ன செய்கிறீர்கள்..

      நீக்கு
    4. எல்லோரையும் முஸ்லிம் சகோதரர்கள் என்று நினைப்பதனால் தான் போராட்டதிற்கு அலைகின்றோம்.எங்கள் பள்ளியில் யார் வேண்டுமானாலும் வரலாம் தொழுகலாம் நாங்கள் ஒன்றும் பிறரை தடுப்பதும் இல்லை,போர்டு வைத்து எங்களுக்கு மட்டும் தான் அனுமதி நாங்கள் மட்டும் தான் முஸ்லிம் நாங்கள் மட்டும் தான் முஸ்லிம்என்று சொல்லவும் மாட்டோம்.

      நீங்கள் நேர்மையாளர்களாக இருந்தால் நீங்கள் எங்களை சகோதர்கள் என்று உண்மையில் நினைத்தால் உங்கள் தலைமையிடம் சொல்லி(மமக,SPDI,தேசிய லீக்,முஸ்லீம் லீக்....)நீங்கள் சொல்லும் ஒற்றும்மைக்கு முதல் முயற்சியாக அந்த கரும் போர்டை தூக்கி எறிய உங்களுக்கு துணிச்சல் இருகிறதா?

      தவ்ஹீத் சகோதரர்கள் குடும்பத்தினரின் மையத்தை அடக்க விடாமல் செய்வதும், மைக்கில் அறிவிப்பு செய்ய மாட்டோம் என்பதும்(மாற்று மதத்தினர் இறந்தால் விதிவிலக்கு)இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் யாருக்கு அதரவு என்று நாங்கள் சொல்லித்தான் மக்களுக்கு தெரியும் என்கிறது இல்லை...

      சும்மா எங்களை எப்போதும் திட்றாங்க காபிர் என்கிறார்கள்...என்று யாரை? எந்த மேடை குறிப்பிட்டு சொன்னோம் ? என்று உங்களுக்கு நான் கேள்வியை வைக்கிறேன் .அல்லாஹ் விற்கு இணை வைக்காதீர்கள் என்று அல்லாஹ்வின் வேதத்தை, நபி வழியில் பிச்சாரம் செய்தால் உங்களுக்கு ஏன் உறுத்துகிறது நீங்கள் என்ன செய்கிறீர்கள்..

      நீக்கு
  10. (சிந்தியுங்கள் சகோதர்களே! உங்களிடம் வீண் விவாதம் செய்வதற்காக இதை எழுதவில்லை. உங்கள் தலைமை உங்களை ஏமாற்றுகிறது என்பதை உணர்த்துவதற்கே இதை எழுகிறேன். ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் என் பின்னே இத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டி பேரம் நடத்தி ஆதாயம் அடைவது மட்டுமே உங்கள் தலைவரின் நோக்கம் என்பதை இப்போதாவது உணருங்கள்.)

    பதில்: ஆதாரத்துடன் நிரூபித்து காண்பியுங்கள் நான் ததஜ விலிருந்து விலக தயார்...
    சகோதரே அண்ணன் கூட்டத்தை கான்பித்து பெட்டி வாங்கதான் என்பது உலகரிந்த உண்மை உஙளுக்கு கியாமத் நாளிள் தெரியவரும்.3 1/2 சதவிகிதம் TNTJவால் கிடைத்தது என்று கூருவது ஏற்புடையது அல்ல இனி மக்களிடம் இதுபோன்ற பிரச்சாரம் எடுபடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப உங்களுக்கு இந்த உலகத்தில் ஆதார பூர்வமாக நிறுபிக்க இயலாது ... ஏண்டா ஏதாவது போதைல ஒளருரீயா.... இவரு இங்கு நிரூபிக்க மாட்டாராம் ஆனால் மறுமையில் தெரிய வருமாம்,,,, அவதூறு பரப்புவதற்காகவே உள்ளீர்களா....

      நீக்கு