Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 2 டிசம்பர், 2013

தொடர்ந்து சாதனை படைத்து வரும் நமதூர் விஸ்டம் பள்ளி மாணவர்கள்...


வேப்பந்தட்டை அருகே உள்ள அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். 


இந்திய பள்ளி விளை யாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கான தேர்வு ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் உமர்முக்தர், முகமது இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய அளவிலான போட்டி க்கு தேர்வு பெற்றனர். இவர்கள் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் இந்திய பள்ளி விளையாட்டு கழகத்தின் தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான தேசிய அளவிலான தேர்வு, தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் இப்பள்ளி மாணவர் சையது தாஹீர்அலி தேர்வு பெற்றார். 

இதேபோல தேசிய அளவிலான மகளிர் எறிபந்து போட்டி  விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் இப்பள்ளியின் மாணவி சுஸ்மிதா  தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார். இவர்கள் டிசம்பர் மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட் டியில் பங்கேற்பார்கள். 

தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவ,மாணவிகளை  பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஜியாவுதீன், முதல்வர் பவுல், உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன் மற்றும் கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக