Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம்-ஆட்சியர் தரேஸ் அஹமது !

அரசுத் திட்டங்களை செயல்படுத்த, பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில்,  பொதுமக்களுக்கான அனைத்து  நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு பணியாற்றுவது அரசு அலுவலர்களின் கடமையாகும். அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களிடம் லஞ்சம் கேட்போர் மீது எவ்வித அச்சமின்றி புகார் அளிக்கலாம்.


அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரது செல்போன் எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

லஞ்சம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றிவிடலாம் என நினைப்பது முறையான செயல் அல்ல.

எனவே, பொதுமக்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் அவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் 9444175000, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் 9445048952, 9445048862 அல்லது அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் அறிந்துகொள்ள வசதியாக, மேற்குறிப்பிட்ட எண்கள் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் எழுதப்பட்டிருக்கும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக