Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 20 டிசம்பர், 2013

பெரம்பலூர் மாவட்ட தமுமுக விற்கு விருது – மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அஹமது வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சென்ற ஆண்டிற்கான சிறந்த சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று
(19/12/2013) அன்று மாலை 5.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமது தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரத்ததான சேவைக்கான விருதினை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து இரத்ததான சேவைக்கான கேடயமும், சான்றிதழும் தமுமுக வின் பெரம்பலூர் மாவட்டத்தலைவர் K.A. மீரா மொய்தீன் பெற்றுக்கொண்டார்.


த.மு.மு.க லப்பைக்குடிக்காடு


சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக முதல்வரிடம் இரண்டு விருதுகளை பெற்ற பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமது அவர்களை மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் M. சுல்தான் மொய்தீன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். அந்த சந்திப்பின் போது காலியாக உள்ள டவுன் காஜி பணிக்கு ஹாஜியை நியமிக்க கோரிக்கை மனுவை அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கோரிக்கை  பரிசீலிப்பதாக தெரிவித்தார். கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி லப்பைக்குடிக்காடு

நமது இணையத்தளத்தின் மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக