Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 8 மார்ச், 2015

அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு ...

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் 2 ஆயிரம் பேருக்கு பெரம்பலூரில் உள்ள கியாஸ் ஏஜென்சி மூலம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்
லப்பைக்குடிகாடு பகுதியில் நேற்று முன்தினம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து, சட்ட விரோதமாகவும், முன் அனுமதி பெறாமல் மீராமைதீன், பாட்சா, ஜாகீர், ஜாகங்கீர், அப்துல்ரகீம், பாபு, சம்சுதீன், சலீம், கக்கீம்பாட்சா, தமிம்அன்சாரி, அப்துல்கனி, யூனிக்ஸ், முஜிபுர்ரகுமான், சித்திக், தாரிக் மற்றும் கிராம பெண்கள் உள்பட சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதாக பென்னகோணம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் புகார் செய்தார். 
  புகாரின் பேரில் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்ரிக்மேன்யூவல் 15–க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 கருத்து:

  1. பென்னகோணம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் , Not for some body(15 Persons) , Whole Labbaikudikadu People , let them arrest all .... if they(15 People) affected , we need to rise and prove our unity.... inshaa allah ..

    பதிலளிநீக்கு