Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 31 மார்ச், 2015

திமுகாவின் கவலை ....


இலப்பைக்குடிக்காடு பேரூராட்சி குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரே பேரூராட்சி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர் காலம் காலமாக திமுகவிற்க்கு மட்டுமே வாக்களித்து வருபவர்கள் கடந்த 2011 உள்ளாட்ச்சி தேர்தலில் முதன் முறையாக அதிமுகவிற்க்கு வாக்களித்து அதிமுக தலைவரை தேர்ந்து எடுத்தனர் இந்த 4ஆண்டுகளில் எந்த நலத்திட்டமும்,வளர்ச்சி பணியும் நடைபெற வில்லை கடந்த கழக ஆட்சியில் 2011ம் ஆண்டு 2லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீர்தேக்க தொட்டி 45லட்சத்து 42ஆயிரம் மதிப்பீட்டில் பணி தொடங்கப்பட்டு பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது கழக ஆட்சியின் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் திமுகவிற்க்கு பேர் வந்து விடும் என்பதால் நான்கு ஆண்டுகளாக அப்படியே விட்டு விட்டார்கள் இதை அறிந்த குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் திருமிகு.S.S சிவசங்கர் அண்ணன் பேரூர் நிர்வாக அதிகாரியை நேரில் சந்தித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டும் வேலை நடபெறவில்லை கடந்த 13-3-2015 இளைஞர் எழுச்சி நாள் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்த சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் 
சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் உடனே இந்த நீர்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்க்கு வரவில்லை என்றால் விரைவில் மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தவுடன் இப்போது வேலை நடைப்பெறுகிறது,அடி மேல் அடி அடித்தால் அம்மி மட்டும் அல்ல இந்த டம்மி அரசும் செயல்படும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மக்களுக்காக போராடும் போராட்ட நாயகர் அண்ணனின் அதிரடி போராட்ட அறிவிப்பால் புதிய நீர்தேக்க தொட்டி பயன்பாட்டிற்க்கு வருவதை மக்கள் பாராட்கிறார்கள்.
நன்றி அண்ணா நன்றி மீண்டும் லெப்பைக்குடிகாடு மட்டும் அல்ல தமிழகமே திமுகவின் கோட்டையாகும் 2016ல் கழக ஆட்சி வரும்!!!


முகநூலிலிருந்து
ஜாஹிர் உசேன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக