Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 11 மார்ச், 2015

இந்தியாவின் மகள் ...

டெல்லியில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்தின் ஆவணப்படமான "இந்தியாவின் மகள்" என்ற டாக்குமென்ட்ரியை மத்திய அரசு தடைசெய்துள்ளது.
இவ்வாறான இத்தடையானது இந்தியாவின் தந்தையான அரசாங்கம்,இந்தியாவின் மகளுக்கு செய்யும் உதவியா? அல்லது இந்தியாவின் மகளை கற்பழித்து கொன்ற குற்றவாளிக்கு செய்யும் உதவியா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.
டெல்லியில் பாதிக்கபட்ட நிர்பயா போல் எத்தனையோ இந்தியாவின் மகள்களான நிர்பயாக்கள் மானத்திற்கு பயந்து எதனையும் வெளிப்படுத்தாமல் மூடிமறைத்தவர்கள் ஏராளம்.

ஆனால் அத்தகைய கோழைத்தனம் இந்தியாவின் தந்தையான அரசாங்கத்திற்கும் இருக்காது என்ற நம்பிக்கையை ஆவனபடத்தை தடைசெய்ததன் மூலம் தகர்த்தெறிந்து விட்டார்கள்.ஆகையால் இந்தியாவின் தந்தையும் (அரசாங்கம்) ஏதோ ஒருவிதத்தில் தந்தையாக (ஆட்சிநடத்த) இருக்க லாயக்கற்றவர்கள் என்பதனை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்கள்.
மக்களாகிய நாமோ அப்பெண் கற்பழிக்கபட்ட சமயத்தில் நாட்டையே போராட்டத்தின் வாயிலாக உலுக்கியெடுத்து விட்டோம்.எனக்கு தெரிந்து அப்போராட்டம் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தருவதற்காக அமையபெற்றது.
இப்போது அதே குற்றவாளி அனைத்து வசதிகளுடன் சிறைச்சாலையில் இருந்துகொண்டு, 
அப்பெண்ணை கொன்றதற்கான அவனின் பார்வையிலான நியாயத்தை (கற்பழிக்கும்போது ஒத்துழைக்க வேண்டும்!!!!) சொல்லி,
நிர்பயாவின் பிணத்தை தோண்டி மீண்டும் கற்பழித்த சம்பவத்தை போன்ற ஒரு வாக்குமூலத்தை ஆவணபடத்திற்காக கொடுத்து விட்டு அமர்ந்துள்ளான்.

இவனுக்கு அப்படியென்ன கடும் தண்டனை கிடைக்கபட்டுவிட்டது என,அன்று நாட்டை உலுக்கிய நாம் இப்போது அமைதி காண்கிறோம்?
நமக்குள் இருக்கும் உணர்ச்சியும்,கோபமும்,வேகமும் ஒவ்வொரு முறையும் வெளிவர எல்லாநேரமும் ஒரு நிர்பயாவை நாம் தியாகம் பண்ணவேண்டுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக