Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 மார்ச், 2015

நிலம் கையகப்படுத்தும் மசோதா: மீண்டும் அவசரச் சட்டம்!

நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு வசதியாக, மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த 20-ம் தேதியுடன் முடிவடைந்தது. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்கி மே 8-ம் தேதி வரை நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடரை நேற்றுடன் முடித்து வைத்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை மாநிலங்களவை கூடுதல் செயலர் டி.பி.சிங் வெளியிட்டுள்ளார்.
 இதன் மூலம் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் நீடிக்கிறது.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் வரும் ஐந்தாம் தேதியுடன் காலாவதியாவதால், மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு ஏதுவாக, மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மசோதாவிற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக