Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 மார்ச், 2015

விருதுகள் வெட்கப்படலாம் …?!

சமீபத்தில் வஜ்பெயி அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது அதற்க்கு அவர் மிகவும் தகுதியானவர் என்பதாக சங்- பரிவார்கள் ஆர்பரிக்கின்றனர் ஆனால் அவரது சுதந்திர போராட்ட பதிவுகள் அவரது நடவடிக்கைகளை அக்கினி பரீட்சைக்கு உட்படுத்த வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது
இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடி சிறைபட்டிருந்தபோது அவர்களிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்ததாகவும் சொல்கிறார்கள்
மேலும் அவர் சார்ந்திருந்த இயக்கமோ ஆர் எஸ் எஸ் ஆகும் இதுபற்றி அவரே தனது அமெரிக்க பயணத்தின் பெருமையுடன் பேசியுள்ளார்
அந்த அமைபினரோ இந்தியா விடுதலைக்காக அணிப்பிள்ளை அளவுகூட பணியாற்றாதவர்கள் என்பது வரலாறு இப்படி பல்வேறு விஷயங்கள் விமர்சனங்கள் இருந்தாலும்

இவரது வீட்டுதேடி விருது செண்டிருபது வியப்புதான் என்றாலும் கோட்சே விற்க்கு சிலை வைப்ப்தோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை எனலாம்
இனி இந்தவிருதுக்கு உரியவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக சுதந்திர போராட்ட வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம்
அடுத்ததாக உலக கோப்பையில் ஓட்டைவிட்ட அல்லது கோட்டைவிட நமது அணிபற்றி விமர்சனம் செய்தாலோ வெற்றி பெற்ற அணியினரை பாராட்டினாலோ இங்குள்ள போலி தேசபக்தர்கள் நம்மை தேச தொரோகி என சபித்துவிடும்கள்
என்றாலும் ஒன்றுமட்டும் கூறுவோம் அதையும் உரக்க கூறுவோம் “விளையாட்டை விளையாட்டாகமட்டும் பார்ப்போம் ” அதில் மதவாத விஷமம் செய்யாமல் தவிற்போம் .
- எஸ் எம் ஆர் 28/3/15
(ஜனாஃப் . எஸ்.எம். ரஃபீக் அஹமத் – SDPI)
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக