Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 14 மார்ச், 2015

பெரம்பலூரில் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட SDPI கட்சி ...


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை போராட்டம்  


பெரம்பலூர், மார்ச்.13-பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு முகம்மது ரபீக் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் சித்திக் பாஷா,மாவட்ட துணைத்தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் இதயத்துல்லாஹ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது ரசூல், அப்துல் ரஹீம், அப்துல்கனி, பெரம்பலூர் நகர தலைவர் அகமது இக்பால், வி.களத்தூர் நகர தலைவர் முகம்மது பாருக் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதிகரித்து வரும் லஞ்ச ஊழலை தடுக்க வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. முற்றுகையிட்ட சுமார் 30 பேரை  பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கைது செய்தது.கைது செய்த அனைவரையும் மாலை 6மணிக்கு விடுதலை செய்தனர்.










மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக