Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 மார்ச், 2015

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது!-மும்பை உயர்நீதிமன்றம்!

மும்பை: ஆட்சியாளர்களை கார்ட்டூன், கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சித்த காரணத்தால் ஒருவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இத்தகைய கேலிகள் வன்முறைகளை தூண்டவோ, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கவோ செய்யாவிட்டால் தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று தலைமை நீதிபதி மொஹித் ஸென், நீதிபதி ஜி.எஸ்.குல்கர்ணி ஆகியோரடங்கிய பெஞ்ச் தெரிவித்தது.

வழக்கறிஞரான சங்கர் மராத்தா சமர்ப்பித்த பொது நல மனுவின் மீதான விசாரணையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.தேசிய சின்னம் மற்றும் பாராளுமன்றத்தை கேலிச் செய்து கார்ட்டூன் வரைந்தார் என்று குற்றம் சுமத்தி 2012-ஆம் ஆண்டு கார்டூனிஸ்ட் அஸிம் திரிவேதி மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு கைதுச் செய்யப்பட்டார்.இதற்கு எதிராக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசு இயந்திரத்தை விமர்சிக்கவும், எழுதவும் குடிமக்களுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அஸிம் திரிவேதியின் கார்ட்டூன்களை ஆய்வுச் செய்த பிறகே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.திரிவேதியின் கார்ட்டூன்களில் கேலி இல்லை, மாறாக கோபமே வெளிப்படுகிறது.கார்ட்டூன்கள் வன்முறைக்கு காரணமாக அமையவில்லை என்பதால் தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என்று நீதிபதிகளின் அமர்வு தெளிவுப்படுத்தியது.
அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்ற அஸிம் திரிவேதியின் கைது சம்பவம் அன்று கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது.அவர் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றத்தை அரசு பின்னர் வாபஸ் பெற்றது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக