Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 29 மார்ச், 2015

நமதூர் அருகே 7 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது ...

குன்னத்தை அடுத்த திருமாந்துறை ஏரிக்கரை வரத்து வாய்க்கால் பகுதியில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி தன்னுடைய வயலுக்கு டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது அவருடைய டிராக்டரின் டயர் பஞ்சர் ஆனது. இதனால் அவர் கீழே இறங்கிய போது அப்பகுதியில் சுமார் 7
அடி நீள மலைப்பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதை கிராமத்தில் உள்ளவர்களிடம் பழனிச்சாமி தெரிவித்தார். இது பற்றி அறிந்த மாவட்ட வன அலுவலர் ஏழுமலை உத்தரவின் பேரில் வனச்சரகர் ரவீந்திரன், வன காப்பாளர் திருநாவுக்கரசு, வனவர் வீராசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதை பாதுகாப்பாக கோரையாறு வனப்பகுதியில் சென்று விட்டனர். குன்னம் பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


நன்றி தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக