Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 19 மே, 2013

வந்தே மாதரம் பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்த முடியாது! லக்னோ நீதிமன்றம்..


நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வந்தே மாதரம் பாடலின் போது, கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி ஷபீகுர் ரஹ்மானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை லக்னோ
உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுத்தொடர்பாக சவுரப் ஷர்மா என்பவர் லக்னோ உயர்நீதிமன்றத்தில் ஷபீகுர் ரஹ்மானுக்கு எதிராக பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; ‘ஜன கன மன’ தான் இந்தியாவின் தேசிய கீதம் எனவும் வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது என்றார். ஆகவே இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியை புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்யமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

4 கருத்துகள்:

  1. பெயரில்லா19 மே, 2013 அன்று PM 4:30

    I am curious to find out what blog system you have been working with?
    I'm having some small security problems with my latest blog and I'd
    like to find something more risk-free. Do you have any solutions?



    Here is my webpage: beta.localbride.org

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா19 மே, 2013 அன்று PM 5:17

    Hello! I've been following your site for some time now and finally got the bravery to go ahead and give you a shout out from Dallas Texas! Just wanted to mention keep up the fantastic job!

    Feel free to visit my weblog :: Http://go-jc.com/damarisni/all

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா20 மே, 2013 அன்று PM 3:02

    'வந்தேமாதர பாடல்'' பிரச்சினைக்கு எதிராக, நியாயத்தின் பக்கம் விரைவாகவும் சரியாகவும் தீர்ப்பு வழங்கி, சட்டப்படி நீதியை நிலைநாட்டிய லக்னோ உயர்நீதி மன்றத்துக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்..!
    BY
    ABU SALLIHA

    பதிலளிநீக்கு