Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 11 மே, 2013

சமுதாயம் திரண்டது! சர்க்கார் மிரண்டது!

சமுதாயம் திரண்டது! சர்க்கார் மிரண்டது!


அப்பாவி முஸ்லிம்கள் மேல் பொய் வழ்க்கு போடும்
காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமிய 

இயக்கங்களின் கூட்டமைப்பின் போராட்டத்தை 
தடுக்க முயன்ற அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் 
முறியடித்து அநீதிக்கு எதிராக அலைகடல் என திரண்ட மக்கள்!



போடாதே போடாதே பொய் வழக்குப் போடாதே !
உளவுத்துறையா களவுத்துறையா ?
காவல்துறையா காவித்துறையா ?
எனும் விண்ணதிரும் கோசமும் ,
எந்த மேடையும் ஏறி பேசியிராத எளிய தமிழில் பேசிய 
பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களின் கண்ணீரும் 
இன்றைய ஆர்பாடக் களத்தின் இரு வேறு உணர்வுகள்


எதற்கும் உணர்சி வசப்படாமல் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட இந்த 24 இயக்க கூட்டமைப்பை ஒருங்கிணைக்கும் அப்பல்லொ ஹனிஃபா அவர்கள் சிறைவாசிகளின் குடும்பத்தினர் வடித்த கண்ணீரைக் கண்டு உணர்ச்சி வசப்ப்பட்டு அரசுக்கு எதிராக எச்சரிக்கை ஆர்பரித்து எச்சரிக்கை விடுத்தது இன்றைய ஆர்பாட்டத்தின் உணர்ச்சிகளில் ஒரு துளியாகும்!
கூட்டமைப்பை உடைக்க சதி!
வேலையைத் துவங்கியது உளவுத் துறை !


கூட்டமைப்பில் உள்ள பெரிய ஜனத்திரளைக் கொண்டு வரும் 
சில மஹல்லா ஜமாஅத் ஆலிம்களிடத்திலும் நிர்வாகிகளிடத்திலும் 
தன சித்து வேலையை உளவுத்துறை காட்டி கைது என மிரட்டியதோடு 
ஏராளமான காவல்துறையினரையும் கைது செய்து கொண்டு போக
வாகனங்களையும் கொண்டு வந்து நிறுத்தி மிரட்டியது!
ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத இயக்கத் தோழர்களும்
அநீதியை எதிர்ப்பதில் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம்
சேப்பாக்கத்தில் குவிந்தனர்! அல்ஹம்து லில்லாஹ் !

யா அல்லாஹ் அக்கிரமக்கார கூட்டத்திற்கு எதிராக
எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!
குண்டு வெடிச்சதும் துப்புக் கிடைக்கலைன்னு சொல்லிட்டு
குண்டு வேச்சவனைக் கண்டு பிடிக்க துப்பில்லாத காவல் துறை!
அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதா? தோழர் டி.எஸ்.எஸ்.மணி

அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக 
எப்போதும் குரல் கொடுக்கும் 
அன்பு தோழர் விடுதலை ராசேந்திரன்! 
இன்றைய போராட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்
தமிம் அன்சாரியை தீவிரவாதி என்றீர்கள்
பல்வேறு போராட்டங்களுக்குப் பின் 
இன்றைக்கு இல்லை என்று வெளியே விட்டு விட்டர்கள்! 
இது தான் உங்கள் காவல் துறையின் லட்சணம் 
என காட்டமாக விமர்சிக்கிறார்!
மனித உரிமைகள் எங்கு பாதிக்கப்பட்டாலும்
உடனடியாக ஓடோடி வரும் 
மனித உரிமை போராளி ! மார்க்ஸ்
பல்லாண்டுகளாக சிறையில் வாடும் மக்களுக்காக 
சட்டப் போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர் புகழேந்தி ! 
இன்றைய போராட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்
எம்புள்ள ஜெயில்ல உள்ளவங்களுக்கு உதவுனது ஒரு தப்பா?
அதுக்காக அவனுக்கு கரண்டு ஷாக் வச்சு சித்ரவதையா?

எந்த மேடையும் ஏறி பேசியிராத எளிய தமிழில் பேசிய 
பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களின் கண்ணீர்
கல்லையும் கரைப்பதாக இருந்தது! 
கல் மனம் படைத்த காவல் துறையே!
அவர்களை ஏவி விட்ட ஆட்சியாளர்களே!
இவர்களின் பிரார்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!
அது ஆட்சி அதிகாரங்களை புரட்டிபோடும்!
நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் 
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! 
எனும் இறை வசனத்தின் படி 
வண்ணங்கள் வேறாக இருந்தாலும் 
எங்களின் எண்ணங்கள் ஒன்றுதான்! 
அது அப்பாவிகளின் விடுதலைதான் 
என அவரவர் கொடியோடு அணி திரண்ட
அடலேறுகளின் ஆர்ப்பரிப்பு!
அல்லாஹ் இந்த ஒற்றுமையை நீடித்து வைப்பாயாக!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக