Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 20 ஆகஸ்ட், 2014

வரலாற்றை திருத்தியமைக்க ஆர்.எஸ்.எஸ்ஸின் 10 ஆண்டுகால திட்டம்!

புராணங்களின் அடிப்படையில் வரலாற்றை திருத்தியமைக்க ஆர்.எஸ்.எஸ்ஸின் 10 ஆண்டுகால திட்டம்! 
புதுடெல்லி :  புராணங்களின் அடிப்படையில் இந்தியாவின் வரலாற்றை திருத்தி  எழுத ஆர்.எஸ்.எஸ்  தயாராகிவருகிறது.இதற்காக 10 ஆண்டுகால திட்டத்தை  ஆர்.எஸ்.எஸ் தயாரித்துள்ளது.ஆர்.எஸ்.எஸ் தோற்றுவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாகும்போது இத்திட்டமும் தயாராகிவிடும். ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்டு நூறு ஆண்டுகள்
2025-ஆம் ஆண்டு பூர்த்தியாகிறது.வரலாற்றை திருத்தி எழுதும் திட்டத்திற்காக 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் ஆவர்.இவர்கள் உள்ளூரிலிருந்தே வரலாற்றை திருத்தி எழுதும் பணியை துவக்குவார்கள்.இந்தியாவின் 670 மாவட்டங்கள் இதற்காக தேர்வுச் செய்யப்பட்டுள்ளன.அம்மாவட்டங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படுவதுடன் 600 பழங்குடி இன மக்களின் வரலாறும் மாற்றி எழுதப்படும். ’புராணாந்தார்கத் இதிகாஸ்’ என்பது இத்திட்டத்தின் பெயராகும்.
இதற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான அகில பாரதீய இதிஹாஸ் சங்கலன் யோஜனா குஜராத்தின் பாலம்பூரில் இம்மாதம் 22-24 தியதிகளில் பயிற்சி பட்டறையை நடத்த உள்ளது.இத்திட்டத்திற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள 100 வரலாற்றாசிரியர்கள் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்கின்றனர்.அகில பாரதீய இதிஹாஸுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.மேலும் அகில பாரதீய இதிஹாஸ் பாரதீய புராண் அத்யாயன் சன்ஸ்தான்(இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆஃப் புராணா ஸ்டடீஸ்) என்றொரு நிறுவனமும் டெல்லி கேசவ் குஞ்சில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் துவக்கப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக அகில பாரதீய இதிஹாஸ் அமைப்பின் அமைப்புச் செயலாளரும், ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குமான பாலமுருகு பாண்டே கூறியதாவது:’நாட்டின் வரலாற்றை புராணத்தின் அடிப்படையில் புதிய பார்வையில் தயாரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.வரலாறு என்றால் அது வெறும் ஒரு வரலாறே.இந்தியாவில் புராணமே வரலாற்றின் உறைவிடம்.’ என்று பால முருகு பாண்டே தெரிவித்தார்.
கடந்த மாதம் இந்தூரில் நடந்த மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அகில பாரதீய இதிஹாஸ் இதற்காக முயற்சிகளை நடத்தி வருகிறது.உள்ளூர் வரலாற்றாசிரியர்களின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரலாறு எழுதப்படுகிறது.
தற்போது இந்தியாவில் உள்ளூர் அடிப்படையிலான வரலாறு முழுமையாக இல்லை.ஆகையால் ஆர்.எஸ்.எஸ் எழுதும் வரலாறு எதிர்காலத்தில் அங்கீகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.106 புராண நூல்களை அடிப்படையாக கொண்டு வரலாறு எழுதப்படும் என்று பாண்டே கூறுகிறார்.இதற்கான புராண நூல்களை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் திரட்டியுள்ளது.வரலாற்றை மாற்றி எழுதுவதுடன் அதன் அடிப்படையிலான 100 வால்யூம் கொண்ட என்சைக்ளோபீடியாவும் தயாரிக்கப்படும்.1994-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அகில பாரதீய இதிஹாஸை உருவாக்கியது.
ஆனால், அதற்கு முன்பே இதர சில பெயர்களில் சில மாநிலங்களில் செயல்பட்டு வந்தது.
thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக