Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஹமாஸ் மனித கேடயங்களை பயன்படுத்தவில்லை என உண்மையை வெளியிட்ட பி.பி.சி பொறுப்பாசிரியர் நீக்கம்

இஸ்ரேல் காஸா மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தனது கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக ஹமாஸ் இயக்கம் குழந்தைகளை கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என கூறியிருந்தது.
இது குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிடும் முயற்சியில்
லண்டன் பி.பி.சி நிறுவனத்தின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொறுப்பாசிரியர் ஜெராமிபவன் (வயது54) ஈடுபட்டார்.  அதில் ஹமாஸ் இயக்கத்தினர் குழந்தைகளையோ பாலஸ்தீன அப்பாவி பொதுமக்களையோ மனித கேடயங்களாக பயன்படுத்தவில்லை.  
இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழந்தைபலியாகும் அவலம் நேர்ந்து வருகிறது என கள நிலவரம் குறித்த உண்மை தகவல்களைவெளியிட்டார். தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை எடுத்து வரும் பி.பி.சி செய்தி நிறுவனத்தால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் பொறுப்பாசிரியர் ஜெராமிபவன் ஹமாஸ் இயக்க ஆதரவாளராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறி அவரை பொறுப்பாசிரியர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளின் நடவடிக்கைகளை ஜெராமி பவன் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கண்காணித்து வருபவர். இதனாலேயே பி.பி.சி செய்தி நிறுவனத்தில் இவருக்குஅப்பிராந்தியத்தின் பொறுப்பாசிரியர் பதவியும் வழங்கப்பட்டது.
மேலும் ஆர்.டி.எஸ். தொலைக்காட்சியின் சிறந்த ஊடகவியலாளர் விருதை கடந்தாண்டுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி நீக்கத்திற்கு பின்னணியில் இஸ்ரேல் ஆதரவு அரசியல் இருப்பதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே இங்கிலாந்து அரசின் இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு எதிராகஅந்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அந்நாட்டின் பெண் அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு கண்டனம் தெரிவித்து தனது பதவியையும் ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக