Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஒரு மூமினின் வார்த்தை இப்படித்தான் இருக்கும்....


இதுவரை ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் போராட்டம் பற்றி பேசிவந்த நிலையில், முதன் முறையாக. ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப்பிரிவான இஸ்ஸத்தின் அல் - கஸ்ஸாம் பிரிக்கேட்டின் பொதுச் செயலாளர் முஹம்மத் அல் தைஃப் (muhammad al - daif) அவர்கள் காஸா சண்டைகள் தொடர்பாக பேசியுள்ளார். 



அவர் பேசியதாவது: 

"கருணைமிக்க அல்லாஹ்வின் பெயரால்... சாந்தியும், சமாதானமும் முஜாஹிதீன்களின் தலைவர் முஹம்மத் (ஸல்)அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர் மீதும், அவருடன் இருந்த சஹாபாக்கள் மீதும், எவரெல்லாம் அவர்கள் வழியில் நியாயத்தீர்ப்பு நாள் வரை இருப்பார்களோ அவர்கள் மீதும் உண்டாவதாக.

அவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள். உங்கள் கரங்களை கொண்டே அல்லாஹ் அவர்களை தண்டிப்பான். அவர்களை இழிவுபடுத்துவான், அவர்களுக்கு பாதகமாக உங்களுக்கு உதவியும் செய்வான். மேலும் விசுவாசம்கொண்ட நெஞ்சங்களுக்கு ஆருதளுமளிப்பான் என்ற இறை வசனத்தை உங்களுக்கு ஞாபகம் ஊட்ட விரும்புகிறேன்.

யா அல்லாஹ் உனது உதவியுடனேயே எமது தாக்குதல்களை அவர்கள் மேல் பரவச்செய்ய முடியும். உனது உதவியுடனேயே அவற்றை நாம் கையாள முடியும். உனது உதவியுடனேயே நாம் சண்டையிட முடியும். உனது உதவியில்லாமல் எமக்கு எந்த வல்லமையும் சக்தியும் கிடையாது.

இந்த காலத்தில் அர்பகா எங்கள் உம்மாவின் மீது அதிபயங்கரமான போர் இயந்திரங்களை ஏவி, ஜெருஸலம், மேற்குக்கரை, காஸா போன்ற எமது மண்ணை அபகரித்து விட்டார்கள். வரம்பு மீறி விட்டார்கள். எங்கள் மண்ணில் முற்றுகையிட்டு, மக்கள் மீது பட்டினி சாவை சாட்டியுள்ளார்கள். எமது குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் பயங்கரமான முறையில் கொள்கிறார்கள். எம்மக்களின் வீடுகளையும் தரமட்டமாக்குகிறார்கள். அவர்கள் கண்முன் அவர்கள் வீடுகள் அழிந்து போனது. வரலாற்றில் காணாத அளவு இஸ்ரேலியர்கள் இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்கின்றனர்.

சுரங்கங்கள் ஊடான தாக்குதல்கள் காரணமாகவும், ஏவப்படும் ராக்கெட்டுகள் காரணமாகவுமே தாங்கள் காஸா மீது தாக்குதல்கள் தொடுப்பதாக அவர்கள் பொய்யான ஏமாற்று வேலைகளை செய்கிறார்கள். தோல்வியடைந்த அவர்களது இராணுவத்திற்கு நான் சிலவற்றை கூற விரும்புகிறேன்.

சண்டைகலத்தில் படைபல மேலோங்கு, நிலை மாறிவிட்டது. நீங்கள் எந்தளவிற்கு போராடி உயிர்வாழ விரும்புகிறீர்களோ, அந்தளவிற்கு அல்லாஹ்வின் பாதையில் உயிரைவிட விரும்புகிறவர்களுடன் தான் நீங்கள் சண்டையிடுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் படைகளின் அனைத்து பிரிவுகளிற்கும் எதிராகப் போராட எமது மக்கள் எம்முடன் ஒன்றிணைந்துள்ளனர். தாக்குதல் விமானங்கள், ஆட்டிலரிகள், பீரங்கி கப்பல்கள் என எவ்வளவோ முயன்றும் உங்களால் (உங்கள் இலக்கு) எதையும் அடைய முடியவில்லை. உங்களின் தோற்கடிக்கப்பட்ட தரைப்படை உட்பட, அல்லாஹ்வின் அருளான் எமது முஜாஹிதீன்களின் துப்பாக்கி ரவைகளுக்கும், அதிரடி தாக்குதல்களுக்கும் உங்கள் படைகள் சிதறுகின்றன.

தரையில் நகர்ந்த எதிரிகளுக்கு எதிரான எமது வெற்றிகளுக்கு நிறைய ஆதாரங்கள் உண்டு. Al - Shajaya_வில் என்ன நடந்தது?... எதிரிகளின் (உங்களின்) பல உளவு அமைப்புகள் தோற்றுவிட்டன. தான் விட்ட தவறை எதிரி (அவன்) உணர்கிறான். தான் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதும் அவனிற்கு தெரியும். கடுமையான நரகம் அவர்களுக்கு தயாராக உள்ளது. அது இறைநாட்டம். எதிரி எமது அயல் கிராமங்களின் மீது படுகொலைகளை நிகழ்த்தி அவற்றை இரத்தக்காடாக மாற்ற திட்டமிட்டிருந்தான். ஆனால், அது நடக்காமல் போயுள்ளது. அவர்கள் கொல்லப்படுகிறார்கள். எதிரிகளின் உடல்களே அங்கு இரத்தத்தில் மிதந்தன.

இஸ்ரேலியர்கள் நினைக்கும் நிம்மதியான தேசம் என்பது ஒருபோதும் இருக்காது. அவர்களை பாதுகாப்பாக வாழ விடமாட்டோம். தாக்குதலை நிறுத்தி, முற்றுகையை தளர்த்தி அவர்கள் பழைய இடத்திற்கு பின்வாங்க வேண்டும். அது வரை போர் நிறுத்தம் கிடையாது. எமது மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் பகரமாக எதையும் நாம் ஏற்க்கப்போவத்தில்லை.

நாம் ஏற்கனவே தயாராகிவிட்டோம். எதிரி எம்மை உணர்வூட்டியோ அல்லது அவசரப்படவைத்தோ எம்மை அழிக்க முடியாது. நாம் ஒரு யுத்த கணிப்பிடங்களின் படியே நகர்கிறோம். எம்மை முட்டாளாக்கி அவர்கள் அழிக்க முடியாது. அல்லாஹ்வின் கருணையும், உதவியும் இருக்கிறது என்பதை உறுதியாக நம்பியே இதில் நாம் இறங்கியுள்ளோம்.

எம்மீதான; முஸ்லிம் உம்மாவின், ஃபாலஸ்தீன் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் நாம் அறிந்துள்ளோம். இறைவனிற்கு அடுத்து உங்களை நாம் நன்றியுடன் நினைக்கிறோம். நாம் வலுவாக உள்ளோம். வெற்றி என்பது பொருமையிலேயே உள்ளது. அது இராணுவ ரீதியிலான செயல்பாடுகளிற்கும் பொருந்தும். உங்களிற்கும் (முஸ்லிம் உம்மா) பொருந்தும். வெற்றி என்பது நிச்சயம். அதற்கான பொறுமையான செயல்பாடுகளும் இறைவனின் உதவியை எதிர்பார்ப்பதும் அவசியம்.

ஒ... முஸ்லிம் உம்மா!. நீங்கள் எங்கள் தலைகளின் கிரீடம் போன்றவர்கள். நாங்கள் உங்கள் கவசம் போன்றவர்கள். நாங்கள் உங்கள் ஊழியர்கள். நான் இதை உறுதியாக கூறுகிறேன். இறைவன் பாதுகாவலன், அவன் கருணையாளன். அல்லாஹ் எமது தியாகிகள் மீது கருணை காட்ட வேண்டும். எமது காயம்பட்ட தியாகிகள் மீதும் கருணை காட்ட வேண்டும். எதிரிகளால் கைதுசெய்யப்பட்ட போராளிகள் மீதும் கருணை காட்ட வேண்டும். அல்லாஹ்வின் மாபெரும் வெற்றி வரை இது நிகழ வேண்டும்."

அல்லாஹு அக்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக