Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 20 ஆகஸ்ட், 2014

தகவல் அறியும் உரிமைக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும்போது அவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு அறிவிக்கையில் வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதாவை (whistle blowers protection bill) பாராளுமன்றம் நிறைவேற்றிய பிறகு ஊழலை தோலுரித்துக் காட்டிய மூன்று தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேசனல் கேம்பைன்
ஃபார் பீப்பிள்ஸ் ரைட் டொ இன்ஃபர்மேஷன் (என்.சி.பி.ஆர்.ஐ) உறுப்பினர் அஞ்சலி பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதாவிற்கான அறிவிக்கையை உடனே வெளியிடவேண்டும் என்று கோரி மோடி,
அதிகாரிகள் விவகார துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு என்.சி.பி.ஆர்.ஐ கடிதம் எழுதியுள்ளது.
பொதுப்பணித்துறையின் ஊழலை வெளிச்சம் போட்டுக்காட்டிய உத்தரபிரதேசத்தைச் சார்ந்த மங்கத் தியாகி கடந்த ஏப்ரல் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி 14 ஆயிரம் மனுக்களை தியாகி
சமர்ப்பித்திருந்தார்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக தகவல்களை அறிய மனு அளித்ததால் க்ரேட்டர் நொய்டாவில் மோகன் சர்மா என்பவர் கொல்லப்பட்டார்.கொல்கத்தாவில் இந்தியன் அருங்காட்சியகத்தின் கணக்குகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டிய சுனில் உபாத்யாய் என்ற அதிகாரி காணாமல் போயுள்ளார்.மொத்தம் 40 பேருக்கு மிரட்டல் வந்துள்ளதாக என்.சி.பி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது.
- thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக