Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

பெரம்பலூர் மாவட்டத்தில் காணாமல் போகுது கனிம வளம்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்... !


பெரம்பலூர்: காணாமல் போகும் மலைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயற்கை அரணாக மலைகள் உள்ளன. இம்மலைகளில் பல்வேறு வகையான பாறைகளும், வன விலங்குகள், மூலிகை செடிகள் மற்றும் அரியவகை மரங்கள் காணப்படுகின்றன. மலைகளில் உள்ள பாறைகள், கட்டிடம், தார்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிக்காக, வெட்டி எடுத்து விற்பனை செய்ய, தனியாருக்கு ஏலம் மூலம் டெண்டர் விடப்படுகிறது. மாவட்டந்தோறும் உள்ள கனிமவளத்துறை அலுவலகம் கண்காணிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குவாரிகளை, ஆளும்கட்சியின் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் நடத்துகின்றனர். குவாரியில் கல் வெட்டி எடுக்க, வருவாய்த்துறை மூலம் மலையின் நான்கு புறமும் அளந்து, அரசு அனுமதி வழங்கிய எல்லைக்குள் கல் வெட்டி எடுக்க அளவிட்டு உள்ளனர்.

ஆனால், குவாரி உரிமையாளர்கள் அரசு விதிமுறைகளை மீறி, ஒதுக்கீடு செய்த பரப்பளவைவிட அதிகமான பாறைகளை வெட்டி காசு பார்த்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும், குவாரி உரிமையாளர்களால் தாங்கள் சிறப்பாக கவனிக்கப்படுவதால் கண்டு கொள்வதில்லை.

ஆரம்பத்தில் தொழிலாளர்களை கொண்டு உடைக்கப்பட்ட பாறைகள், தற்போது, ராட்சத இயந்திரங்கள் மூலம், வெடி வைத்து பெயர்த்தெடுக்கின்றனர். இங்கு வைக்கப்படும் வெடியால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் பலனில்லை. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் சமூக ஆர்வலர் விஜய் என்பவரால் தொடர்ந்துள்ளார்.

தவிர, குவாரியில் கல் எடுப்பதற்காக, அதிகப்படியான மரங்கள் வெட்டப்படுகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கவும், கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோருகின்றனர்.

1 கருத்து:

  1. பெரம்பலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஊர் நம்ம ஊர் -லப்பைகுடிக்காடு .
    ஆனால் இந்த மேப்பில் நம்ம ஊரை காண வில்லை!

    பதிலளிநீக்கு