Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தமிழ் சகோதர்களே உஷார்! ஷார்ஜா போலிஸ் அதிரடி..! சட்டவிரோத தொலைபேசி சேவை செய்த 15 ஆசிய நாட்டவர்கள் கைது!!


சட்டவிரோத தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் மற்றும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை வழங்கிய 15 ஆசிய நாட்டவர்களை நேற்று சார்ஜா பொலிசார் கைது செய்துள்ளனர்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் அண்மைய நாட்கள் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை
மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களுக்கு இது ஒரு பாரிய தலையிடியாக கூட மாறியிருக்கின்றது.. இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ், போன்ற நாடுகளுக்கு மிக மிக குறைந்த கட்டணத்தில் தொலைபேசி அழைப்புகளை வழங்க கூடியவாறு தொலைபேசிக்கான மீள் நிரப்பு அட்டைகள், அதே போன்று தொலைபேசி அழைப்புகளை இங்குள்ள சில ஆசிய நாட்டவர்கள் வழங்கி வருகிறார்கள்.. இவர்கள் பற்றி ஷார்ஜா போலிசின் உளவுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஷார்ஜாவின் பல பாகங்களிலும் களத்தில் இறங்கிய பொலிசார் சட்ட விரோதமாக செயற்பட்ட 15 நபர்களை கைது செய்துள்ளனர்.. இவர்களிடமிருந்து பெருமளவான மீள் நிரப்பு அட்டைகள், மற்றும் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு நிலையங்கள் வழங்குகின்ற கட்டண அடிப்படையை விட மிகவும் குறைவான கட்டண அடிப்படையில் வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை இவர்கள் விநியோகம் செய்கின்ற தொலைபேசி அட்டைகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.. இதனால் அதிகமான ஆசிய நாட்டவர்கள் இவர்களின் மூலம் தங்களின் தொலைபேசி அழைப்புகளை சொந்த நாடுகளுக்கு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது..

ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று முதல் ஸ்கைப் மற்றும் வைபர் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத தொலைபேசி வழங்குனர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கும் இந்த சேவைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என இங்குள்ள பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


நன்றி  : மடவல நியுஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக