
அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் என மொத்தம் 349 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், ரோட்டரி கிளப், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் என மொத்தம் 1,396 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் நாளை நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு குழந்தைகளை அழைத்துச்சென்று சொட்டு மருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக