Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 23 பிப்ரவரி, 2013

நாளை 2வது சுற்று போலியோ சொட்டு மருந்து முகாம்....


பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில், கடந்த ஜனவரி மாதம் 20ம்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 51,172 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் பட்டது. இதே போல, நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7மணி முதல் மாலை 5மணி வரை பிறந்த குழந்தைகள் முதல் 5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 

அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் என மொத்தம் 349 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், ரோட்டரி கிளப், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் என மொத்தம் 1,396 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் நாளை நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு குழந்தைகளை அழைத்துச்சென்று சொட்டு மருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக