Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 28 பிப்ரவரி, 2013

மார்க்கம் விலங்கவில்லையா ? விளக்கவில்லையா ?


எது நேர் வழி?

சுன்னத்துவல் ஜமாஅத் என்று சொல்லக்கூடிய
 நாம் இப்படிப்பட்ட மார்கத்திற்கு
 புறம்பானதை தடுப்பது எப்போது ?

 இணை வைத்தலை அல்லாஹ் ஒருபோதும்
மண்ணிக்க மாட்டான் .
இதை தடுப்பார்களா நமது ஊர் இமாம்கள் ?
 அல்லாஹ் மீது ஆணையாக இது இஸ்லாமிய
மார்கத்தின் வழிமுறை அல்ல !
அல்லாஹ்வின் பள்ளிவாசலில்.
கோப்புக்காட்சி
நமது நிருபர்.


 




6 கருத்துகள்:

  1. நவூதுபில்லாஹ், அறியாமை காலத்தில் அறியாமல் செய்த இணைவைத்தலையே அல்லாஹ் தான் நாடினால்தான் மன்னிப்பேன் என்று குர் ஆனில் கூறுகிறான்.தற்பொழுது அல்லாஹ்வின் உதவியால் ஓரளவிற்கு மக்களிடம் விழிப்-புணர்வு ஏற்பட்டு வருகிறது.இன்னும் எல்லா மக்களுக்கும் ஏகத்துவ சிந்தனை ஏற்பட்டு நம் மக்கள் அனைவரும் இஸ்-லாத்தை அதன் அழகிய முறையில் கடைபிடித்து,இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற பல் வேறு பிரச்சாரங்கள் நம் ஊரில் உள்ள இரண்டு தவ்ஹீத் ஜமாத்துகளாலும் செய்யபட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.ஆனால் இந்த காலத்தி-லும் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இது போன்ற செயல்பாடுகளை வீம்பிற்காக செய்யும் இவர்களுக்கு துணைபோகும் மேற்கு ஜமாத்தார்களுக்கும் (நிரந்தர நரகில் சேர்க்கும்) இந்த பாவத்தில் பங்கு நிச்சயம் உண்டு என்பதை அவர்கள் மறந்துவிடவேண்டாம்.ஜமாத்துகள் என்றால் அதை சார்ந்துள்ள மக்களும் அதில் ஒரு அங்கத்-தினர்களே.ஆகவே இது தவறு என்று மனதில் பட்டால் ஜமாத்தார்களை அதை சார்ந்த மக்கள் விளக்கம் கேட்கட்டும், இல்லை என்றால் வரம்பு மீறிய இஸ்ரவேல-ர்களை அல்லாஹ் குரங்குகளாகவும்,பன்றிகளாகவும் மாற்றி தண்டித்ததைப்போன்று அல்லாஹ்வின் கடுமை-யான சாபத்திற்கு அஞ்சிக்கொள்ளட்டும்.அல்லாஹ் நம் ஊர் மக்கள் அனைவருக்கும் நேர் வழி காட்ட துஆ செய்-வோம்.

    பதிலளிநீக்கு
  2. அஊதுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. Asalamu alaikum

    மார்க்கம் விளக்கபடவில்லை . இதன் பொறுப்பு கலிமா சொன்ன அனைவருக்கும் உண்டு . அனைத்து பொறுப்புதாரியும் (ஜமாஅத்கள் , இம்மாம்கள் ,முஸ்லீம்கள் ) மறுமையில் இந்த தீமைக்கு பதில் சொல்லி ஆக வேண்டும் .

    பதிலளிநீக்கு
  5. அஸ்லாமு அழைக்கும்.
    இதை தீன் இயக்கம் ஏன் தடுக்க வில்லை ஊர் மக்களை நல் வழிய்ல் நடத்தி செல்வதும் அவர்களின் பொறுப்பே நரகத்துக்கு இழுத்து செல்கின்ற இதுபோன்ற வழிபாடுகள் தீன் இயக்கம் நமத்ர் ஜமாத்துக்கு எடுத்து சொல்லி இதை தடுக்க வேண்ண்டும். இல்லை என்றால் நாளை அவர்களும் அல்லாஹ் விடம் பதில் கூறவேண்டும் .அல்லாஹ் நம்மை
    அனைவரையும் பாதுகபனாக. ஹமீத்

    பதிலளிநீக்கு
  6. சகோதரர்கள் அனைவர் மீதும் அமைதி நிலவட்டுமாக,

    நமதூரில் தொடர்ந்து செய்யப் பட்டு வந்த ஏகத்துவ பிரசாரத்தின் மூலம் மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி இருக்கிறது எனபது இந்த வழிகேடான விசயத்திற்கு வந்திருக்கும் மக்களை பார்க்கையில் தெரிகிறது.முன்பெல்லாம் இந்த விழாவிற்கு ஊரே திரண்டு வரும்.அந்த தெருவே ஜே ஜே ன்னு இருக்கும்.இப்பொழுது ஓரளவு கூட்டம் குறைந்துள்ளது.இன்ஷா அல்லாஹ் ஏகத்துவ பிரட்சாரத்தை இன்னும் கொஞ்சம் துரிதப் படுத்தினால் அடுத்த வருடம் இந்த விழாவே இல்லாமல் செய்து விட முடியும்.

    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு