Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

‘எனக்கு அல்லாஹ் அளித்த பதவியைக் குறித்து அபிமானம் கொள்ளுங்கள்’ – தூக்கிற்கு முன் அப்ஸல் குரு தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம்!


ஸ்ரீநகர்:“நீங்கள் தைரியமாக இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவான்… அல்லாஹ் எனக்கு அளித்த பதவியைக் குறித்து அபிமானம் கொள்ளுங்கள்” – திஹார் சிறையில் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு அப்ஸல் குரு தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை.
அப்ஸல் குருவின் கையெழுத்துடன் சிறை சூப்பிரண்டின் குறிப்பும் அடங்கிய கடிதத்தை அப்ஸல் குருவின் மனைவி தபஸ்ஸும் நேற்று முன் தினம் ஊடகங்களுக்கு அளித்தார்.

அப்ஸல் குருவை தூக்கிலிடப்படும் விபரத்தை தெரிவிக்கும் அதிகாரிகளின் கடிதத்துடன் ஸ்பீட் போஸ்டில் வந்த கடிதம் கடந்த பெப்ருவரி 12-ஆம் தேதி அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது.
அவர் கடிதத்தின் விபரம்:
“6.25 am
09/02/2013
மதிப்பிற்குரிய எனது குடும்பத்தினர் மற்றும் அனைத்து முஃமின்களுக்கு(நம்பிக்கையாளர்கள்)! அஸ்ஸலாமு அலைக்கும்! (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டுமாக!)
என்னை இப்பதவிக்கு தேர்வுச் செய்த அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்! அனைத்து முஃமின்களுக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.நாம் அனைவரும் சத்தியம் மற்றும் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும். நமது இறுதி முடிவும் சத்தியம் மற்றும் நியாயத்தின் பாதையில் கட்டாயம் அமையவேண்டும். எனது குடும்பத்தினருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நீங்கள் எனது முடிவிற்காக வருந்துவதற்கு பதிலாக நான் அடைந்த இந்த பதவிக்காக நீங்கள் அபிமானம் கொள்ளவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மிகப்பெரிய பாதுகாவலனும், மிகப்பெரிய உதவியாளனும் ஆவான். நான் உங்களை அல்லாஹ்வின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்!” இவ்வாறு அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்ஸல் குருவின் சகோதரர் இஜாஸ் அஹ்மத் குரு கூறுகையில், “இக்கடிதம் அப்ஸல் குருவின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து கஷ்மீரிகளுக்கும் ஆகும்” என்றார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக