Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 12 அக்டோபர், 2013

பாபுலர் பிரண்டும் பாட்டாளி மக்கள் கட்சியும்

 
சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதையும், தாக்கபடுவதற்காகவே முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் படுவதையும் உணர்ந்த முஸ்லிம்கள் காவி தீவிரவாதிகளின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கவும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல, முஸ்லிம்கள்  இந்திய சுதந்திரத்தின் காவலர்கள் என்பதையும் வெகுஜன மக்களுக்கு உணர்த்த முயன்றனர்.

         அதற்கான முயற்சியாக இந்தியாவெங்கும் பெருநகரங்களில் முஸ்லிம் இளைஞர்களை திரட்டி, சுதந்திர தின,குடியரசு நாள் கொண்டாட்டங்களை நடத்தினர். சுதந்திர தின,குடியரசு நாள் கொண்டாட்டங்களில் காக்கி சீருடை  அணிந்து,அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் மதுரையிலும் கேரளாவிலும்  பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா இந்த அணிவகுப்புகள் நடந்தது.  காவி தீவிரவாதிகளுக்கு இது அதிர்ச்சியையும்,அச்சத்தையும் அளிததது.

ஊடகம்,போலிசு,புலனாய்வு,அரசு இயந்திரம் எல்லாவற்றின் உதவியோடு முஸ்லிம்களை நாம் வெகுஜன மக்களிடம் தீவிரவாதிகளாக காட்டிவரும் நிலையில், முஸ்லிம்கள் இதுபோன்ற அணிவகுப்புகள் நடத்தினால் வெகுஜனமக்களிடம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவது எடுபடாது போய்விடுமே என்று கவலைப்பட்டன.

            ஆகவே,சட்டம் ஒழுங்குபிரச்னையைக்  காரணமாக காட்டி, முஸ்லிம்கள்  சுதந்திரதின அணிவகுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது!
சுதந்திரத்தைக் கொண்டாடக்கூட முஸ்லிம்களுக்கு உரிமையில்லை.! உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. 
     ஆனால்,இந்திய இறையாண்மைக்கு எதிரான, நாட்டுக்கு அச்சுறுத்தலையும்  உழைக்கும் மக்களை ஒடுக்கும் பாசிச காவி படைகளின் பயிற்சிக்கும் முயற்சிக்கும் எந்த தடையும் இல்லை.!

ஆர்.எஸ்.எஸ்.பயிற்சிவகுப்புகள், நவீன ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளைக்  கொண்டே நடத்தபடுகிறது. அரசும் பார்த்துகொண்டிருக்கிறது!

         இந்திய தலைநகர் புது டெல்லியில் சுதந்திர தின, குடியரசு நாள் கொண்டாடங்கள்  நடக்கும்போது,  இந்தியாவில் வாழும் பல தேசிய இனங்களின் கலாச்சார,பாரம்பரிய நடனம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். சுதந்திரம் அடைந்து  67- ஆண்டுகளாகிறது.
இத்தனை ஆண்டு கொண்டாட்டங்களில் இந்தியாவில் வாழும் மிகபெரிய தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரியத்தை, அவர்களது கலையை விளக்கும்  நிகழ்சிகள்  நடத்தப்பட்டதை பார்த்திருகிறீர்களா ? பார்க்க  முடியாது! 

       அவ்வளவு ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும் நாட்டுபுற கலைஞர்கள், கலைபண்பாட்டு பிரிவின் கீழ் பயன் பெறுகிறார்கள, நலிந்தவர்களுக்கு மாத ஊதியம்,ஒய்வு ஊதியம் போன்ற சலுகைகள் மாநில அரசால் வழங்கப்பட்டு வருவதை அறிவீர்கள். முஸ்லிம்களுக்கு அதுபோல் வழங்கப்படுகிறதா? இல்லை என்பதுதான் எதார்த்தமும் கசப்பான உண்மையும் ஆகும்!
       முஸ்லிம்கள் என்பதற்காகவே சுதந்திரம் அடைந்த பிறகு அவர்கள் தொடர்ந்து புரகநிக்கப்பட்டு,அடக்கி ஒடுக்கப்பட்டு, வாழ்வாதாரங்களை இழந்து,இம்மண்ணில் தீவிரவாதிகளாக ஆக்க்படுவதை காவிபயங்கரவாதம் இந்துத்துவ பாசிசம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?
        இப்படிப்பட்ட சூழல்கள் உள்ளநிலையில் சமூக நீதியை பற்றி,தந்தை பெரியாரை தூக்கி சுமந்து,திராவிட மக்களிடம், அதுவும் உழைக்கும் பாட்டாளி மக்களின் ஆதர்ச நாயகனாக உருவான  பாட்டளிமக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று என்ன சொல்கிறார் தெரியுமா?

   "திராவிட கட்சிகளை தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்பது காலம் நமக்கு இட்டுள்ள கட்டளை" என்கிறார். ராமதாசுக்கு  காலம்  இட்ட கட்டளை இல்லை அது ! காவிகளின் காலை பிடிக்க அவர்  போடும் நாடகமாகும்! 

மின்னஞ்சல் மூலமாக 
அப்துல் ஹமீது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக