Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 29 அக்டோபர், 2013

தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு பகிரங்க மடல்!

சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு,
ஜூனியர் விகடன் 30.10.13 இதழ் படித்தேன். “விதாண்டாவதத்தால் மோடியை வீழ்த்த முடியாது” என்ற தலைப்பில் வெளிவந்த பேட்டியில் ஆதாரமற்ற தகவல்களை, உண்மை போல் கூறியது கொஞ்சமும் அரசியல் நாகரிகமில்லாததாகும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, எவ்வளவோ கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று நினைத்தீர்கள். ஆனால், மக்களிடம் அந்த பிம்பங்கள் எடுபடவில்லை.


தற்பொழுது, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று, குஜராத் வளர்ச்சி, மோடியின் திறமை என்ற பிம்பத்தை உருவாக்கி வருகின்றீர்கள். அதற்கு எவ்வளவு தூரம் உண்மையில்லாத விஷயங்களை சொல்லி மக்களை ஏமாற்ற முடியுமோ அவ்வளவு தூரம் ஏமாற்றுவதற்குண்டான வேலைகளை செய்து வருகின்றீர்கள்.

அந்த அடிப்படையிலேயே இந்தப் பேட்டியையும் பார்க்கின்றேன்.

“பாரதிய ஜனதா என்றாலே தவறான கட்சி, நரேந்திர மோடி நல்லதே செய்ய மாட்டார் என்று தங்களுக்குள் தீர்மானத்தை வைத்துக் கொண்டு எழுதுவதும், பேசுவதும் அவர்களது வழக்கம். மோடி என்ற வார்த்தையைக் கேட்டதும் இவர்கள் சொல்லும் விமர்சனங்கள் அனைத்துமே ஒரு தலைப்பட்சமானவை” என்று பேட்டியில் கூறியிருக்கின்றீர்கள்.

பாரதிய ஜனதா கட்சி என்றாலே தவறான கட்சி என்று நாங்கள் சொல்லவில்லை. அதை நீங்கள்தான் நிரூபிக்கின்றீர்கள். உங்களுடைய செயல்பாடுகள்தான் அதை உண்மைப்படுத்துகின்றது. சட்டமன்றத்தில் ஆபாசப் படம் பார்த்தது, தவறான வீடியோக்களைப் பரப்பி மத மோதல்களை ஏற்படுத்துவது, திறமையற்ற நிர்வாகம், உட்கட்சிப் பூசல், போலி என்கௌண்டர்களை நடத்துவது, கட்டப் பஞ்சாயத்து செய்வது என்று கட்சியின் செயல்பாடுகள்  கேலிக் கூத்தாக இருக்கின்றது. இதை விட கட்சிக்கு கெட்டப் பெயர் வாங்க வேறு எந்த சான்றிதழும் தேவை இல்லை.

மோடியை எதிர்ப்பது ஒரு தலைப்பட்சமானது அல்ல; இதே தவறை காங்கிரஸ் செய்தாலும் அதையும் மக்கள் எதிர்ப்பார்கள். ஆனால், இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பதையும் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.
காந்திய நெறியாளரும், நடுநிலையாளருமான தமிழருவி மணியனைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை என்று கூறுகிறீர்கள். தங்களுடைய அரசியல் சுய லாபத்திற்காக காந்தியைக் கொன்றவர்களோடு கூட்டு வைப்பவர்களை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்?

இதுவரை காந்தியம் என்ற பெயரில் அரசியல் நடத்தி விட்டு, தற்பொழுது காந்தி வேண்டாம், கோட்சேதான் வேண்டும் என்று போகும் இவர்களை விமர்சிக்காமல் சும்மா இருக்க முடியுமா?

காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் அமர்ந்து கொண்டு இந்தியாவின் சொத்தைச் சுரண்டிச் சூறையாடியது என்கிறீர்கள். ஆனால், நீங்கள் கர்நாடகாவில் இரண்டு ஆண்டுகளிலேயே அதனைச் செய்து விட்டீர்கள். கர்நாடகாவில் மூன்று முதல்வர்கள் மாறியுள்ளார்கள். என்ன காரணம்? கர்நாடகாவில் ஊழலை முன்னின்று நடத்திய ரெட்டி சகோரர்களை மக்கள் மறக்கவில்லை.

காங்கிரஸின் ஊழலைப் பற்றி அடிக்கடி பாரதிய ஜனதா தலைவர்கள் பேசி வருகிறார்கள். கார்கில் போர் வீரர்களுக்கு சவப் பெட்டி வாங்கியதில் ஊழல் செய்த பெருமை பி.ஜே.பி.யைத் தவிர வேறு யாருக்கும் சேராது என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

ஊழலைப் பொருத்தவரையில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் சிறிதும் சோரம் பேகவில்லை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்பையும், வெளிநாட்டுப் பாதுகாப்பையும் தைரியமாகக் கையாளத் தெரியவில்லை என்கிறீர்கள். ஆம்! நீங்கள் பாகிஸ்தானை வைத்து வெளிநாட்டுப் பாதுகாப்பைக் கூறுகிறீர்கள். உள்நாட்டில் காவி பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பை நீங்கள் வாங்கித் தருவீர்களா என்றால் பதில் இல்லை.

இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று ஒவ்வொரு விசாரணையிலும் தெரிய வந்து கொண்டிருக்கின்றது. அசீமானந்தா, கர்னல் புரோகித், பெண் சாமியார் பிரக்யா சிங் போன்றோர் இன்றும் சிறையில் உள்ளதே இதற்கு சாட்சி!

இலங்கைத் தமிழர்கள் மிகக் கொடூரமான அழிவைச் சந்தித்தார்கள். இதனைக் காங்கிரஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று கூறுகிறீர்கள். நீங்களாக இருந்தால் இணைந்து உங்களுடைய பங்கையும் வெளிப்படுத்தி இருப்பீர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

காங்கிரஸ் பெரும் துரோகம் செய்தது என்று மிக வருத்தத்துடன் கூறினீர்கள். ரத யாத்திரை என்ற பெயரால் இந்தியாவில் முஸ்லிம்கள் ரத்தத்தை ஓட விட்டிர்களே! இது முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் துரோகமல்லவா!

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பேரழிவுகள் தொடரும் என்பதால், சில அரசியல் முயற்சிகளை செய்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் மத்தியில் ஆட்சியில் இல்லாமலிருக்கும்போதே நாட்டில் இத்தனை குண்டுவெடிப்புகள் நடக்கிறதென்றால், ஆட்சிக்கு வந்தால் குண்டுவெடிப்புகளையும், உயிர் பலிகளையும் எண்ண முடியாது என்பதற்காக, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரக் கூடாது என்று நிறைய முயற்சிகளை செய்கிறார்கள் நாட்டில் அக்கறை கொண்ட மக்கள்.

ஒரு மாநிலத்தின் மக்களைக் கரை சேர்த்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியை கறை படிந்தவர் என்பதும், 10 ஆண்டுகளாக மதக்கலவரமே இல்லாமல் ஆட்சி செய்யும் ஒருவர் வந்தால் இந்த நாட்டில் மதக்கலவரம் வந்து விடும் என்று பயமுறுத்துவதும், மாற்றத்தை, முன்னேற்றத்தைக் கொண்டு வரும் ஒருவரை அச்சுறுத்துபவராக முன்னிறுத்துவதும் சரியல்ல என்று கூறுகிறீர்கள்.

நாட்டிலேயே எந்த முதல்வரும் முன்னின்று செய்யாத ஒன்றை குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியதன் மூலம் மோடி செய்தார் என்பதும், அதன் மூலம் தன்னுடைய பெயரை வளர்த்துக் கொண்டார் என்பதும்தான் உண்மை.

குஜராத்தில் 32  போலீஸ் அதிகாரிகள் சிறையில் உள்ளார்கள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை வைத்து, குஜராத்தில் இரண்டு மாதம் நடைபெற்ற கலவரத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் கதறக் கதற மானபங்கப்படுத்தப்பட்டனர். மிருகங்களைப் போல் ஒரு பெண்ணை பலபேர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினர்.

கருவிலிருக்கும் சிசுவை சூலத்தால் குத்தியெடுத்து தீயில் போட்டுப் பொசுக்கினர். இளம் பிஞ்சுகளின் வாய்களில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 19,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர். இஹ்ஸான் ஜாஃப்ரி என்ற காங்கிரஸ் எம்.பி. துண்டு துண்டாக வெட்டப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

ஆனால், கொஞ்சமும் வாய் கூசாமல் 10 ஆண்டுகளாக மதக்கலவரம் நடக்கவில்லை என்று பொய்யான தகவல்களை பத்திரிகைகளுக்கு அளிக்கிறீர்கள். மக்களுக்கு ஒரு சமூகத்தையே இனச் சுத்திகரிப்பு செய்து, இல்லாமல் ஆக்கும் மாற்றமும் முன்னேற்றமும் தேவையில்லை.

நான் மருத்துவர், ஒரு சொட்டு ரத்தம் பீறிட்டாலும் பதைபதைத்துத் தடுக்கக் கூடியவர். ஓர் உயிர் போவதை அது எந்தக் காரணமாக இருந்தாலும் நியாயப்படுத்தவே முடியாது. ஆனால், எனக்குள்ள வருத்தமெல்லாம், குஜராத் கலவரத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள், கோத்ரா ரயிலில் துடிக்கத் துடிக்கக் கருகினார்களே… அவர்களைப் பற்றி கவலையே படவில்லையே? ஏனென்றால், அவர்களது நோக்கம் மனித உயிர்களைப் பற்றி அல்ல. பாரதிய ஜனதாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது என்று கூறியிருக்கிறீர்கள்.

ஓர் உயிர் போவதை, அது எந்தக் காரணமாக இருந்தாலும் நியாயப்படுத்தவே முடியாது என்கிறீர்கள். ஆனால், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உயிர்களை மறக்கச் சொல்கிறீர்களே இது என்ன நியாயம்? குஜராத் இனப்படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் உள்ள மாயா பின் கோத்னானியும் ஓரு மருத்துவர்தான் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

கோத்ரா ரயிலில் கொல்லப்பட்டதும் உயிர்கள்தான்; குஜராத்தில் கொல்லப்பட்டதும் உயிர்கள்தான்; இந்த இரண்டுக்கும் காரணம் நீங்கள்தான். கோத்ரா ரயிலில் தீ உள்ளிருந்துதான் வைக்கப்பட்டுள்ளது என்றும், வெளியிலிருந்து முஸ்லிம்கள் வைக்க வாய்ப்பே இல்லை என்றும் அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

நீங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என்று கூறுகிறீர்கள். ஜெர்மனியில் ஹிட்லர் அனைத்து விதமான முன்னேற்றங்களையும் செய்தார். அதற்காக அவரது சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்வீர்களா? அதே போன்றுதான், வளர்ச்சி என்ற மாயையைக் காட்டினாலும், சர்வாதிகாரம் என்றொன்று இந்திய நாட்டிற்கு வேண்டாம் என்கின்றோம்.

2002க்குப் பிறகு நாட்களே நகராதது போல பேசுகிறார்கள் என்கிறீர்கள். அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கைத் தரம் இன்னும் ஒரு படி கூட நகரவில்லை என்பதுதான் உண்மை. மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்து, தற்பொழுது உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமித் ஷாதான் முஸஃபர் நகர் கலவரத்தின் சூத்திரதாரி என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிரிவினையைப் பற்றி நாங்கள் பேசவில்லை. பிரிவினைக்குக காரணமே நீங்கள்தான் என்கின்றோம். சர்வாதிகார வளர்ச்சி எங்களுக்கு எப்போதும் தேவையில்லை. துடிப்புள்ள குஜராத் பற்றி கூறுகிறீர்கள். அங்குள்ள வளர்ச்சிகளையெல்லாம் அடுக்கடுக்காக கூறுகிறீர்கள். ஆனால், சமீபத்தில் சி.ஏ.ஜி.யின் அறிக்கை, “குஜராத்தில் பிறக்கும் ஒவ்வொரு மூன்று குழந்தைகளிலும், ஒரு குழந்தை எடை குறைவாகப் பிறக்கின்றது” என்று கூறுகிறது.

கர்ப்பிணி வாடகைத் தாய்களின் எண்ணிக்கை குஜராத்தில்தான் அதிகம். வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்துக்கு இடம் இல்லை என்பது சமீபத்திய ரிப்போர்ட்.

குஜராத்தில் பெரும்பாலான உள்துறை அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள் என்று லோக் ஆயுக்தா கூறுகிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு என்ன வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறீர்கள்? என்ன சக்திப்படுத்துவதைப் பற்றி பேசுகிறீர்கள்?

வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி ரொம்ப லாவகமாகக் கூறுகிறீர்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், முதலாளித்துவவாதிகளுக்கும்தான் குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை.

வளர்ச்சி என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கியது என்கிறீர்கள். இது எந்த அளவு உண்மை என்று பார்ப்போம்.

குஜராத்தில் உள்ள அஹமதாபாத் அருகில் உள்ள தந்த்வாடா கிராமத்தில், தண்ணீர் பிடிக்கும் இடத்தில் ஜாதி வாரியாக எழுதி வைத்திருக்கிறது மோடியின் அரசு. என்னவென்றால், எந்தெந்த ஜாதி எந்ததெந்த  நேரத்தில் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று. இதுதான் குஜராத்தின் உண்மை நிலை.

சச்சார் கமிட்டி அறிக்கையைப் படிக்க வேண்டும் என்று மட்டும் கூறுகிறீர்கள். ஆனால், சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அதை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு வார்த்தை பாரதிய ஜனதாவின் தலைவர்களிடம் இருந்து வந்தது கிடையாது என்பதுதான் உண்மை.

சுவாமி விவேகானந்தர் சொன்ன, ‘லட்சிய புருஷர்’ மோடி என்று கூறுகிறீர்கள். கலவர வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் மோடியை “நவீன நீரோ” என்று கடுமையாக விமர்சித்தது. இதில் எது உண்மை என்று மக்களே முடிவு பண்ணட்டும்.

நன்றி தூது ஆன்லைன்

1 கருத்து:

  1. தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய மண்ணின் மைந்தர்கள் 3000 க்கும் மேற்பட்டோர் காரின் குறுக்கே வந்த நாய் என்றால் ; கைபர் கணவாய் வழியாக வந்தேறியாக வந்த , ஆங்கிலேயனிடம் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று எழுதிகொடுத்த ஈனப்பிறவிகளின் வாரிசான மோடியோடு எதனை ஒப்பிடுவது ?

    பதிலளிநீக்கு