Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 17 நவம்பர், 2012

என் 11 மாத குழந்தை செய்த பாவம் என்ன?


காஸா : பலஸ்தீனர்களின் சுயாட்சி பகுதியான காசாவின் மீது இஸ்ரேல் கடந்த இரு நாட்களாக நடத்தியஅதி தீவிர வான் வழி தாக்குதலால்  மக்கள் வெளியே வராமல் காஸா வெறிச்சோடி கிடக்கிறது. 

இரு தினங்களுக்கு முந்தைய இரவில் பலஸ்தீனம் காசா பகுதியில் சுயாட்சி புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவான இஸ்ஸத்தீன் கஸ்ஸாமின் தலைவர் அகமது ஜாப்ரி பயணம் செய்த வாகனத்தின் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலில் அஹம்து ஜாப்ரி, அவரது மகன், பிபிசி ஊடகவியலாளரின் மகன் 11 மாத பாலகன் உமர் (படத்தில் உள்ள குழந்தை) உள்ளிட்ட 10 நபர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேலின் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இரண்டு நாட்களாக ஹமாஸ் அரசின் பாராளுமன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களின் மீதும் இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதலில் 20 நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பான்மையினர் அப்பாவிகள் என்றும் கூறப்படுகிறது. அதற்கு பதிலடியாக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 3 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளனர்.

பலஸ்தீன மக்களை அகதிகளாக்கி உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அழிப்பதையே தம் இலக்காக கொண்டு செயல்பட்ட ஹமாஸ் சில வருடங்களாக காஸாவை அமைதியாக ஆட்சி செய்து கொண்டு வரும் நிலையில் இஸ்ரேல் இத்தாக்குதலை தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 11 மாத பாலகன் உமரி தந்தை மஷ்ராவி நிருபர்களிடம் " தீவிரவாத இலக்குகளை குறி வைத்து சுடுவதாக இஸ்ரேல் கூறுகிறது. என் 11 மாத குழந்தை செய்த பாவம் என்ன? அதை இஸ்ரேல் சொல்ல முடியுமா" என்று கதறி அழுதார்.

நன்றி இந்நேரம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக