Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 28 நவம்பர், 2012

நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறுகிறார் ..


நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறுகிறார் ..

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள்தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.


மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது? 

ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. 

அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்ததுஇமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ்இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். 

யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள்தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. 

ஊடகங்களின் சிறுபான்மையினர் வெறுப்பு!


சிறுபான்மையினரில் குறிப்பாக முஸ்லிம்களை இந்திய ஊடகங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தீவிரவாதிகளாக,குற்றச் செயல்களை செய்பவர்களாக,பழிபாவத்துக்கு அஞ்சாதவர்களாககாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன.

திரைப்படங்களில் வில்லன்கள்,நாட்டுக்கு எதிரான செயல்களை செய்பவர்கள்,குண்டுவைப்பவர்கள்மக்களுக்கு எதிரான சதி செயல் செய்பவர்கள் முஸ்லிம்கள் எனக் கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளன .இந்துத்துவ தணிக்கையாளர்கள் இத்தகைய செயல்கள் சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனபது குறித்து சிந்தனையின்றி அனுமதித்து வருவது இன்றும் தொடர்கிறது! 

பத்திரிகை ஊடகங்கள் என்ன செய்கின்றனஎன்றுபார்த்தால் அவைகளும் முஸ்லிம்களிடம் தொடர்ந்து வெறுப்புணர்வை விதைக்கும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன!

சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ளவர்களின் சிறு குற்றச் செயல் -களையும் பூதாகரமாக்கி வருகின்றன. முஸ்லிம் ஒருவர் ஒரு அடிதடி விவகாரத்திலோ,கொலை,திருட்டு போன்ற செயல்களிலோ ஈடுபட்டுவிட்டால் அவரது பெயரை போட்டும்குடும்பத்தையும்சார்ந்துள்ள கட்சி அல்லது அமைப்பையும் விரிவாக குறிப்பிட்டு செய்தியை வெளியிடும் ஊடகங்கள்அதே தவறை செய்யும் இந்துக்களிடம் மென்மையான அணுகுமுறையுடன் நடந்துகொண்டுகுற்றம் குறித்த செய்தியை வெளியிடுவதை காணலாம்! 

அதிலும் குற்றவாளி உயர்சாதி இந்துவாக இருந்தால் அவரை பாதுக்காக்கும் வகையிலும் குற்றத்தில் இருந்து காப்பாற்றும் வகையிலும் செய்தியை வெளியிட்டும்ஏதோ அவர் தெரியாமல் அக்குற்றத்தை செய்துவிட்டார் என்பதுபோல செய்தியை வெளியிடுகின்றன! 

எங்கேனும் யாரேனும் ஒரு தீவிரவாத செயலையோ,குண்டுவெடிப்பு போன்ற செயலையோ செய்துவிட்டால்உடனடியாக ஊடகங்கள் "புலனாய்வு புலியாக" மாறிசெய்தது இந்தியன் முஜாஹிதினாஅல்குய்தாவாஅல் உம்மாவாஐ.எஸ்.ஐ தொடர்பாபாகிஸ்தானின் சதியா?என்று பரபரப்பான செய்தியைப் போட்டு முஸ்லிம்களே செய்தார்கள் எனபது போன்ற கருத்தை உருவாக்கிமுஸ்லிம்கள் எல்லோரையும் குற்றவாளிகளாக பார்க்கும் நிலையை ஏற்படுத்த தவறுவதில்லை!

குண்டுவெடிப்புக்கு, " சன் சனாதன் அமைப்போ" ," அபினவ் பாரத்தோ" (பிரக்யா சிங் இந்த அமைப்புதான்) " விஷ்வ ஹிந்து பரிசத்தோ, "சிவசேனாவோ," "ஆர்.எஸ்.எஸ்.அமைப்போ",பெண்களுக்கும் ஆயுதபயிற்சி தந்துதுப்பாக்கி பயிற்சி தந்துவரும் " முக்திவாகினி" போன்ற எந்த அமைப்பு வேண்டுமானாலும் குண்டு வைத்திருக்கலாம்நாச வேலை செய்து இருக்கலாம் என்று...... எந்த ஊடகமும் குறைந்த பட்ச சந்தேகத்தைக் கூட செய்தியாக வெளியிடுவதில்லை! 

உடனேதீவிரவாதி,குண்டு வைத்தவன் எப்படி இருப்பான் என்று தனது கற்பனைக்கு தகுந்ததுபோல தாடி,தொப்பி வைத்தும் படம் போட்டு காட்டத் தவறுவதில்லை! இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் இந்துத்துவ வெறியர்களாலும்பாசிச சக்திகளாலும் நடத்தப்பட்டவைகளே என்பதை சரியாக கண்டுபிடித்த " ஹேமந்த் கர்கரே" மும்பையில் கொல்லப் பட்டார்! அவரது கொலையில் இந்துத்துவ சக்திகள் பாதுகாக்கப் பட்டனர்! (அவர் அணிந்த குண்டுதுளைக்காத கவச உடைகூட காணமல் செய்யப்பட்டது உண்மை வெளியாகிவிடும் என்பதால்)

இந்துத்துவ தீவிரவாதிகளும்பாசிச சக்திகளும் முஸ்லிம்கள் பெயரில் குண்டுவைத்து முஸ்லிம்களை குற்றவாளிகளாக்கிவெகுஜன மக்களிடம் வெறுப்புணர்வை தோற்றுவித்து,முஸ்லிம்களை கொன்று குவிக்கவும் அவர்களது சொத்துக்களை சூறையாடவும்,அவர்களது ஜீவாதார உரிமைகளை பறிக்கவும் செய்யப்பட்ட இதுபோன்ற செயல்களால் இந்தியாவில் ஏற்பட்ட மதக்கலவரங்கள் ஏராளம்! உயிரிழப்புகளும் ஏராளம்கொள்ளை அடிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடமைகள் ஏராளம்!! 

மதக் கலவரங்களில் உயிரிழந்தவர்கள் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் எனபது மற்றொரு கசப்பான உண்மையாகும்! 

இத்தகைய உண்மைகளை நடுவு நிலையோடு சொல்லவேண்டிய ஊடகங்கள்சொல்ல முன்வருவதில்லை! அதுமட்டுமின்றிபாசிச,இந்துத்துவ சக்திகளின் இந்த கொடுமைகளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டுஇந்தியாவின் அமைத்துக்கும்,சமய பொரிக்கும்,ஜனநாயகத்துக்கும் முன்னேற்றத்துக்கும்பொருளாதார சீர்கேட்டுக்கும் துணைபோகும் அவலத்தை செய்து வருகின்றன! 

ஒரு மனிதனின் சட்டைப்பையில் இருந்துஅவனுக்கு தெரியாமல் பணத்தை எடுத்தாலே... அது " பிக்பாகெட்" என்றும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் சொல்லும் இந்தியாவில் மதக் கலவரங்கள் என்ற பெயரில் முஸ்லிம்களின் சொத்துகளைகொள்ளை அடித்தசூறையாடிய யாரையாவது தண்டித்ததாககுற்றவாளிகளை பிடித்ததாகஅவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்ததாக கேள்விப்பட்டது உண்டாநான் இன்றுவரை கேள்விப்பட்டதே இல்லை!

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள் எங்கு போனதுயாரிடம் உள்ளதுஎன்று ஊடகங்களோ,புலனாய்வு செய்யும் மத்திய,மாநில போலீசாரோ விசாரித்து,உண்மையை மக்களிடம் சொன்னது உண்டாசெய்தியாக வெளியிட்டது உண்டாசொல்லுங்கள்! நானறிந்த வரையில் இல்லை என்பதுதான் உண்மைநிலையாகும்!!

மதக் கலவர தடுப்பு மசோதாவை, "இந்து தீவிரவாதிகள்" எதிர்ப்பதன் காரணத்தை இதிலிருந்து நீங்களே புரிந்துகொள்ள முடியும்! 

சரிஏன் இந்துத்துவ வாதிகள்,பாசிச சாதிகள் முஸ்லிம்களை அழிக்கவும்வெகுஜன மக்களிடம் அவர்களை எதிரியாக காட்டவும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்என்ற கேள்வி எழுகிறதல்லவா?

மின்னஞ்சல் மூலமாக
javith basha mohamed salih

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக