Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 21 நவம்பர், 2012

கசாபுக்கு தூக்கு : "தொழுகை நிலையங்களில் குண்டு வைப்பது முஸ்லிம்கள்" -தா.பாண்டியன் விஷமம்!


அஜ்மல் கசாப் குறித்த கேள்விக்கு பதிலளித்த, தா.பாண்டியன் "தொழுகை நிலையங்களில் குண்டு வைக்கும் முஸ்லிம்களுக்கு இதுபோன்ற தண்டனைகள் தேவை" என்று கூறி முஸ்லிம் சமூகத்தின் மீது “பொய்ப்பழி“ சுமத்தி விஷத்தை வித்திட்டுள்ளார்.
இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலடப்பட்ட அஜ்மல் கசாப் குறித்து "புதிய தலைமுறை தொலைக்காட்சியில்" தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், இந்த விஷமக்கருத்தை பதிவு செய்தார்.

அதாவது, முஸ்லிம்கள், தங்கள் மத தொழுகை நிலையங்களிலேயே குண்டுவைத்து மக்களை கொன்று குவிப்பதாக கூறியுள்ளார்.
கசாப் குறித்து அவர் பதில் சொல்லியிருந்தால் அதில் தவறில்லை.
ஆனால் உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்கது.
தொழுகை நிலையங்களில் குண்டு வைத்தது "ஹிந்துத்துவ தீவிரவாத கும்பல்" என்று வெட்ட வெளிச்சமாக பல வழக்குகளில் தெளிவாகிவிட்ட பின்பும், கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பில் உள்ள தா.பாண்டியனுக்கு தெரியாமல் போனது ஏன்?
தொழுகை நிலையங்களான மசூதிகளில் மட்டுமல்ல, ரயில் நிலையங்களிலும் - ஓடும் ரயில்களிலும் குண்டு வைத்த "ஹிந்துத்துவ தீவிரவாதம்" பற்றி பேச இந்த நாட்டில் எந்த கட்சிகளும் தயாரில்லை, என்பது வேதனையான விஷயம்.
பா.ஜ.க.வாக இருந்தாலும், காங்கிரசானாலும், கம்யூனிசம் பேசும் கட்சிகளானாலும் முஸ்லிம்கள் விஷயத்தில் எப்படி நடந்துக்கொள்கிறார்கள், என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக