Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 18 நவம்பர், 2012

இறைச்சி ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்....


சென்னை ரயில்களில் வந்த அப்பெட்டிகளைப் பார்த்தபோது,அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள்  நாற்றம் எடுக்க அழுகிய நிலையில் இருந்தது இறைச்சி.அடுத்தடுத்த நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்கு ரயில் பெட்டிகளைச் சோதித்த போது மேலும் பல பெட்டிகள் சிக்கின.இப்படிக் கைப்பற்றப்பட்ட இறைச்சியின் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா ? ஒன்ற டன்.எங்கிருந்து வருகிறது இந்த இறைச்சி என்பது குறித்து அதிகாரிகளுக்கு இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை.ஆனால் அது எங்கே போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது...உங்களுடைய வயிறு.


ஆமாம்,தமிழகத்தில் ஆட்டிறைச்சியின் விலை 400 ரூபாயைத் தாண்டிவிட்டது.வெளி மாநிலங்களில் இருந்து அது 200 ரூபாய்க்குள் கிடைத்தால் லாபம்தானே? இந்த லாப வெறிதான் சாலையோர உணவகங்களில் இருந்து பெரிய உணவு நிறுவனங்கள் வரை இது போன்ற சட்டத்துக்குப்புறம்பான,சுகாதாரமற்ற இறைச்சியை வாங்க வைக்கிறது.

இறைச்சி சாப்பிடும்போது நம்மை நாமே எப்படி பாதுகாத்துக்கொள்வது?

பொதுவாக ஆட்டுத்தொடையில் வெட்டப்படும் இறைச்சியை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.அதற்கு மேல் பதப்படுத்தாமல் வைத்திருந்தால்,இறைச்சி அழுக ஆரம்பித்துவிடும்.குளிர் சாதனப் பெட்டிகளில் மைனஸ் 15 முதல் மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இறைச்சியை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.பொதுவாக ஆடுமாடு உடலில் கிளாடீரியம்,ஸ்டப்லாகாகஸ்,எக்கினோகாகஸ்,ஈகோலி,ஆஸ்காரிஸ் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன.ஆடு மாடு இறந்ததும் இவை அதிக அளவில் பல்கிப் பெருகி அதைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன.இதனால் இறைச்சி அழுக ஆரம்பிக்கிறது.மேலும்,பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம்.எனவே,கால்நடைகளை வெட்டிய அடுத்த சில மணி நேரங்களில் சமைத்துச் சாப்பிடுவதுதான் நோய்க் கிருமிகளைத் தவிர்க்க ஒரே வழி.கெட்டுப்போன இறைச்சியில் உள்ள கிருமிகள் மனித உடலுக்குள் செல்லும்போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.ரத்தக்குழாய்கள் வழியே சென்று மூளையைப் பாதிக்கும்.ஹைடாடிட் என்ற ஒட்டுண்ணியானது கல்லீரலுக்குச் சென்று அங்கு கட்டியை உருவாக்கும்.நுரையீரலை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச்சனை,இடைவிடாத இருமல்,சளி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.தசைகளில் தங்கும் கிருமிகள் தீராத  வலியை ஏற்படுத்தும்.இது தவிர வயிற்றுப்போக்கு,வாந்தி போன்றவையும் ஏற்படலாம்.பாதுகாப்பு இல்லாத இறைச்சியை ஈக்கள் மொய்க்கும் போது காலரா போன்ற நோய்கள் ஏற்படும்.

பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது?

1.நீங்கள் செல்லும் இறைச்சிக்கடை தினந்தோறும் திறக்கக் கூடியதா?

2.அந்தக் கடைக்கு அரசு உரிமம் உள்ளதா?

3.கடையில் சுத்தமான சூழல் உள்ளதா?

4.இறைச்சி பக்கத்தில் நிற்கும்போது மொஞ்சை(கவுச்சி)வாடை அடிக்கக் கூடாது.

5.இறைச்சி நிறம் மிகவும் சிவப் பாகவே,மிக அதிகம் வெளுத்துப் போயோ இருக்கக் கூடாது.இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

6.கறியைத் தொட்டுப் பார்த்தால் ஜில் என இருக்கக் கூடாது.அப்படி ஜில் என இருந்தால் அது குளிர்பதனப் பொட்டியில் வைத்த முந்தைய நாள் இறைச்சியாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக