Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 20 நவம்பர், 2012

மார்க்க கல்வி - உலக கல்வி, என பிரித்து பார்க்கக்கூடாது : ஜஸ்டிஸ் சித்தீகி

கல்வி விஷயத்தில் "மார்க்க கல்வி" என்றும் "உலக கல்வி" என்றும் பிரித்துப்பார்ப்பது, முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். இதனால் முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார், ஜஸ்டிஸ் எம்.ஏ.எஸ்.சித்தீகி. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்கள்
குறித்து 156 இடங்களில் சொல்லப்பட்டுள்ள "திருக்குரானில்" வாழ்வியல் சட்ட திட்டங்களையும் - நெறிமுறைகளையும் 756 இடங்களில் இறைவன் குறிப்பிட்டுள்ளதாக சொன்ன அவர், "பெண் கல்வி" குறித்தும் விரிவாக பேசினார். முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்து, நேற்று டெல்லியில் நடந்த "முஸ்லிம் கல்வி குறித்த தேசிய கருத்தரங்கத்தில்" பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. வடக்கிழக்கு மற்றும் வடமாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் சமூக மக்கள் வாழ்ந்து வந்தபோதிலும், அவர்களின் பின்தங்கிய நிலைக்கு "கல்லாமை" தான் முக்கிய காரணம், என்று பேராசிரியர் அக்தருல் வாஸிஃ, தெரிவித்தார். மேகாலயா மாநில விஞ்சானம் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர், டாக்டர் மஹ்பூபுல் ஹக் பேசுகையில், அஸ்ஸாமில் முஸ்லிம்கள் அகதி முகாம்களில் தஞ்சம் புகும் அளவுக்கு நிலைமை சென்றதற்கு முக்கிய காரணம் "கல்வி விழிப்புணர்வின்மை" தான் என்று கூறிய அவர், அஸ்ஸாம் மக்களின் கல்விக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில்,டெல்லி மைனாரிட்டி கமிஷன் சேர்மன் சப்தர் அலி, முஷாவரத் கமிட்டியின் அபூபக்கர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக