Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 13 ஜூன், 2013

அத்வானிக்கும், மோடிக்கும் என்ன வித்தியாசம்?

பிரதமர் வேட்பாளருக்கான பதவி நரேந்திரமோடிக்கே அளிக்கப்படும் என்பது கடந்த மார்ச் மாதம் நடந்த பா.ஜ.கவின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் கிட்டத்தட்ட உறுதிச்செய்யப்பட்டது. கோவாவில் நேற்று முடிவடைந்த பா.ஜ.கவின் 2 தினங்கள் கொண்ட தேசிய செயற்குழு கூட்டத்தின் இறுதியில் கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பிரச்சாரக்குழுவின் தலைவராக மோடி இருப்பார் என்று அறிவித்ததோடு  ஊடகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடன் இணைந்து சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் மோடிக்கு எதிராக எழுப்பிய எதிர்ப்புக்குரல்கள் அடங்கிப்போனாலும், அவற்றை வலுவிழக்கச் செய்து தற்போதைய கட்சியின் தீர்மானத்தில் உண்மையான வெற்றியை ஈட்டியது ஆர்.எஸ்.எஸ் ஆகும்.
ஆர்.எஸ்.எஸ், மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதெல்லாம் ஊடகங்களில் தொடர்ந்து மோடியின் பெயர் இடம்பெறவேண்டும் என்ற தந்திரமே தவிர வேறொன்றுமில்லை என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். மோடிக்கு மதச்சார்பற்ற இமேஜ் கிடையாது என்பதால் அத்வானியும் அவரது சகாக்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பா.ஜ.கவின் தேசிய தலைமையிலும், பல மாநிலங்களின் தலைமை பொறுப்புகளிலும் வெட்ட வெளிச்சமான பதவிக்கான நாற்காலிச் சண்டையும், அதிகார மோகமுமே காரணம் ஆகும்.
இந்திய அரசியலில் பா.ஜ.கவுக்கு வளர்ச்சியை உருவாக்கியது அத்வானி நடத்திய ரதயாத்திரை அல்லவா? தீவிர ஹிந்துத்துவாவின் முகமூடியாக அத்வானி இருந்தபோது, வாஜ்பாய் மிதவாத முகமூடியாக அடையாளம் காட்டப்பட்டார்.அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு சமமானது. சிறுபான்மை விரோதமும், வன்முறைகலந்த தீவிர தேசியவாதமும், வகுப்பு வாதமும் கொள்கையாக கொண்ட கட்சியால் மதசார்பற்ற முகமூடியை அணிந்து வெகுதூரம் பயணிக்க இயலாது என்பதை பா.ஜ.க புரிந்துகொண்டது. ஆகையால் அத்வானியை விட தீவிர ஹிந்துத்துவா கொள்கையில் அதிக ரேட்டிங்கை கொண்ட மோடி என்ற தீவிரவாத ஹிந்துவை தோளில் சுமக்க தீர்மானிக்கப்பட்டது.
நிதீஷ்குமாரின் எதிர்ப்புகள், மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மாயா கோட்னானிக்கு கிடைத்த ஆயுள் தண்டனை, தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்துவருவது உள்ளிட்ட எதிர்ப்பு சூழல்களை முறியடிக்க மோடியின் தீவிரவாத ஹிந்துத்துவா இமேஜில் அபயம் தேடியுள்ளது பா.ஜ.க.இதற்கு 3-வது தடவையாக குஜராத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு கிடைத்த தொடர் வெற்றியும், அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றியும் மோடிக்கு சாதகமாக மாறின. யாருடைய மதசார்பற்ற சான்றிதழும் தேவையில்லை. கட்சியில் மதசார்பற்றவர், மதவாதி என்ற பிரிவினை கிடையாது’ என்று பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் ஹுஸைன் கூறியுள்ளார்.
இதிலிருந்து அத்வானியை விட மோடி மதசார்பற்றவர் என்பதையும், மோடியை விட அத்வானி தீவிர ஹிந்துத்துவா வாதி என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைத்தான் நாட்டு மக்களுக்கு பா.ஜ.க அளிக்கும் விளக்கமாகும்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக