Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 18 ஜூன், 2013

நமதூரில் வாடகை வீடா .....?

வீட்டு வாடகை

ஊரு கட்டுப்பாடு அதன்மூலம் ஒற்றுமையின் வெளிபாடு இவை அனைத்தும் காற்று பிடிங்கிய  பந்துபோல சுருங்கி கொண்டு வருகிறதை இன்றைய சூழ்நிலை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.

குமுறி எறியும் எரிமலையின் மீது எரிகர்க்களை வீசுவது போல வீடு இழப்பவர்களுக்கு
மேலும் துன்பத்தை விளைவிக்கும் வண்ணம் வாடகை வீடு விலை ஏற்றம் அதிகமாகி வருகிறதை நாம் வெறுத்தாலும் வெளிச்சத்திற்கு வரும் உண்மையாகிறது.

நமதூரில் ஆற்றங்கரை வீடு அப்புரவு படுத்தும் பணிக்கு கால அவகாசத்தை அரசு நிர்னைத்து உள்ளதை தாங்கள் அறிந்ததே! இதனால் அடுத்த கட்டமாக பதிக்க படுபவர்கள்  வாடகை வீடு பார்க்கும் பணிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் வாடகை வீடும் விலை அதிகமாக உயர்ந்து உள்ளது என்று குமுறுகின்றனர். 

இறக்க மனசு எள்ளளவு கூட இல்லாமல் இருக்கும் ஒரு சில மக்களை நினைக்கும் பொழுது ஈகதிர்க்கும் இரக்கத்திற்கும் சொந்தமான இஸ்லாமிய மார்க்கம், அவர்களது ஆள் மனதில் விட்டு விலகும் அபாயகரமான நிலைக்கு வந்துவிடுவார்களோ! என்று நமது உள் மனசு அபாய எச்சரிக்கை மணி அடிக்கிறது.

அவர்கள் குமுறும் வார்த்தைக்கு நமது பகுத்தறிவு பதில் தரவில்லையானால்? நாளை இந்த நிலைதான் நம் அனைவருக்கும் தொடர்கதையாகிவிடும்  என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்று ஆற்றங்கரை வீடுகளில் கைவைக்க துடிக்கும் இந்த அரசுநாளை நமதூர் நெடுஞ்சாலை தான் அடுத்த  குறி! என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.

சிறிக்க தெரிந்த மக்களுக்கு சிந்தக்க தெரியவில்லை! சிந்திக்க தெரிந்த மக்களுக்கு செயல்படுத்த தெரியவில்லை என்று நாளைய வாரிசுகள் நம்மை இழிக்கும் முன் அனைத்து ஜமாத்துக்களும்இயக்கங்களும் ஒன்றுபட்டு இறைவனின் பொருத்தத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வரக்கூடிய பாதிப்பில் இருந்து நமதூர் மக்களை காக்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் குமுரலாக உள்ளது. 
உடைவாள் உடைந்தாளும் உள்ளம் உடையாத உருதியோடு இருப்போம் இன்ஷா அல்லாஹ்...
நமது நிருபர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக