Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 20 ஜூன், 2013

பராஅத்தும் மத்ஹபுகளும்...

அஸ்ஸலாமு அல்லைக்கும் 
பிஸ்மில்லாஹ் ...
        நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது
        நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,
             மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
         மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
           ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
         பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மின்னஞ்சல் மூலமாக
ஒலி முஹம்மது இலியாஸ்

36 கருத்துகள்:

  1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
    அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

    பதிலளிநீக்கு
  2. ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:

    நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

    நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).

    ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:

    உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).

    நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.

    நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).

    மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.

    விடுபட்ட நோன்புகளை நோற்றல்:

    ‘எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

    விடுபட்ட ரமழான் மாத நோன்பை ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு இந்த செய்தியிலிருந்து அனுமதி கிடைக்கிறது என்பதை அறியமுடிகிறது. மார்க்கம் கூறிய காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விடும் போது அல்லது குறிப்பாக பெண்கள் மாத விடாய், பிள்ளைப் பேறு ஆகியவைகளின் மூலம் நோன்பை விடும்போது, அதனை ஏனைய காலங்களில் நோற்க வேண்டும்.

    ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:

    ‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).

    உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

    ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடான பித்அத்தாகும்.....

    ஷஃபானின் 15 வது தினத்தை மட்டும் சிறப்பிப்பது நல்லதன்று!.....

    Regards,
    Mohamed Adam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழுத்தம் திருத்தமாக தெளியுப்படுத்துகள் Mohamed Adam அவர்களே!!

      ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் மட்டும் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் மட்டும் நோன்பு வைப்பதும் "பித்அத்"(வழிகேடு)ஆகும்.

      அழுத்தம் திருத்தமாக தெளியுப்படுத்துகள்.

      பித்அத் என்றால் என்ன?
      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால், அது நிராகரிக்கப்படும். (புகாரீ)

      மற்றொரு ஹதீஸ் இவ்வாறு எச்சரிக்கின்றது:
      உரைகளில் சிறந்தது இறைமறை; நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறை; செயல்களிலேயே தீயது (மார்கத்தின் பெயாரில்) புதிதாக உருவாக்கப்படுவதுதான். புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்) ஒவ்வொன்றும் தவறான வழியாகும்; தவறான ஒவ்வொரு வழியும் நரகத்திற்குச் செல்லும். (முஸ்லிம், நஸயீ)

      by
      ABU SAALIGA

      நீக்கு
  3. Nice Adam , keep it up ...

    இதை பார்த்ததும் ஒன்று நாபகதுக்குவருகிறது : சைத்தான் நாம் செய்யும் அமலை / நன்மையை தடுக்கவே செய்வான் அல்லாஹ் நம் அனைவரையும் தீமையை விட்டு தடுப்பானாக !

    by Samuthaaya nalam virumbi

    பதிலளிநீக்கு
  4. பித்அத்தை வென்றெடுப்போம் இன்ஷா அல்லாஹ்]

    பாவியாக்கும் பராஅத் இரவு

    சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம்
    வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல்
    கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க
    என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன்
    கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக
    வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

    இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு
    , வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல்
    அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக்
    குழம்பு வைப்பார்கள்.

    மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல்
    பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக்
    கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில
    வீட்டினர் தங்கள்
    ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள்.
    வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக்
    குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

    தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில்
    (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன்
    ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத
    வேண்டுமாம். எதற்காக?

    முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்

    இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட
    ஆயுளுக்காகவும்

    மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம்
    மூன்று யாஸீன் ஓதப்படும்.

    அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும்
    இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும். காரணம்
    ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு
    , இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர
    முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட
    தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத்
    இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த
    மார்க்க அறிஞருக்கு?

    அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும்.
    எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம். வேறு சில
    ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும்
    உண்டு.

    இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல்
    ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட
    மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த
    மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற
    இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை.
    பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

    ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும்
    இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட
    தொழுகையும், ஷஅபான் மாதத்தில்
    நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட
    தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும்.
    இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை)
    தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

    (இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற
    புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)
    மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால்
    உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும்
    ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான
    அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும்
    அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

    (இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல்
    பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத்
    இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும்
    கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்)
    அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர்
    ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில்
    கூறப்பட்டுள்ளது.

    மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன்
    பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும்
    பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை.
    மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ்
    இவர்களைக் காப்பாற்றுவானாக!

    பதிலளிநீக்கு
  5. பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?


    ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும்.
    ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள்
    நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள்
    கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது .

    (நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத்
    தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

    ஏன் இந்த சிறப்பு?

    அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான்
    சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல்
    வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக
    மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி
    , வித்தியாசமான முறையில்
    அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத்
    அறிஞர்கள்.

    இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத்
    இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான்.
    அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான
    இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.

    மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும்
    சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள்
    செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில்
    சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த
    அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள்
    செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா
    ? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள்
    அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத்
    இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற
    பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும்
    பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி
    , பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப்
    பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

    இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும்
    அனைத்து செய்திகளும்
    பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை.
    இக்கருத்து அவர்களின் மத்ஹப்
    நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள்
    தவறாக விளங்கியவையாகும்.


    முதல் ஆதாரம்

    தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம்
    நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம்
    எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான
    காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

    அல்குர்ஆன் 44:2-4

    இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத்
    இரவு தான் என்பது இவர்களின் வாதம்.

    திருக்குர்ஆனை பொறுத்த
    வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ்
    விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள
    பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும்
    வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

    மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம்.

    (அல்குர்ஆன் 97:1)

    அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
    அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும்
    வசனம் விளக்குகின்றது.

    இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது)
    மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத்
    தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை)
    பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில்
    நோன்பு நோற்கட்டும்.

    (அல்குர்ஆன்2:185)

    இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு
    என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக்
    குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல
    என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத்
    இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச்
    சம்பந்தமுமில்லை.

    இரண்டாம் ஆதாரம்

    ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில்
    நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில்
    நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன்
    வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர்
    உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன்.
    சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின்
    துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர்
    உண்டா? நான்
    அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக்
    கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள்
    கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378

    இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட
    ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா
    என்பவர் இடம் பெறுகிறார். இவர்
    ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம்
    அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

    அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ்
    எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச்
    செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின்
    மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள்
    நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம்
    அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றாம் ஆதாரம்

      அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு
      , படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல்
      வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற
      இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம்
      இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப்
      கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின்
      எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை)
      மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

      அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

      நூல்: திர்மிதி 670

      இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன்
      அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர்
      என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை.
      அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின்
      அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ
      கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான
      செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த
      திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக்
      காட்டியுள்ளார்கள்.

      நீக்கு
  6. ஷஅபான் பதினைந்தாம் நாள் நோன்பு:

    நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் பதினைந்தாம் நாள் நோன்பு வைக்குமாறு சொன்ன ஹதிஸும் இடம் பெற்றுள்ளது, இதன் படி அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாத்தினார்கள் நோன்பு வைத்து கொண்டு இருக்கிறார்கள், தவறு என்று சொல்ப்பவருக்கு எந்த ஒரு அதிகாரம் கிடையாது,

    நபி (ஸல்) அவர்கள் "என்னிடம்' அல்லது "நான் செவியுற்று கொண்டிருக்க மற்றொருமனிதரிடம்' "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில்(பதினைந்தில்) நோன்பு நோற்றீரா?'' என்றுகேட்டார்கள். நான், "இல்லை' என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீர் (ரமளான்) நோன்பைமுடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள் இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இமாம் முஸ்லிம்(ரஹ்)

    சில ஹதிஸ்களில் இறுதிபகுதியும் இடம் பெற்றுள்ளது என்பதை மறுக்க வில்லை, நடுப்பகுதி என்றும் உள்ளது, அதை எடுத்து செயல்படகூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை, ஏனென்றால் அதுவும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக தான் இடம் பெற்றுள்ளது.




    விமர்சனமும் விளக்கமும்:


    سرر என்பது ஆரம்ப பகுதியா?நடுப்பகுதியா?இறுதிப்பகுதியா? எது சரி??

    2607.
    'Imran b. Husain (Allah be pleased with them) reported Allah's Messenger (may peace he upon him) having said to him or to someone else: Did you fast in the middle of Sha'ban? He said: No. Thereupon he (the Holy Prophet) said: If you did not observe fast, then you should observe fast for two days.
    2608.
    Imran b. Husain (Allah be pleased with them) reported that Allah's Apostle (way peace heupon him) said. to a person: Did you observe any fast in the middle of this month (Sha'ban)? He said: No. Thereupon the Messenger of Allah (may peace be upon him) said: Fast for two days instead of (one fast) when you have completed (fasts of) Ramadan.
    2609.
    'Imran b. Husain (Allah be pleased with them) reported that the Apostle of Allah (may peace be upon him) said to a person: Did you observe fast in the middle of this month. i. e. Sha'ban? He said: No. Thereupon he said to him: When it is the end of Ramadan, then observe fast for one day or two (Shu'ba had some doubt about it) but he said: I think that he has said: two days.
    2610.
    This hadith is narrated by 'Abdullah b. Hani b. Akhi Mutarrif with the same chain of transmitters.

    باب صوم سرر شعبان
    حدثنا هداب بن خالد حدثنا حماد بن سلمة عن ثابت عن مطرف ولم أفهم مطرفا من هداب عن عمران بن حصين رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال له أو لآخر أصمت من سرر شعبان قال لا قال فإذا أفطرت فصم يومين

    பதிலளிநீக்கு
  7. سرر என்ன அர்த்தம்?

    இதில் அறிஞர்களிடைய கருத்து வேறுபாடு உள்ளது, ஆனால் பெரும்பான்மையானோர் இதற்கு நடுப்பகுதி தான் என்று மொழியாக்கம் செய்து உள்ளார்கள், ஏனென்றால் முஸ்லிம் இரண்டும் வேற வேற இடத்தில் பதிவு செய்து உள்ளார்கள், ஆனால் நீங்கள் இணையதளத்தில் எந்த ஒரு இணையதளத்திலும் சென்றாலும் சரி நீங்கள் முஸ்லிம் எண் 2607-யை سرر எனற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இதற்கு سرر மிடில் என மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது,

    இமாம் நவவி(ரஹ்) அவர்கள் سرر எனற் வார்த்தை நடுப்பகுதி என்று கூறியுள்ளார்கள்

    மேலும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் கூறுகிறார்கள்

    அபூ உபைத்(ரஹ்) سرر என்ற சொல்லுக்கு மறைதல் என்று பொருள் அதாவது சந்திரன் மறைக்கிற நாள் 28ம் நாள், 29ம் நாள், 30 ம் நாள் குறிக்கும்,

    அவ்ஸாயி(ரஹ்) மற்றும் அப்துல் பின் ஹஜிஸ்(ரஹ்) அவர்கள் سرر என்ற சொல்லுக்கு மாதத்தின் ஆரம்ப பகுதி எனப் பொருள் கொண்டார்கள் என இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    அல்காத்தாபி(ரஹ்) அவர்கள் மற்றும் பலர் سرر என்ற சொல்லுக்கு மாதத்தின் நடுப்பகுதியை தான் குறிக்கும்.

    இந்த மூன்றையும் குறிப்பிட்டு இதில் பெரும்பான்மையோனோர் நடுப்பகுதியை தான் ஆதாரவு அளித்துள்ளார்கள் என இமாம் அபூதாவுத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், மேலும் سرر என்பதற்கு பன்மையில் தொப்புள்(உடலின் மையப்பகுதி) என்று அழைக்கப்படும், எனவே நடுப்படுதி தான் மிகவும் பலாமானது எனப் பெரும்பான்மையோனோரால் ஊக்கு விக்கப்படுகிறது, மேலும் பெரும்பான்ம்மையோனோர் இறுதி பகுதியை ஆதரிக்க வில்லை ஏனென்றால் ஷஅபான் இறுதிப் பகுதியில் நோன்பை வைக்க தடைச் செய்யப்பட்டுள்ளது இதை இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், எனவே இமாம் நவவி(ரஹ்) அவர்கள் நடுப்பகுதிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள், இதனை கருத்தில் கொண்டு தான் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் நடுப்பகுதியில் என வரும் ஹதிஸ்களில் தொகுத்துள்ளார்கள், (இமாம் முஸ்லிம்(ரஹ்) கருத்து அதுவாகும்),

    இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்கள் பதித்துள்ள இந்த ஹதிஸ் நடுப்பகுதியை தான் குறிக்கும் ஏனென்றால் இறுதி பகுதி நோன்பு வைக்க கூடாது என்று இடம் பெற்றுள்ளது, எனவே அதற்கு மாற்றமாக இருப்பதினால் அது நடுப்பகுதிதான் குறிக்கும்., ஆனால் பெரும்பான்மையானோர் இதற்கு நடுப்பகுதி தான் என்று மொழியாக்கம் செய்து உள்ளார்கள், ஏனென்றால் முஸ்லிம் இரண்டும் வேற வேற இடத்தில் பதிவு செய்து உள்ளார்கள், ஆனால் நீங்கள் இணையதளத்தில் எந்த ஒரு இணையதளத்திலும் சென்றாலும் சரி நீங்கள் முஸ்லிம் எண் 2607-யை سرر எனற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் இதற்கு மிடில் என மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது,

    ரமலானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்(இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் புஹாரி(ரஹ்),

    பதிலளிநீக்கு

  8. இந்த ஹதிஸிக்கு நீங்கள் பதிதிருக்கும் கீழ் ஹதிஸ் மாற்றமாக உள்ளது என பெரும்பான்மையான இமாம்களின் கருத்து.

    //இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டது ஷஅபான் மாதத்தின் கடைசியைத்தான் என்கிற மற்றொரு அறிவிப்பே சரியானதாகும். விடுபட்ட நோன்புகளை களா செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்குக் காரணம், அவை அவராகத் தன் மீது கடமையாக்கிக் கொண்ட இரு நேர்ச்சையான நோன்புகள் என்பதே! (ஃபத்ஹுல்பாரீ, உம்தத்துல் காரீ)//

    நபி(ஸல்) அவர்கள் இறுதியில் நோன்பு வைக்க தடை செய்யும் போது, மற்றொரு இடத்தில் இறுதியில் நோன்பு வைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்களா? இல்லை, இறுதியில் என்பது தவறாக அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும்,அது நடுப்பகுதியை தான் குறிக்கும் என பெரும்பான்மையான இமாம்களின் கருத்தாகும்,



    ஹதிஸ் எண் 2150-யையும்(நடுப்பகுதி),ஹதிஸ் எண் 2154-யையும்(இறுதிப்பகுதி) படித்து பார்க்கவும், உங்கள் பிடித்திருந்தால் எடுத்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விலகி இருங்கள், எனக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வது தான் சரி, மற்றவர்கள் செயல்படுவது எல்லாம் தவறு என் அறிவுக்கு அது மாற்றமாக உள்ளது என்று சொல்பவீர்கள் என்றால் அதற்கு நான் பொருப்பல்ல, அஸ்ஸலாமு அலைக்கும்.... உண்மையை உண்மையாய் கூறுங்கள், அதனால் தான் நான் இரண்டு ஹதிஸையும் சுட்டிகாட்டினேன், அஸ்தஃபருல்லா உங்கள் அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று ஒரு நபி மொழியை இட்டுகட்டியுள்ளது என கூறுகிறீர்களே இது நியாயமா?


    எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்(அல்குர்ஆன் 17:36)

    பதிலளிநீக்கு
  9. ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு-ஆதாரபூர்வமான் ஹதிஸ்


    وعن معاذ بن جبل ، عن النبي - صلى الله عليه وسلم - قال :

    " يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان ، فيغفر لجميع خلقه ، إلا لمشرك ، أو مشاحن " .

    رواه الطبراني في الكبير والأوسط ورجالهما ثقات

    ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
    இதை இமாம் தப்ரானி(ரஹ்) அவர்கள் ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்,

    மேலும் இதை இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்களும் உறுதி செய்துள்ளார்கள் இதில் இடம் பெரும் அறிவிப்பாளார்கள் நம்பகமானவர்கள் என்று கூறுகிறார்கள். இதை ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்,

    மேலும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் தனது கித்தாபில் இந்த ஹதிஸை பதிவு செய்து விட்டு இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவார்கள், சிலர் விமர்ச்சனம் செய்து உள்ளார்கள், அது தவறு. எனவே இது ஹசன் தரத்தில் கூட கூற முடியாது இது ஸஹிஹ் வான ஹதிஸ் ஆகும்.

    மேலும் இமாம் முந்தரி(ரஹ்) அவர்கள் வழியாக தஹ்ரிப் தஹ்ரிப் லும், இமாம் சூயூத்தி(ரஹ்) அவர்களும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளார்கள் மிகவும் நம்பகமானவர்கள் ஆவார்கள் என கூறியுள்ளார்கள்.


    அல்லா அனைத்தும் அறிந்தவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. * சுன்னத் ஜமாஅத் ஆலிம்களுக்கு பகிரங்க அறைகூவல்

      , பராஅத் இரவு
      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை மர்கஸில் 24-06-13 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு பராஅத் இரவு சம்மந்தமாக இமாம். முஹம்மது சித்தீக் அவர்கள் ஒலி பெருக்கி மூலம சுன்னத் ஜமாஅத் ஆலிம்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

      குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டினால் நாங்களும் எங்கள் பள்ளியில் செயல்படுத்துவோம் என்று பகிரங்கமாக அறைகூவல் விடப்பட்டது.

      மேலும் இந்த பராஅத் இரவிற்கு சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் ஆதாரம் தரவில்லையென்றால் மக்களே இந்த பித்அத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

      நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
      அல்குர்ஆன் 3:104

      நீக்கு

  10. அஸ்ஸலாமு அழைக்கும் ...
    பிஸ்மில்லாஹ்....
    என்னா பெயரில்லா ஜீ எதிலும் நம்பர் இல்லை ...
    சும்மா உட்டு அடிச்சுக்கிடு போரிங்க ...
    சரி எந்த நம்பர்ரும் இல்லை .
    சரி உங்க கூற்று படியே வசுக்கிட்டாலும்.

    நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள் என்று இந்த மாதம் 29 நாட்கள் இருத்தால் அப்போ நடு நாள் எது ? (சிலமாதம் 28 உண்டு)

    நோம்புக்கு ஆதரம் என்ற பெயரில் சும்மா உட்டு அடிச்சுக்கிடு போரிங்க ...

    1.அன்று மாட்டும் மூன்று யாஸீன் ஓதுவதற்கு ஆதரம் ?
    2.அன்று மாட்டும் சிறப்பு தொழுகைக்கு ஆதரம் ?
    3.அன்று மாட்டும் சிறப்பு திக்கார்க்கு ஆதரம் ?
    4.அன்று மாட்டும் சிறப்பு ரொட்டி சுடுவதற்கு ஆதரம் ?
    5.அன்று மாட்டும் சிறப்பு பூந்தி போட்டணம் ஆதரம் ?

    நோபை தவிர மற்ற சுமார் 5 விசயத்திற்க்கு உங்களுக்கு எந்த ஞானமில்லை...

    "எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்"(அல்குர்ஆன் 17:36)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
    அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

    BY
    ABU SAALIHA

    பதிலளிநீக்கு
  11. அலைக்கும் ஸலாம்

    நான் என்னமோ எனது கருத்தை சுயமாக கூறினது போல் என் மேல் கோபம் படுகிறீர்கள், மார்க்க அறிஞர்களின் கருத்தை தான் முன்னிருத்தி கூறினேன் தவிர எனது சுய கருத்து அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் பதித்த ஹதிஸின் எண்களையும் குறிப்பிடுள்ளேன்,

    ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு-ஆதாரபூர்வமான் ஹதிஸ்


    وعن معاذ بن جبل ، عن النبي - صلى الله عليه وسلم - قال :

    " يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان ، فيغفر لجميع خلقه ، إلا لمشرك ، أو مشاحن " .

    رواه الطبراني في الكبير والأوسط ورجالهما ثقات

    ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான் என நபி (ஸல்) கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
    இதை இமாம் தப்ரானி(ரஹ்)(பாகம் 20 பக்கம் 109) அவர்கள் ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்,

    மேலும் இதை இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்)(பாகம் 12 பக்கம் 481) அவர்களும் உறுதி செய்துள்ளார்கள் இதில் இடம் பெரும் அறிவிப்பாளார்கள் நம்பகமானவர்கள் என்று கூறுகிறார்கள். இதை ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்,

    மேலும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமி(ரஹ்)(பாகம் 8 பக்கம் 65) அவர்கள் கூறுகிறார்கள் தனது கித்தாபில் இந்த ஹதிஸை பதிவு செய்து விட்டு இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவார்கள், சிலர் விமர்ச்சனம் செய்து உள்ளார்கள், அது தவறு. எனவே இது ஹசன் தரத்தில் கூட கூற முடியாது இது ஸஹிஹ் வான ஹதிஸ் ஆகும்.

    மேலும் இமாம் முந்தரி(ரஹ்)(பாகம் 2 பக்கம் 132) அவர்கள் வழியாக தஹ்ரிப் தஹ்ரிப் லும், இமாம் சூயூத்தி(ரஹ்)(பாகம் 3 பக்கம் 249) அவர்களும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளார்கள் மிகவும் நம்பகமானவர்கள் ஆவார்கள் என கூறியுள்ளார்கள்.

    وقد ذكر الشيخ رحمه الله طرق الحديث وشواهده في كتابه " السلسلة الصحيحة " ( 1144 ) وخلص إلى القول بصحة متن حديث أبي موسى رضي الله عنه

    இது ஸஹிஹ்வான ஹதிஸ் என்று தெளிவாக மேல் அரபியில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, அரபி தெரிந்தால் புரிவும் என நினைக்கிறேன். பார்க்க. இமாம் அல்பானி(ரஹ்) பாகம் 3 பக்கம் 218

    அல்லாஹ் மன்னிப்பு தரும் அந்த இரவில் அவனது பொருத்தத்தை அடைந்து கொள்வதற்காக தொழுவது தவறா? குர்ஆன் ஒதுவது தவறா? அவனை புகழ்வது தவறா? அவனிடம் பாவ மன்னிப்பு கேட்பது தவறா?

    எந்த ஒரு முஸ்லிம்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து அவர்களில் ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறுவார்களோ, அவர்களுடைய துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினதாக ஹபீப் இப்னு ஸல்மதுல் பிஹ்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் ஹாகிம்(ரஹ், இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) பாகம் 13, பக்கம் 456)

    இதனால் தான் கூட்டமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது அவனது மன்னிப்பை பெறுவதற்காக மட்டும் தான், விருப்பம் இருந்தால் இணைந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விலகி தனியாக செய்தாலும் செய்யலாம் இல்லை என்றால் செய்ய வேண்டும் என்று கட்டாயமும் இல்லை, இது ஒன்றும் கட்டாயம் கிடையாது, மேலும் பூந்தி என்று சொல்கிறீர்கள், தற்போது பெரும்பான்மையான மார்க்க சொற்பழிவுகளில் தண்ணீர், டீ, காபி, பிஸ்கட் போன்றவை தருகிறார்கள், இது என்ன தவறா?. அதே போல் டீ, காபி, பிஸ்கட், தண்ணீர் போன்று பூந்தி, ரொட்டி என வைத்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. //குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டினால் நாங்களும் எங்கள் பள்ளியில் செயல்படுத்துவோம் என்று பகிரங்கமாக அறைகூவல் விடப்பட்டது. //

    நான் தற்போது வளைகுடாவில் வேலை செய்கின்றேன், இன்சா அல்லா நான் ஊருக்கு வரும் போது ஹதிஸ்களின் உள்ள பகுதியை நகல் எடுத்து அதில் ஸஹிஹ் என்ற வார்த்தை உடன் ததஜ மர்கஸ் வருகிறேன், அப்போது உங்கள் சித்திக் அவர்களின் பதில் எவ்வாறு இருக்கும் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்..

    அசத்தியம் அழிந்தே தீரும்

    பதிலளிநீக்கு

  13. இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. குர்ஆன்-17:81.


    நீகங்கள் சூட்டி காடிய ஹதிஸை நாங்கள் கூடிய விரைவில் இன்ஷால்லாஹ் பதில் கொடுப்போம்.

    அதற்கு முன் நீகங்கள் பூந்தி போட்டணதுக்கு ஒரு ஆதாரம் குடுதிங்களே அல்லாஹ் அக்பர்!! சுபஹன்னல்லாஹ்!!!

    "தற்போது பெரும்பான்மையான மார்க்க சொற்பழிவுகளில் தண்ணீர், டீ, காபி, பிஸ்கட் போன்றவை தருகிறார்கள், இது என்ன தவறா?. அதே போல் டீ, காபி, பிஸ்கட், தண்ணீர் போன்று பூந்தி, ரொட்டி என வைத்து கொள்ளுங்கள்." ## பூந்தி போட்டணதுக்கு இது ஒரு ஆதாரமா ?##

    நீகங்கள் அல்லாஹ்க்கு பயந்து சொல்லுகள்.

    1.சில மார்க்க சொற்பொழிவின் பொது டீ, காபி, பிஸ்கட், தண்ணீர் குடுப்பது உண்டு இதை நான் மறுக்க வில்லை
    ஆனால் அது விருபியவர்கள் வாங்கி கொள்வார்கள். அதைபோல் பூந்தி போட்டணம் அப்படியா ?
    எந்த மார்க்க சொற்பழிவு கூட்டத்தில் டீ, காபி, பிஸ்கட், தண்ணீரை பத்தியா ஓதி தருவதாக ஒரு கூட்டத்தை உங்களாள் காட்டமுடியுமா ? அதுவும் கூட்டம் முடிவில். (இறுதியில்)
    2.பூந்தி போட்டணத்தை வேண்டாம் என்று ஒரு சிலர் சொல்லுவதாக சொல்லுக ?
    3.ஆனால் நீகங்கள் பூந்தி போட்டணத்தை பத்தியா ஓதி கூட்டம் முடிவில் தருவது நபி (ஸல் ) அவர்கள் காட்டியவழியா ?
    4.அந்த பூந்திக்கு பரகத் உண்டு என்று நம்புரிங்களே ?
    5.அதுவும் பிரமத்தார் போல் செயல்கள் :

    இத்துகள் போல் :

    இத்துகள் கோவில்களில் சாமிக்கு பூஜை செய்துவிட்டு வாங்கி வாரும் பொருலை போல = எது போல் நீகங்கள் தபுருக் என்ற பெயாரில் பள்ளிவாசலில் பூந்தி போட்டணத்தை வாங்கி வரிகளா இல்லையா ? (இதில் ராத்திபு சர்க்கரை, மௌலோது சர்க்கரை அன்னைதுமே அடகும் ) இது யார்காட்டிய வழி? நபி (ஸல் ) அவர்கள் வழியா ?......
    **அல்லாஹ்க்கு பயந்து சொல்லுகள்**

    இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. குர்ஆன்-17:81.

    ” உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த) வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாக பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்புப்பொந்துக்குள் புகுந்தாலும் கூட அதிலும் நீங்கள் புகுவீர்கள்”
    அறிவித்தவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ
    ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

    எவன் ஒருவன் மாற்று மத கலாச்சாரத்தில் ஒன்றை தனதாக்குகிறானோ அவன் அந்த மதத்தை சார்ந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்."
    (ஸஹீஹ் புஹாரி)

    அசத்தியம் அழிந்தே தீரும்

    BY
    ABU SAALIHA

    பதிலளிநீக்கு
  14. என்ன பதில் கொடுப்பீர்கள், உங்களது கொள்கைக்களுக்கு பொருந்தவில்லை என்பதற்காக ஹதிஸை தூக்கி எறிவீர்கள் இது என்ன உங்களுக்கு புதியதா என்ன? நான் பதித்திருக்கும் புத்தக்கத்தில் எவ்வாறு உள்ளது என்பதை அப்படியே நகல் எடுங்கள், அதற்கு மாற்றமாக அந்த இமாம் இப்படி சொன்னார், இந்த இமாம் இப்படி சொன்னார்.அதனால் அது பலவினமடைகிறது, அப்படி என்றால் உரக்கமாக கூறிவிடுங்கள் நாங்கள் இமாம்களைத் தான் பின்பற்றுகிறோம், ஹதிஸை பின்பற்ற வில்லை என்று...

    பூந்தியை கொடுப்பது மார்க்கம் என்று நினைத்து கொடுத்தால் அது தவறு மாற்றமாக அதை அன்பளிப்பு, தர்மமாக கொடுப்பது தவறு இல்லை, ஏனென்றால் அன்பளிப்பும் , தர்மமும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறீவீர்கள் என நம்புகிறேன்,

    மாற்றுமதத்தோடு நம் மார்க்கத்தோடு ஒற்றுமை மற்றும் வேற்றுமையை பட்டியிலிட்டு உள்ளீர்கள், அது போல் என்னாலும் சொல்ல முடியும் அவ்வாறு நீங்கள் கருதுவீர்கள் ஆனால் ....

    இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் யார் ?

    1.இங்கே அல்லாஹ் கடவுள் : அங்கே சிவன் கடவுள்
    2.இங்கே அல்லாஹுவுக்கு சஜிதா : அங்கே சாமிக்கு சாஜிதா
    3.இங்கே குர்ஆன் ஓதுதல் : அங்கே கீதை ஓதுதல்
    4.இங்கே ஜம் ஜம் நீர் புனித நீர் : அங்கே காசி நீர் புனித நீர்
    5.இங்கே மஸ்ஜித்துக்கு செல்வது : அங்கே கோவிலுக்கு செல்வது
    6.இங்கே கஃபாவை சுற்றி வருதல் : அங்கே கோயிலைச் சுற்றி வருதல்
    7.இங்கே நேர்ச்சை காணிக்கை : அங்கேயும் நேர்ச்சை காணிக்கை
    8.இங்கே திக்ரு செய்வது : அங்கே ஓம் மந்திரம் ஓதுவது
    9.இங்கே ஹஜ்ஜுக்கு செல்வது : அங்கே காசிக்கு செல்வது
    10.இங்கே கஹ்பவை முன்னோக்குகிரர்கள் : அங்கே சிலையை முன்னோக்குகிரர்கள் !
    11.இங்கே நோன்பு பெருநாள் : அங்கே பொங்கல் பெருநாள்
    12.இங்கே நோன்பு : அங்கே விரதங்கள்
    13.இங்கே லைலதுல் கத்ர் : அங்கே சிவராத்திரி
    14.இங்கே கபாவை சுற்றி ஓட்டம் : அங்கே சாமியை சுற்றி ஓட்டம்
    15.இங்கே மக்காவில் மொட்டை : அங்கே கோயிலில் மொட்டை
    16.இங்கே ஆடு மாடு ஒட்டகை பலி : அங்கேயும் ஆடு மாடு பலி
    17.இங்கே இமாம்கள் : அங்கே சாமியார்கள்

    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
    யார் பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ, அவரும் பிரமதத்தைச் சார்ந்தவரே!!

    நூல்: அபூதாவூத்:3512

    இப்படியே எல்லவற்றிக்கும் இது போல் அங்கே..! இங்கே..! என்று பார்த்தல் ???

    என்னமோ நாங்கள் அறிவாளிகள் என்று இன்று முஸ்லிம்களின் அமலை மாற்றுமதத்தினருடன் ஒப்பிட்டு முஸ்லிம்கிளிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள், எங்களுக்கு அவ்வாறு பதிலளிக்க தெரியும் ஆனால் அல்லாஹ் அஞ்சி மவுனமாக இருக்கின்றோம்..

    யா அல்லாஹ் இந்த குழப்பவாதிகளிடம் இருந்து எங்களை பாதுகாப்பாயக..!

    சிந்திப்போம்! செயல்படுவோம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும்..
      அன்புள்ள சகோதரே

      உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டடும்

      உங்களை நான் என்னமோ நல்லா மார்க்க சித்தனை உடயவர் என்று நினைத்தேன். ஆனால் நீகங்கள் இஸ்லாத்தை இவ்ளோ மோசமாக நினைத்து வைத்து இருபீர்கள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை.

      நீங்கள் சொல்லும் சொல்லும் கீள் உள்ளவை அனைத்தும்
      அல்லாஹ் உடையதூதர் காட்டியவழி

      1.அல்லாஹ்தான் கடவுள் :
      2. அல்லாஹுவுக்குதான் சஜிதா
      3.குர்ஆன் ஓதுதல் :
      4. ஜம் ஜம் நீர்தான் புனித நீர்
      5.மஸ்ஜித்துக்கு செல்வது
      6.கஃபாவைதான் சுற்ற
      7.நேர்ச்சை
      8.திக்ரு செய்வது :
      9.ஹஜ்ஜுக்கு செல்வது :
      10.கஹ்பவை முன்னோக்குகிரர்கள்!
      11.நோன்பு பெருநாள் :
      12.நோன்பு :
      13.லைலதுல் கத்ர்
      14.மக்காவில் மொட்டை
      15.ஆடு மாடு ஒட்டகை பலி

      அல்லாஹ் கூறியதும் (குரான் ) நபி (ஸல் ) அவர்களின் (சொல் ,செயல்,அங்கிகாரம் ) தான் மார்க்கம் .

      1.ஒரு பூந்தி போட்டணதுக்கு அல்லாஹ் உடன் நீ யாரை? ஒப்பிடுகிறாய்
      2.ஒரு பூந்தி போட்டணதுக்கு இஸ்லாத்தை இவ்ளோ மோசமாக நினைத்து வைத்து இருபீர்கள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை ச்சா .

      நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றும், ஹதீதுகளைக் கொண்டு நிலைநாட்டப்பட்டவை மட்டுமே. ஹதீதில் வராதது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கிகாரத்தில் வர முடியாது. ஆகவே, ஹதீஸ் ஆதாரமில்லாதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பவர்கள் நிச்சயமாக அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். நான்கு மத்ஹபு பிரிவுகளுக்கு (தக்லீதுக்கு) குர்ஆனிலும் ஆதாரமில்லை. ஹதீதுகளிலும் ஆதாரமில்லை. அப்படி இருந்தால் முகல்லிதுகள் எடுத்துக்காட்டட்டும். ஆகவே, நான்கு மத்ஹபு பிரிவினர் குர்ஆன், ஹதீஸில் வராதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பதால், அவர்கள் (முகல்லிதுகள்) அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். ஆகவே, நான்கு மத்ஹபு பிரிவினர் (முகல்லிதுகள்) ‘அஹ்ல சுன்னத்’ அல்ல என்பது தௌ;ளத் தெளிவாக விளங்குகின்றது

      6:125 فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ
      6:125. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
      7:178 مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي ۖ وَمَن يُضْلِلْ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
      7:178. அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்;யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.

      அசல் அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் நாங்கள் தான்.
      உங்களா மாதிரி எந்த மதுஹப்பயும் .........பின் பற்ற கடையாது
      நங்கள் (நபி சொல்லாத) எந்த மதுஹப்பயும் பின் பற்ற கடையாது அப்படி சொல்லுறவன் பொய்யன்


      விவாதத்திற்குத் தயாரா?
      நீங்கள் காட்டாகூடிய ஹதிஸ் பலகினமான ஹதிஸ்தான் அரபியில் இருக்கு என்று பொது மக்களை யமாதாதே !!
      சுமா எனமாச்சம் டைப் பண்ணிடு அரபியில் இருக்கு சொல்லாதே !!


      சுமா பலமானது என்று சொன்னால் போதாது. அதை வா விவாதிக்க
      நீங்கள் ஒரு ........உண்மையாளராக இந்தால் விவாதிக்க வாருங்கள் .
      அப்படி உங்களால் வரத்துப்பு இல்லேண்ட நீ ஒரு மாகா பொய்யன் .
      சாரி நீங்கள் ஊருக்கு வர அவசியமே இல்லை நாங்கள் நீங்கள் இருக்கும் இடத்துக்கு வருகிறோம் விவாதிக்க தயாரா ?

      உங்களுடைய command லே உங்க பெயாரு போடுயா ?

      இது போதும் நீங்கள் ஒரு மாகா பொய்யன் என்று .
      உங்களுக்கு யார் இந்த பலகினமான ஹதிஸை கொடுத்தார்களோ !! அவர்கள் இடம் சொல்லுகள் நேர்க்கு.. நேர்.. பொதுமக்கள் மத்தியல் விவாதம் செய்ய தயாரா?
      விவாதத்திற்கு வாருகள் இன்ஷால்லாஹ் பொதுமக்கள் சத்தியத்தை அறிந்து கொள்வார்கள்

      இதுதன் நான் உங்களுக்கு எழுதும் கடைசி command விவாதத்திற்கு வாருகள்.. வாருகள்... வாருகள்...

      மக்கள் மத்தியில் பலவீனமான ஹதிசை காட்டி வழிகேடுக்காதே !!
      இதில் உங்களுக்கு என்ன நன்மை ?
      உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டடும் என்று தூவா செய்தவன்னாக


      by
      அபூ சாலிஹ - 00919629303474

      நீக்கு
  15. 1
    முஸ்லிம்களின் கூட்டம் ஒன்று சேர்ந்து அவர்களில் ஒருவர் துஆ ஓத மற்றவர்கள் ஆமீன் கூறுவார்
    5478 - أخبرنا الشيخ أبو بكر بن إسحاق أنا بشر بن موسى ثنا أبو عبد الرحمن المقري ثنا ابن لهيعة : قال : حدثني أبو هبيرة عن حبيب بن مسملة الفهري و كان مجاب الدعوة أنه أمر على جيش فدرب الدروب فلما أتى العدو قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول لا يجتمع ملأ فيدعو بعضهم و يؤمن البعض إلا أجابهم الله ثم إنه حمد الله و أثنى عليه ثم قال : اللهم احقن دمائنا و اجعل أجورنا الشهداء فبينما هم على ذلك إذ نزل الهنباط أمير العدو فدخل على حبيب سرادقه تعليق الذهبي قي التلخيص : سكت عنه الذهبي في التلخيص المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص 5 /24] "

    ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹபீப் பின் மஸ்லமா (ரலி, நூல்: ஹாகிம் 5478

    3456- حدثنا بشر بن موسى ، حدثنا أبو عبد الرحمن المقرئ ، حدثنا ابن لهيعة ، حدثني ابن هبيرة ، عن حبيب بن مسلمة الفهري وكان مستجابا أنه أمر على جيش فدرب الدروب ، فلما لقي العدو ، قال للناس : سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول : " لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن سائرهم إلا أجابهم الله " ، ثم إنه حمد الله وأثنى عليه ، فقال : اللهم احقن دماءنا واجعل أجورنا أجور الشهداء ، فبينا هم على ذلك إذ نزل الهنباط أمير العدو ، فدخل على حبيب سرادقه ، قال أبو القاسم : الهنباط بالرومية صاحب الجيش. حبيب بن سباع أبو جمعة الأنصاري ، ويقال : جنيد بن سبع المعجم الكبير للطبراني [4 /12]

    இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    , கூட்டு துஆ ஓதலாம் என்று வாதிடுகிறார். இந்த இரண்டு நூற்களிலும் மூன்றாவது அறிவிப்பாளராக "இப்னு லஹீஆ' என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். இவருடைய புத்தகங்கள் எரிந்து விட்டதால் இவரது மனனத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதே இவரது பலவீனத்துக்குக் காரணம். எனவே இவருடைய நூல் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கலாம். இதற்குப் பிறகு இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்பை ஏற்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

    قال أبو حاتم بن حبان البستي: كان من أصحابنا يقولون: سماع من سمع من ابن لهيعة قبل احتراق كتبه مثل العبادلة: ابن المبارك، وابن وهب، والمقرئ، وعبد الله بن مسلمة القعنبي، فسماعهم صحيح ومن سمع بعد احتراق كتبه فسماعه ليس بشئ. سير أعلام النبلاء - الذهبي [8 /23

    இப்னு லஹீஆவிடமிருந்து இப்னு வஹப் அல்முக்ரிஉ மற்றும் முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவித்த அறிவிப்புகள் தரமானவை. இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக், அல்முக்ரிஉ ஆகியோரைப் போன்று. இவ்வாறு அபூ ஹஃப்ஸ் ஃபல்லாஸ் என்பார் தெரிவிக்கின்றார். நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 8, பக்கம் : 11)

    وكان صالحا، لكنه يدلس عن الضعفاء، ثم احترقت كتبه، وكان أصحابنا يقولون: سماع من سمع منه قبل احتراق كتبه مثل العبادلة: عبدالله بن وهب، وابن المبارك، وعبد الله بن يزيد المقرئ، وعبد الله بن مسلمة القعنبى - فسماعهم صحيح. ميزان الاعتدال - الذهبي [2 /482] 1


    1

    பதிலளிநீக்கு
  16. 2
    இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள் சரியானவை. நூல்: மீஸானுல் இஃதிதால் (பாகம் : 4, பக்கம் : 166)

    وقال نعيم بن حماد سمعت بن مهدي يقول لا أعتد بشيء سمعته من حديث بن
    لهيعة إلا سماع بن المبارك ونحوه تهذيب التهذيب - ابن حجر [5 /328] وقال عبد الغني بن سعيد الأزدي إذا روى العبادلة عن بن لهيعة فهو صحيح بن المبارك وابن وهب والمقري وذكر الساجي وغيره مثله تهذيب التهذيب - ابن حجر [5 /330]

    இப்னு வஹப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள். நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 330

    அபாதிலாக்கள் என்று கூறப்படும் நபர்கள், அதாவது அப்துல்லாஹ் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் இப்னு லஹீஆவிடமிருந்து அவருடைய மூளை குழம்புவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே அப்துல்லாஹ் பின் முபாரக் அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அறிவித்தவர்கள் என்பதால் இவர்களின் அறிவிப்பை ஏற்கலாம் என்று இந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.

    கூட்டு துஆ ஓதுவதற்கு ஆதாரமாகக் காட்டும் மேலுள்ள செய்தியை இப்னு லஹீஆவிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் இப்னு லஹீஆவின் மனனத்தன்மை பாதிக்கப்படுவதற்கு முன்பு அவரிடமிருந்து அறிவித்தவர் என்பதால் இது சரியான செய்தி என்று வாதிடுகின்றனர்.

    இந்த ஹதீஸில் இப்னு லஹீஆவின் விமர்சனத்தைத் தவிர்த்து வேறெந்த குறையும் இல்லாவிட்டால் இந்த வாதத்தை பரிசீலிக்கலாம்.

    ஆனால் இச்செய்தி பலவீனம் என்பதற்கு வேறொரு குறையும் உள்ளது. இந்த செய்தியை ஹபீப் பின் மஸ்லமா (ரலி) என்ற நபித்தோழரிடமிருந்து அபூ ஹுபைரா என்பவர் அறிவிக்கின்றார். ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 42 வது வருடத்தில் மரணிக்கிறார்கள். அபூ ஹுபைரா ஹிஜ்ரீ 41 வது வருடத்தில் தான் பிறக்கின்றார்.

    وولي أرمينية لمعاوية، فمات بها سنة اثنتين وأربعين سير أعلام النبلاء - الذهبي [3 /189] ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ நாற்பத்து இரண்டாவது வருடத்தில் மரணித்தார்கள். நூல்: சியரு அஃலாமின் நுபலாஃ (பாகம் : 3, பக்கம் : 189)

    قال المزي في تهذيب الكمال : عبد الله بن هبيرة بن أسعد بن كهلان السبئى الحضرمى ، أبو هبيرة المصرى . اهـ ' . قال سعيد بن كثير بن عفير : ولد سنة الجماعة . و قال أبو سعيد بن يونس : قرأت فى بعض الكتب القديمة : أنه مات سنة ست و عشرين و مئة .

    அபூ ஹுபைரா ஜமாஅத் வருடம் என்றழைக்கப்படும் ஹிஜ்ரீ 41வது வருடத்தில் பிறந்தார். நூல்: தஹ்தீபுல் கமால்

    ஆக ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அபூ ஹுபைராவின் வயது ஒன்றாகும். எனவே அபூஹுபைரா ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. அவர்களிடமிருந்து எதையும் நேரடியாகக் கேட்கவில்லை என்பது உறுதியாகின்றது.

    இந்த அடிப்படையில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முறிவு இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமாகிறது. இதை விளங்கியிருந்தால் இதை ஆதாரமாகக் கொண்டு கூட்டு துஆ என்ற பித்அத்தைச் செய்திருக்க மாட்டார்கள்.

    2

    பதிலளிநீக்கு
  17. சகோதரர் அனஸ் அவர்களே,

    பிஜே வின் இணையதளத்தில் இருந்து நன்றாக நகல் எடுத்து உள்ளீர்கள்,

    இமாம் ஹாகிம்(ரஹ்) ஸஹிஹ் வான ஹதிஸை பலகினமானது என்று அறிவிப்பு செய்து உள்ளார் பிஜே. இமாம் ஹாகிம்(ரஹ்) மார்க்க தெரியவில்லை என்று போல் கூறி உள்ளார். ஆனால் கூட்டு துஆப் பற்றி ஆதரபூர்வமான ஹதிஸ்களும் உள்ளது, நான் பதித்தற்கு பிறகு உங்கள் பிஜே என்ன பதலளிக்கிறார் என்று பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  18. அஸ்ஸலாமு அழைக்கும் ...
    பிஸ்மில்லாஹ்....
    பராஅத் இரவுக்கு தெழிவான ஆதாரங்கள் இல்லை..
    கூட்டு தூவாக்கும் இல்லை...
    இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. குர்ஆன்-17:81.
    பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல!
    அவர்களின் ஆதாரம்
    இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் ஷஃபான் மாதத்தின் 15ம் இரவில் இறைவன் தன் அடியார்களை நெருங்கி வருகிறான். இûவைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன், இவ்விருவரைத் தவிர மற்ற எல்லோரையும் மன்னனிக்கிறான்.
    அறிவிப்பாளர் : ஹஜ்ரத் முஆத் பின் ஜபல் (ரளியல்லாஹ அன்ஹு)
    நூற்கள் : இப்னுஹிப்பான் எண் : 5665, தப்ராணி (முஃஜமுல் அவ்ஸதி எண் : (பாகம் 20 பக்கம் 109) அறிவிப்பாளர் : ஹஜ்ரத் அபூ மூஸல் அஷ்அரீ (ரளியல்லாஹ அன்ஹு) நூல் : இப்னுமாஜா எண் :
    1390 நமது விளக்கம் : அவர்கள் ஆதாரமாக காட்டும் செய்தியின் அரபி மூலம் இதோ :
    5665 - أخبرنا محمد بن المعافى العابد بصيدا و ابن قتيبة وغيره قالوا : حدثنا هشام بن خالد الأزرق قال : حدثنا أبو خليد عتبة بن حماد عن الأوزاعي و ابن ثوبان عن أبيه عن مكحول عن مالك بن يخامر عن معاذ بن جبل عن النبي صلى الله عليه و سلم قال : ( يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن ) صحيح ابن حبان 12 /481 இந்தசெய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஏரளாமான குளறுபடிகள் நிறைந்துள்ளன. இதை ஹதீஸ் கலை நிபுணர் இமாம் தாரகுத்னீ அவர்கள் தனது அல்இலல் என்ற நூலி-ல் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த செய்தி மக்கூல் என்பவரிடமிருந்து இரண்டு வழிகளில் அறிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு அறிவிப்பாளர் தொடர்வரிசையும் சரியானது அல்ல என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள். كلاهما غير محفوظ இவ்விரு வழிகளும் சரியானது அல்ல நூல் : இல்இலல் -தாரகுத்னீ, பாகம் 6, பக்கம் :50 وقد روى عن مكحول في هذا روايات وقال هشام بن الغاز عن مكحول عن عائشة وقيل عن الأحوص بن حكيم عن مكحول عنأبي ثعلبة وقيل عن الأحوص عن حبيب بن صهيب عن أبي ثعلبة وقيل عن مكحول عن أبي إدريس مرسلا وقال الحجاج بن أرطأة عن مكحول عن كثير بن مرة مرسلا أن النبي صلى الله عليه و سلم قال وقيل عن مكحول من قوله والحديث غير ثابت - العلل للدارقطني 6 /50 மேலும் மக்கூல் வழியாக பல அறிவிப்புகள் கூறப்படுகிறது. ஆயிஷா (ர-லி) அவர்கள் அறிவித்ததாகவும், அபீ ஸஅலபா (ர-லி) அவர்கள் அறிவித்ததாகவும், மக்கூல், அபூ இத்ரீஸ் வழியாக முர்ஸலாகவும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் மக்கூல் வழியாக கஸீர் பின் முர்ரா என்பவரிடமிருந்து முர்ஸலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (மொத்தத்தில்) இந்த செய்தி உறுதியானது அல்ல. நூல் : இல்இலல் -தாரகுத்னீ,பாகம் 6, பக்கம் :50 இந்த செய்தியைப்பற்றி இமாம் அபூஹாத்திம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது அளித்த விடை : 2012- وسألت أبي عن حديث رواه أبو خليد القاري ، عن الأوزاعي ، عن مكحول وعن ابن ثوبان ، عن أبيه ، عن مكحول ، عن مالك بن يخامر ، عن معاذ بن جبل ، قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى ليلة النصف من شعبان إلى خلقه قال أبي هذا حديث منكر بهذا الإسناد ولم يرو بهذا الإسناد عن أبي خليد ولا أدري من أين جاء به -علل الحديث لابن أبي حاتم 2059 இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை தொடர் மறுக்கப்படவேண்டியதாகும். இந்த அறிவிப்பாளர் தொடர்வரிசையை அபூகலீத் என்பவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதை இவர் எங்கிருந்து கொண்டுவந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நூல் : இலலுல் ஹதீஸ்- இப்னு அபீ ஹாத்திம், பக்கம் : 2059 அவர்கள் குறிப்பிட்ட இப்னுமாஜா நூலில் இடம்பெற்ற செய்தி இதோ 1380 حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ page -1

    பதிலளிநீக்கு
  19. اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ الزُّبَيْرِ بْنِ سُلَيْمٍ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ أَبَا مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ رواه ابن ماجة இமாம் இப்னுமாஜா அவர்கள் இந்த செய்தியை இரண்டு அறிவிப்பாளர் வழியாக இடம்பெறச் செய்துள்ளார்கள். முதல் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது அறிவிப்பாளர் ளஹ்ஹாக் பின் அய்மன் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். அவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. 3928 - الضحاك بن أيمن الكلبى د .شيخ لابن لهيعة .لا يدرى من ذا. له في ليلة نصف شعبان. (ميزان الاعتدال - الذهبي 2 /322 ளஹ்ஹாக் பின் அய்மன் என்பவர் இப்னு லஹீஆவின் ஆசிரியர். இவர் யார் என அறியப்படாதவர். ஷஅபான் பாதி இரவு (சிறப்பு) தொடர்பாக இவர் ஒரு செய்தியை அறிவித்துள்ளார். நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 322 இப்னுமாஜாவின் நான்காவது அறிவிப்பாளர் இப்னு லஹீஆ என்பவரும் பலவீனமானவராவார். 346 - عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف - الضعفاء والمتروكين - النسائي ளص 64ன அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறினார்கள். நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64 533 قلت: كيف رواية بن لهيعة عن أبي الزبير عن جابر فقال: بن لهيعة ضعيف الحديث- تاريخ ابن معين - الدارمي 153 அபூஸுபைர் வழியாக இப்னு லஹீஆ அறிவிக்கும் செய்தி பற்றி நான் கேட்டேன். அதற்கு இப்னு மயீன் அவர்கள், இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறினார்கள். நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153 5388 - سمعت يحيى يقول بن لهيعة لا يحتج بحديثه - تاريخ ابن معين - رواية الدوري 4 /481 இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 481 قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيرا... قال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا - المجروحين - ابن حبان 2 /12 "இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன்' என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறுகின்றார்கள். "நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார்' என்று யஹ்யா பின் ஸயீத் கூறுகின்றார்கள். நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 14 عبدالله ابن لهيعة بفتح اللام وكسر الهاء ابن عقبة الحضرمي أبو عبدالرحمن المصري القاضي صدوق من السابعة خلط بعد احتراق كتبه ورواية ابن المبارك وابن وهب عنه أعدل من غيرهما وله في مسلم بعض شيء مقرون - تقريب التهذيب : ابن حجر 2 /319 அப்துல்லாஹ் பின் லஹீஆ, எகிப்து நாட்டைச் சார்ந்த நீதிபதியாவார். அவர் நல்லவர். அவருடைய நூற்கள் எரிந்த பிறகு மூளை குழம்பி விட்டது. (இவரிடமிருந்து) இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோர் அறிவிப்பது இவ்விருவர் அல்லாதோர் அறிவிப்பை விட உறுதியானது, வலுவானது. (இவரல்லாத மற்றவர்கள் இவருடைய செயதியைப் போன்று அறிவிக்கும் போது) இணைப்பாக இவருடைய சில செய்திகள் முஸ்-ம் என்ற நூ-ல் இடம் பெற்றுள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்கள். நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1, பக்கம் : 319 இப்னு லஹீஆ என்பவர் மூத்த தாபியீன் ஆவார். இவர் தனக்குக் கிடைத்த செய்திகளை எழுதி வைத்துக் கொண்டு அதி-ருந்து அறிவித்து வந்தார். ஒருநாள் அவருடைய வீடு எரிந்த போது அவர் எழுதி வைத்த நூற்களும் சாம்பலாயின! பின்னர் அவர் மூளை குழம்பி விட்டார். இதனால் இவருடைய பிந்திய அறிவிப்புக்கள் மிகவும் குளறுபடி நிறைந்ததாக காணப்பட்டது. எனவே இவருடைய ஹதீஸ்களை ஹதீஸ் கலை அறிஞர்கள் நிராகரித்தனர். மூளை குழம்புவதற்கும், இவரது நூற்கள் எரிவதற்கும் முன்பு இவரிடம் கேட்ட இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோரின் செய்திகளை மட்டுமே ஏற்கலாம் என்று சிலர் முடிவு செய்தனர். பெரும்பாலும் இவருடைய செய்திகளை ஹதீஸ கலை அறிஞர்கள் நிராகரித்துள்ளனர். இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளனர். ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் பல இடங்களில் இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள். அதில் ஒன்று இதோ: وأخرجه الطبري من طريق أبي سلمة عن عائشة مرفوعا أيضا وفيه بن لهيعة وهو ضعيف - فتح الباري - ابن حجر 4 /184
    page 2

    பதிலளிநீக்கு
  20. அபூ ஸலமா வழியாக ஆயிஷா (ர-) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (ஒரு செய்தியை) தப்ரீ பதிவு செய்துள்ளார்கள். இதில் இப்னு லஹீஆ இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர். ஃபத்ஹுல் பாரி, பாகம் : 4, பக்கம் : 184 இதைப் போன்றே திர்மிதி இமாம் அவர்களும் பல இடங்களில் இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள். وابن لهيعة ضعيف عند أهل الحديث ضعفه يحيى بن سعيد القطان وغيره ள من قبل حفظه - سنن الترمذي 1 /15 இப்னு லஹீஆ என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களிடம் பலவீனமானவர். யஹ்யா பின் ஸயீத் அல் கத்தானும் மற்றும் பலரும் இவரது நினைவாற்றல் அடிப்படையில் இவரைப் பலவீனமானவர் என்று முடிவு செய்துள்ளனர். (திர்மிதீ10) மேலும் திர்மிதீ ஹதீஸ் எண் 576, 1036 ஆகிய ஹதீஸ்களில் இதே போன்று இடம்பெற்றுள்ளது. மேற்கூறப்பட்ட இப்னு லஹீஆ என்பவரைப் பற்றிய விமர்சனங்கள் அவர் பலவீனமானவர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. அவரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் (சிலரின் கூற்றுப்படி) இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோர் அவரிடமிருந்து அறிவித்திருக்க வேண்டும். இந்த செய்தியில் சிலரின் கூற்றுப்படிகூட இப்னு லஹீஆவிடமிருந்து இப்னுல் முபாரக், இப்னு வஹப் போன்றோர் அறிவிக்கவில்லை.
    எனவே இது பலவீனமான செய்தியாகும். இப்னு மாஜாவின் இன்னொரு அறிவிப்பாளர் தொடரில் இதே இப்னு லஹீஆ என்பவரே இடம்பெற்றுள்ளார். மேலும் ளஹ்ஹாக் பின் அய்மன் என்பவர் இடத்தில் ஸுபைர் பின் சுலைம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவர். 2837 - الزبير بن سليم ள ق ன. شيخ لا يعرف.- ميزان الاعتدال - الذهبي 2 /67 ஸுபைர் பின் சுலைம் என்பவர் யாரென அறியப்படாத நபர் என்று தஹபீ அவர்கள் கூறுகிறார்கள். நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 322


    பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
    (page - 3)

    thanks for
    abu muhamed
    by
    abu saaliha

    பதிலளிநீக்கு
  21. நான் பதித்த நூல்களின் நகல்களை கட்ட வக்கு இல்லாமல், நான் முன்பு சொன்ன மாதிரி மற்ற இமாம்களின் கருத்து கணிப்பை பதிவு செய்து உள்ளீர்கள், நீங்கள் ஆன்லைன்பிஜே.காம் என்ற இணைய தளத்தில் நகல் எடுத்து இதில் பதிவு செய்து உள்ளீர்கள், நான் பதித்த நூல்கள் கீழே இடம் பெற்றுள்ளன.

    இதை இமாம் தப்ரானி(ரஹ்)(பாகம் 20 பக்கம் 109) அவர்கள் ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்,

    மேலும் இதை இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்)(பாகம் 12 பக்கம் 481) அவர்களும் உறுதி செய்துள்ளார்கள் இதில் இடம் பெரும் அறிவிப்பாளார்கள் நம்பகமானவர்கள் என்று கூறுகிறார்கள். இதை ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்,

    மேலும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமி(ரஹ்)(பாகம் 8 பக்கம் 65) அவர்கள் கூறுகிறார்கள் தனது கித்தாபில் இந்த ஹதிஸை பதிவு செய்து விட்டு இதில் இடம் பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவார்கள், சிலர் விமர்ச்சனம் செய்து உள்ளார்கள், அது தவறு. எனவே இது ஹசன் தரத்தில் கூட கூற முடியாது இது ஸஹிஹ் வான ஹதிஸ் ஆகும்.

    மேலும் இமாம் முந்தரி(ரஹ்)(பாகம் 2 பக்கம் 132) அவர்கள் வழியாக தஹ்ரிப் தஹ்ரிப் லும், இமாம் சூயூத்தி(ரஹ்)(பாகம் 3 பக்கம் 249) அவர்களும் இதில் இடம் பெறும் அறிவிப்பாளார்கள் மிகவும் நம்பகமானவர்கள் ஆவார்கள் என கூறியுள்ளார்கள்.

    وقد ذكر الشيخ رحمه الله طرق الحديث وشواهده في كتابه " السلسلة الصحيحة " ( 1144 ) وخلص إلى القول بصحة متن حديث أبي موسى رضي الله عنه

    இது ஸஹிஹ்வான ஹதிஸ் என்று தெளிவாக மேல் அரபியில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, அரபி தெரிந்தால் புரிவும் என நினைக்கிறேன். பார்க்க. இமாம் அல்பானி(ரஹ்) பாகம் 3 பக்கம் 218

    ஏனப்ப இந்த கொலைவெறி.. உண்மையை உண்மையாய் கூறுங்கள், திரண் இருந்தால் நான் பதிருக்கும் இமாம்களின் ஹதிஸ்களை சுட்டி காட்டுங்கள், இல்லை என்றால் நான் ஊருக்கு வரும் வரை காத்திருங்கள், புத்தகத்தில் அசல் நகல்களையே எடுத்து வருகிறேன் உங்கள் ததஜ மர்கஸுக்கு உங்கள் அண்ணன் அந்த நூல்களுக்கு என்ன பதில் தருகிறார் என்று பொருத்து இருந்தான் பார்ப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும்..

      நீங்கள் குறிப்பிட்ட இந்த ஹதிஸ் அனைத்தும் பலவீனமானது தான்/
      அப்படி நீங்கள் பலமான ஹதிஸ் என்று சொன்னால் வருகள்
      இன்ஷால்லாஹ் அழகிய முரையில் விவாதம் செய்து கொள்வோம் வரத்தயாரா ?

      சுமா பலமானது என்று சொன்னால் போதாது.
      நீங்கள் ஒரு ........உண்மையாளராக இந்தால் விவாதிக்க வாருங்கள் .

      அப்படி உங்களால் வரத்துப்பு இல்லேண்ட நீங்கள் ஒரு மாகா பொய்யன் .

      சாரி நீங்கள் ஊருக்கு வர அவசியமே இல்லை நாங்கள் நீங்கள் இருக்கும் இடத்துக்கு வருகிறோம் விவாதிக்க தயாரா ?

      மக்கள் மத்தியில் பலவீனமான ஹதிசை காட்டி வழிகேடுக்காதே !!
      இதில் உங்களுக்கு என்ன நன்மை ?

      நீக்கு
    2. அரபி மொழி தெரிந்து இருந்தால் நான் பதித்திருக்கும் ஹதிஸ்களிலே நான் பதித்திருக்கும் இமாம்கள் ஸஹிஹ் என்று சொல்லும் போது அந்த இமாம் இப்படி சொல்லிவிட்டார், இந்த இமாம் இப்படி சொல்லிவிட்டார் என்று சொல்லி ஒரு ஹதிஸை பலகினமாக்கு கிறாய வெட்கமா இல்லை... நான் ஒன்றும் கோழை இல்லை..இன்சா அல்லா அடுத்த வருடம் ஜுன் மாதத்திற்குள் ஊருக்கு வருகிறேன் வரும் போது அசல் நகலை எடுத்து வருகிறேன் அதில் ஸஹிஹ்வான வார்த்தை இல்லை என்றால் கேள்வி கேள், வார்த்தை விடாதீர்கள் பிஜே மத்ஹப் சார்ந்தவர்களே... எனக்கும் விடத் தெரியும்... அழகிய விவாதம் திரண் இருந்தால் தொடருவோம் ஆனால் எனது நன்பர்கள் ததஜ இயக்கத்தில் உள்ளார்கள் அவர்களுடன் தான் வருவேன்..

      நீக்கு
    3. அரபி மொழி தெரிந்து இருந்தால் நான் பதித்திருக்கும் ஹதிஸ்களிலே நான் பதித்திருக்கும் இமாம்கள் ஸஹிஹ் என்று சொல்லும் போது அந்த இமாம் இப்படி சொல்லிவிட்டார், இந்த இமாம் இப்படி சொல்லிவிட்டார் என்று சொல்லி ஒரு ஹதிஸை பலகினமாக்கு கிறாய வெட்கமா இல்லை... நான் ஒன்றும் கோழை இல்லை..இன்சா அல்லா அடுத்த வருடம் ஜுன் மாதத்திற்குள் ஊருக்கு வருகிறேன் வரும் போது அசல் நகலை எடுத்து வருகிறேன் அதில் ஸஹிஹ்வான வார்த்தை இல்லை என்றால் கேள்வி கேள், வார்த்தை விடாதீர்கள் பிஜே மத்ஹப் சார்ந்தவர்களே... எனக்கும் விடத் தெரியும்... அழகிய விவாதம் திரண் இருந்தால் தொடருவோம் ஆனால் எனது நன்பர்கள் ததஜ இயக்கத்தில் உள்ளார்கள் அவர்களுடன் தான் வருவேன்..

      நீக்கு
    4. அஸ்ஸலாமு அலைக்கும்..
      அன்புள்ள சகோதரே

      உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டடும்

      உங்களை நான் என்னமோ நல்லா மார்க்க சித்தனை உடயவர் என்று நினைத்தேன். ஆனால் நீகங்கள் இஸ்லாத்தை இவ்ளோ மோசமாக நினைத்து வைத்து இருபீர்கள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை.

      நீங்கள் சொல்லும் சொல்லும் கீள் உள்ளவை அனைத்தும்
      அல்லாஹ் உடையதூதர் காட்டியவழி

      1.அல்லாஹ்தான் கடவுள் :
      2. அல்லாஹுவுக்குதான் சஜிதா
      3.குர்ஆன் ஓதுதல் :
      4. ஜம் ஜம் நீர்தான் புனித நீர்
      5.மஸ்ஜித்துக்கு செல்வது
      6.கஃபாவைதான் சுற்ற
      7.நேர்ச்சை
      8.திக்ரு செய்வது :
      9.ஹஜ்ஜுக்கு செல்வது :
      10.கஹ்பவை முன்னோக்குகிரர்கள்!
      11.நோன்பு பெருநாள் :
      12.நோன்பு :
      13.லைலதுல் கத்ர்
      14.மக்காவில் மொட்டை
      15.ஆடு மாடு ஒட்டகை பலி

      அல்லாஹ் கூறியதும் (குரான் ) நபி (ஸல் ) அவர்களின் (சொல் ,செயல்,அங்கிகாரம் ) தான் மார்க்கம் .

      1.ஒரு பூந்தி போட்டணதுக்கு அல்லாஹ் உடன் நீ யாரை? ஒப்பிடுகிறாய்
      2.ஒரு பூந்தி போட்டணதுக்கு இஸ்லாத்தை இவ்ளோ மோசமாக நினைத்து வைத்து இருபீர்கள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை ச்சா .

      நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றும், ஹதீதுகளைக் கொண்டு நிலைநாட்டப்பட்டவை மட்டுமே. ஹதீதில் வராதது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கிகாரத்தில் வர முடியாது. ஆகவே, ஹதீஸ் ஆதாரமில்லாதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பவர்கள் நிச்சயமாக அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். நான்கு மத்ஹபு பிரிவுகளுக்கு (தக்லீதுக்கு) குர்ஆனிலும் ஆதாரமில்லை. ஹதீதுகளிலும் ஆதாரமில்லை. அப்படி இருந்தால் முகல்லிதுகள் எடுத்துக்காட்டட்டும். ஆகவே, நான்கு மத்ஹபு பிரிவினர் குர்ஆன், ஹதீஸில் வராதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பதால், அவர்கள் (முகல்லிதுகள்) அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். ஆகவே, நான்கு மத்ஹபு பிரிவினர் (முகல்லிதுகள்) ‘அஹ்ல சுன்னத்’ அல்ல என்பது தௌ;ளத் தெளிவாக விளங்குகின்றது

      6:125 فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ
      6:125. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
      7:178 مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي ۖ وَمَن يُضْلِلْ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ
      7:178. அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்;யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.

      அசல் அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் நாங்கள் தான்.
      உங்களா மாதிரி எந்த மதுஹப்பயும் .........பின் பற்ற கடையாது
      நங்கள் (நபி சொல்லாத) எந்த மதுஹப்பயும் பின் பற்ற கடையாது அப்படி சொல்லுறவன் பொய்யன்


      விவாதத்திற்குத் தயாரா?
      நீங்கள் காட்டாகூடிய ஹதிஸ் பலகினமான ஹதிஸ்தான் அரபியில் இருக்கு என்று பொது மக்களை யமாதாதே !!
      சுமா எனமாச்சம் டைப் பண்ணிடு அரபியில் இருக்கு சொல்லாதே !!


      சுமா பலமானது என்று சொன்னால் போதாது. அதை வா விவாதிக்க
      நீங்கள் ஒரு ........உண்மையாளராக இந்தால் விவாதிக்க வாருங்கள் .
      அப்படி உங்களால் வரத்துப்பு இல்லேண்ட நீ ஒரு மாகா பொய்யன் .
      சாரி நீங்கள் ஊருக்கு வர அவசியமே இல்லை நாங்கள் நீங்கள் இருக்கும் இடத்துக்கு வருகிறோம் விவாதிக்க தயாரா ?

      உங்களுடைய command லே உங்க பெயாரு போடுயா ?

      இது போதும் நீங்கள் ஒரு மாகா பொய்யன் என்று .
      உங்களுக்கு யார் இந்த பலகினமான ஹதிஸை கொடுத்தார்களோ !! அவர்கள் இடம் சொல்லுகள் நேர்க்கு.. நேர்.. பொதுமக்கள் மத்தியல் விவாதம் செய்ய தயாரா?
      விவாதத்திற்கு வாருகள் இன்ஷால்லாஹ் பொதுமக்கள் சத்தியத்தை அறிந்து கொள்வார்கள்

      இதுதன் நான் உங்களுக்கு எழுதும் கடைசி command விவாதத்திற்கு வாருகள்.. வாருகள்... வாருகள்...

      மக்கள் மத்தியில் பலவீனமான ஹதிசை காட்டி வழிகேடுக்காதே !!
      இதில் உங்களுக்கு என்ன நன்மை ?
      உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டடும் என்று தூவா செய்தவன்னாக


      by
      அபூ சாலிஹ - 00919629303474

      நீக்கு
    5. அறிவற்றவனே..

      பொருடா?...யார் பொய்யன் என்று..ஹதிஸ் தெரியதா முட்டாளே? பொருத்து இரு..யார் பொய்யன் என்று....

      ததஜ இயக்கத்தில் உள்ளவர்கள் மட்டும் அறிவாளியா? அவர்களுக்கும் மட்டும் தான் ஹதிஸ் தெரியுமா? மற்றவர்கள் மார்க்கம் தெரியதா? நாங்கள் எல்லாம் ஹதிஸ் படிக்கவில்லை என்றும்.. ததஜ இயக்கத்தில் உள்ளவர்கள் தான் மார்க்கத்தில் புலி மற்றவர்கள் எலி என்று நினைக்கிறாயா? அறிந்து கொள் பெருமை உடையோர் ஒரு போதும் வெற்றி அடைய மாட்டார்கள்.. வல்லவனுக்கு புல்லே ஆயிதம்..

      நீக்கு
    6. அறிவற்றவனே..

      பொருடா?...யார் பொய்யன் என்று..ஹதிஸ் தெரியதா முட்டாளே? பொருத்து இரு..யார் பொய்யன் என்று....

      ததஜ இயக்கத்தில் உள்ளவர்கள் மட்டும் அறிவாளியா? அவர்களுக்கும் மட்டும் தான் ஹதிஸ் தெரியுமா? மற்றவர்கள் மார்க்கம் தெரியதா? நாங்கள் எல்லாம் ஹதிஸ் படிக்கவில்லை என்றும்.. ததஜ இயக்கத்தில் உள்ளவர்கள் தான் மார்க்கத்தில் புலி மற்றவர்கள் எலி என்று நினைக்கிறாயா? அறிந்து கொள் பெருமை உடையோர் ஒரு போதும் வெற்றி அடைய மாட்டார்கள்.. வல்லவனுக்கு புல்லே ஆயிதம்..

      வருகிறேன்.. வருகிறேன்..வருகிறேன்.. இதுவும் என்னுடைய இறுதி எழுத்து பதிவு.. சந்திக்கலாம் உனது பள்ளியில்...

      நீக்கு
    7. அன்பு சகொதரரெ நான் ததஜ வை உள்ளேன் உன்மையான குரான் சுன்னா இங்கு இருப்பதால் நான் இந்த ஜமாத்தில் உள்ளேன்.உங்கள் கூற்றில் நிங்கள் உன்மையாளராக இருந்தால் உங்களை நேரில் சந்திக்க நாங்கள் தயார்.நீங்கள் வெளிநாட்டில் உள்ளவர் என்று கூறினீர் நீங்கள் துபாயில் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்..என் பெயர் தாவுத் அலி..056-7984816..வேறு நாடாக இருந்தால் எந்த நாடுனு தெரியபடுத்தவும்..வீரத்தை எழுத்தில் காட்டாமல் அல்லாஹ்காக, அஞ்சாமல் பெய்ருடன் பதில் போடவும்.உங்கள் பதிலுக்கு காத்து இருக்கீரோம்..

      thanks for
      dawood ali

      நீக்கு
  22. அஸ்ஸலாமு அலைக்கும்..

    அல்லாஹ்வை கூட்டமாக அமர்ந்து நினைவு கூர்தல் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது, மேலும் திக்ர் என்பது ஒரு வகையான துஆ ஆகும் ஏனென்றால் நபி(ஸல்) பல திக்ருகளை துஆவாக கற்று கொடுத்துள்ளார்கள் என்பதை ஹதிஸ்களில் காணப் படுகிறது.


    அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் ‘உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் ‘என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?’ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனவான் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்.அதற்கு இறைவன், ‘அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்” என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், ‘என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?’ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், ‘அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்” என்பார்கள். அதற்கு இறைவன், ‘அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை” என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?’ என்று கேட்பான். வானவர்கள், ‘சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்” என்று பதிலளிப்பார்கள். இறைவன், ‘அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?’ என்று வினவுவான். வானவர்கள், ‘நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)” என்று பதிலளிப்பார். இறைவன், ‘அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?’ என்று கேட்பான். வானவர்கள், ‘இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை” என்பர். அதற்கு இறைவன், ‘அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?’ என்று கேட்பான் வானவர்கள், ‘நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்” என்பர். அப்போது இறைவன், ‘எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்” என்று கூறுவான்.அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், ‘(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்” என்பார். அதற்கு இறைவன், ‘அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்” என்று கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் புஹாரி(ரஹ்)

    தொடரும்..

    பதிலளிநீக்கு
  23. “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக. குர்ஆன்-17:81.

    * சுன்னத் ஜமாஅத் ஆலிம்களுக்கு பகிரங்க அறைகூவல்

    , பராஅத் இரவு
    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை மர்கஸில் 24-06-13 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு பராஅத் இரவு சம்மந்தமாக இமாம். முஹம்மது சித்தீக் அவர்கள் ஒலி பெருக்கி மூலம சுன்னத் ஜமாஅத் ஆலிம்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

    குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து ஆதாரம் காட்டினால் நாங்களும் எங்கள் பள்ளியில் செயல்படுத்துவோம் என்று பகிரங்கமாக அறைகூவல் விடப்பட்டது.

    மேலும் இந்த பராஅத் இரவிற்கு சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் ஆதாரம் தரவில்லையென்றால் மக்களே இந்த பித்அத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
    அல்குர்ஆன் 3:104

    பதிலளிநீக்கு
  24. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
    அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

    பதிலளி

    பதிலளிநீக்கு