Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 8 ஜூன், 2013

அரை நூற்றாண்டுகளை கடந்த லெப்பைக்குடிக்காடு பொது நூலகம்

அரை நூற்றாண்டுகளை கடந்த லெப்பைக்குடிக்காடு பொது நூலகம்

அறிவுக் களஞ்சியமான பொது நூலகம் லெப்பைக்குடிக்காடு மாநகரில் 15.07.1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 06.09.1958 அன்று R.கல்யாணசுந்தரம்
அவர்கள் முதல் உறுப்பினராகவும் 19.10.1958 ல் B.முகமது யூசுப் அவர்கள் இரண்டாவது உறுப்பினராகவும் அதைத் தொடர்ந்து தற்போது 05.05.2013 வரை 2767 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போதைய நூல் இருப்பு 34,083. புரவலர்கள் எண்ணிக்கை 38.

லெப்பைக்குடிக்காடு நிர்வாகத்தினரால் ஜமாலியா நகரில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. 01.08.1999 முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாணாக்கர்களின் புத்திக் கூர்மையை பெருக்கிக் கொள்ள பொது அறிவு நூல்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தின் மீது தெளிவு பெற சமுதாய நூல்களும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி நூல்கள் இந்நாட்டு அயல்நாட்டு எழுத்தாளர்களின் அற்புதமான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் இன்னும் ஏராளமான தலைப்புகளின் கீழ் நூல்கள் உள்ளன.

இன்றைய கால கட்டமானது கணினி மற்றும் தொலைக்காட்சியில் மக்கள் மனநிலை ஆழ்ந்துவிட்டது. அதுவும் குறிப்பாக கைப் பேசியினால் வாழ்க்கையே சுருங்கி விட்டது என கூறலாம். அரை நூற்றாண்டுகளை கடந்து ஒரு நூலகம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் தினந்தோறும் பயன்பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 15 லிருந்து 20 க்குள்ளாகவே இருப்பது மிகவும் வேதனையான விசயமாக உள்ளது.

அனைத்து வகையான நாளேடுகளை ஒரே இடத்தில் படிக்கின்ற பொன்னான வாய்ப்புகள் எத்தனை ஊர்களில் உள்ளது. எளிதாய் கிடைத்திருக்கின்ற வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் தினமும் அரை மணிநேரம் ஒதுக்கி தங்களின் பதிவுகளை வெளிப்படுத்தினால் அறிவு ஜீவிகளான நம்மையும் நமதூரையும் உலகமே திரும்பிப்பார்க்கும் என்பது நிஜம்.

புகைப்படம் நமது நிருபர்
நன்றி குளோபல் செய்திகள் 1 JUN 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக