Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 15 ஜூன், 2013

இஸ்லாமிய திருமணங்களுக்கு பள்ளிவாசல் பதிவை அரசு ஏற்கவேண்டும் உலமா சபை கோரிக்கை!

கட்டாய திருமணப்பதிவு சட்டத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு விலக்களித்து பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசு பதிவாக ஏற்க தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சபையின் மாவட்ட தலைவர் சய்யித் அஹ்மத், செயலாளர் அய்யூப்கான், பொருளாளர் ரசூல்முகைதீன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ சுரேஷ்குமாரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

முஸ்லிம் தனியார் சட்டம் வழங்கிய திருமண சட்டத்தின் அடிப்படையில் பெண்கள் பருவத்தை அடைந்துவிட்டாலே திருமணம் செய்வதற்கு தகுதி பெற்று விடுகிறார். இது இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்த அடிப்படை உரிமையாகும். ஆனால் சமீப காலமாக குழந்தை திருமண தடைச்சட்டம் என்ற பெயரில் பருவமடைந்த 18 வயது பூர்த்தியாகாத முஸ்லிம் பெண்களின் திருமணத்தை சில கலெக்டர்கள் மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது என்ற புகார்கள் பரவலாக தமிழகம் முழுவதிலிருந்தும் இச்சபைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய வாழ்வியல் அடிப்படை உரிமையை சட்டத்தின் காவலர்களே அலட்சியம் செய்வது வேதனையளிக்கிறது. இந்த சட்டமீறல் செயல் இனியும் தொடரக்கூடாது என்று அனைத்து கலெக்டர்களுக்கும் ஆணையிட்டு இந்திய அரசியல் சாசனம் சிறுபான்மையினருக்கு வழங்கிய உரிமையை பாதுகாக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இதுசம்பந்தமான அரசாணையை வெளியிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமிய குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள் இஸ்லாமிய பள்ளிவாசல்களில் ஊரார் முன்னிலையில் பதிவுசெய்யப்படுகிறது. எனவே இந்த கட்டாய திருமணப்பதிவு சட்டத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு விலக்களித்து நாங்கள் பள்ளிவாசல்களில் செய்யும் பதிவையே அரசு பதிவாக ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

நன்றி தினகரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக