Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 5 மார்ச், 2013

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை மற்றும் மின் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் தேவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால் மங்கூன் துணை மின் நிலையத்திற்குள்பட்ட அம்மாபாளையம், மேலப்புலியூர் மின்பாதை, சிறுவாச்சூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பாடாலூர், செட்டிக்குளம், கொளக்காநத்தம் மின்பாதை, பெரம்பலூர் நகர் மற்றும் கிராமிய மின்பாதை, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட தொண்டமாந்துறை, பூலாம்பாடி மின்பாதை, மங்கலமேடு துணை மின் நிலையத்திற்குள்பட்ட லப்பைக்குடிக்காடு,வி.களத்தூர், வேப்பூர் மின்பாதை ஆகிய துணை மின்
நிலையங்களிலிருந்து மின்மாற்றிகள் மூலம் பயன்பெறும் பகுதிகளுக்கு காலை 6 மணி முதல், 9.30 மணி வரை மின் தடையும், 9.30 மணி முதல் 1.30 மணி வரை மின் விநியோகமும், 1.30 மணி முதல் 4 மணி வரை மின் தடையும், 4 மணி முதல் 6 மணி வரை மும்முனை மின்சாரமும், டெல்டா அல்லாத பகுதிகளுக்கு தேர்வு நாள்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறாத பகுதிகளில் மங்கூன் துணை மின் நிலையத்திற்குள்பட்ட அடைக்கம்பட்டி, சத்திரமனை மின்பாதை, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட கை.களத்தூர் மின்பாதை, மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை, கல்லப்பட்டி மின்பாதைகளில் உள்ள மின்மாற்றிகள் மூலம் பயன்பெறும் பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் 9.30 மணி வரை மும்முனை மின் விநியோகமும், 9 மணி முதல் 1.30 மணி வரை மின் தடையும், 1.30 மணி முதல் 4 மணி வரை டெல்டா பகுதிகளுக்கு மும்முனை மின்சாரமும், டெல்டா அல்லாத பகுதிகளுக்கு இருமுனை மின்சாரமும் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக