Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 13 மார்ச், 2013

முஸ்லிம்களின் ஒற்றுமை மற்றும் போராட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி! – இடிக்கப்பட்ட கெளஸியா மஸ்ஜித் மீண்டும் கட்டப்படுகிறது!


முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையுடன் போராடியதன் விளைவாக தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள கவுஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்த மஸ்ஜித் மற்றும் வீடுகள் மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன.
மஸ்ஜிதின் கட்டிடப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இடிக்கபட்ட வீடுகளை திரும்பவும் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. தற்போது தற்காலிக டெண்டுகளில் வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கெளஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் புல்டோசரை பயன்படுத்தி வீடுகளையும், 400 ஆண்டுகால பழமையான மஸ்ஜிதையும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து தள்ளினர்.
இதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி  தலைமையில் காலனி வாசிகளை ஒன்றுதிரட்டி கெளஸியா காலனி மறுவாழ்வு பேரவையை உருவாக்கி போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளை ஒன்றிணைத்து வக்ஃப் பச்சாவோ தெஹ்ரீக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஷாஹி இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரம் அறங்காலவராகவும், எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இவ்வமைப்பின் செயல்பாட்டினால்தான் மஸ்ஜித் மீண்டும் கட்டுவதற்கான பணிகள் துவங்கின. மீண்டும் கட்டப்படும் கெளஸியா காலனி மஸ்ஜிதுக்கு நேற்று முன் தினம் எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் சென்று  பார்வையிட்டார்.
மஸ்ஜித் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டு காலனி மக்களுக்கான மறுவாழ்வு பணிகள் முடிவடையும் வரை எஸ்.டி.பி.ஐ முழு ஆதரவை அளிக்கும் என்று இ.அபூபக்கர் உறுதி அளித்தார். காலனிவாசிகளான முஸ்லிம்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும், போராட்ட உறுதியையும் இ.அபூபக்கர் பாராட்டினார்.
நன்றி தூது ஆன்லைன்

1 கருத்து:

  1. அஸ்லாமு அழைக்கும்

    நமக்கும் ஒரு அரசியல் கட்சி வேண்டும் இதை கண்டு தெளிவு பெற வேண்ண்டும் ஆம் இந்த அறுபது கால அரசியலில் நமக்கு கிடைத்த முதல் வெற்றி முஸ்லிம் சமுதாயத்துக்கு அரசியல் தேவை என்பதை இதுவே போதுமானதாகும் இனி வரும் களங்களில் dmk முஸ்லிம் admk முஸ்லிம் போன்ற பல கட்சிகளின் முஸ்லிம்களாக இல்லாமல் முஸ்லிம்களுக்காக போராடுகின்ற முஸ்லிம் கட்சிகளில் இணைந்து போராடுவேம் இன்ஷா இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் வெற்றி கொடுப்பானாக. ஹமீத்

    பதிலளிநீக்கு