Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 24 பிப்ரவரி, 2014

இறையச்சத்துக்கான இவ்வுலகப் பரிசு!



சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச் சொல்லி கேட்க…
ஆடு மேய்ப்பவரோ, “இது எனது ஆடில்லை. இன்னொருவரின் ஆட்டு மந்தை. நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?’ என்று கூறி ஆட்டை தர மறுக்க…
அவரிடம் “ஆடு தொலைந்து விட்டது” என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்று விட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க…

அவரோ… “இருநூறல்ல… இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை நான் உங்களுக்கு விற்க மாட்டேன்” என்று உறுதியாகக் கூற…
அந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் “இங்குதான் உரிமையாளரோ வேறு யாருமோ உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம் கொள்கிறீர்?” என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த,
அதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப் கூறிய வார்த்தை… மாஷாஅல்லாஹ்… வரலாற்று புகழ்பெற்று விட்டது.
“அல்லாஹ் எங்கு சென்றான்… அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா… அவன் உங்களையும் கண்காணிக்கிறானே…”
…என்று எதிர்கேள்வி கேட்டு ஆட்டை தரவோ விற்கவோ மிகத் திடமாக மறுத்துவிடுகிறார்.
இது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி வந்தவுடன்… அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.
ஆம்..! அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து… பாராட்டி, 200,000 சவூதி ரியால் பணத்தை  பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூஃப் உள்ள புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.
இதற்கு முன்னரே…
அல் ஹுசைனி ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம், 20,000 சவூதி ரியால் வெகுமதியை அந்த சகோதரருக்கு வழங்கியுள்ளது.
மேலும், 20,000 சவூதி ரியால் பரிசுப் பணமும் வேறோரு இடத்தில் இருந்து அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.

மாஷாஅல்லாஹ், மப்ரூக்.
ஆக மொத்தம்… தூய்மையான இறையச்சத்துக்கு சுமார் நாற்பது லட்சம் ரூபாய் சன்மானத்தை அல்லாஹ் இவ்வுலகிலேயே சகோ. யூசுஃபுக்கு வழங்கி, தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான். இன்னும் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
“அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.” (அல்குர்ஆன் 65: 2-3)
ஸுப்ஹானல்லாஹ்.
மேலும் தகவல்களுக்கு:
http://riyadhconnect.com/trustworthy-sudanese-shepherd-in-saudi-gets-sr-40k-as-reward/
http://sabq.org/6RRfde
நன்றி : pinnoottavaathi.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக