Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

வி.களத்தூரில் நேற்று நடைபெற்ற மாசி மகம் ஊர்வலத்தில் சிறிது சலசலப்பு!

வி.களத்தூரில் நேற்று (15/2/14)  காலை 11 மணிக்கு மேல் மாசி மகம் ஊர்வலம் பள்ளிவாசல் தெரு வழியாக சென்றது.

பொதுவாக ஊர்வலம் கடை வீதியில் இருந்து பள்ளிவாசல் வழியாக மேற்கு பகுதிக்கு சென்று மீண்டும் மெயின் ரோடு வழியாக கடைவீதிக்கு வந்து கிழக்கு கோவில் சென்றடையும்.
பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் செல்வது தொடர்பாக பல பிரச்சினை உள்ளதால் ஊர்வலத்தின் போது நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.மேலும் பல நிபந்தனை அடிப்படையில் ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளித்தது.வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி ஏதேனும் ஒரு பெயரில் ஊர்வலம் நடைபெறும் (சென்ற மாதம் பொங்கல் பண்டிகையின் போது ).அதேபோல் இந்த தடவை மாசி மகம் என்ற பெயரில் ஊர்வலம்  நடைபெற்றது.இந்த ஊர்வலம் காலை சுமார் 11 மணியளவில் கடைவீதியில் இருந்து புறப்பட்டு இஸ்லாமியர்கள் தெரு வழியாக சென்ற போது காகிதே மில்லத் திடல் அருகில் ஊர்வலத்தை நிறுத்தி ஆட்டம் போட்டனர்.(ஊர்வலம் தொடர்பாக அரசு அளித்த நிபந்தனை இஸ்லாமியர்கள் தெருவில் நிற்காமல் விரைவாக செல்ல வேண்டும் என்பதாகும் .) ஆனால் இன்று இவர்கள் ஊர்வலத்தை தெருவில் நிறுத்தி ஆட்டம் போட்டது மக்களிடம் வெறுப்பு ஏற்ப்படுத்தும் வண்ணம் இருந்து. இதனால் இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்ப்பட்டு சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது.
காவல்துறையிடம் முறையீடு!
அதன் பிறகு இஸ்லாமியர்கள் காவல் துறையிடம் முறையிட்டனர்.இதனால் காவல் துறையினர் உடனடியாக அவர்களை விரைவாக செல்ல உத்தரவிட்டனர். காவல்துறையின் உடனடி நடைவடிக்கை எடுத்து அழைத்து சென்றதால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் காவல்துறை துரிதமாக செயல் பட்டது.
இன்று ஊர்வலத்திற்கு போலீசார் வழக்கத்தை விட குறைவாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் நிலைப்பாடு என்ன?
அரசு விதித்த நிபந்தனை மீறி பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இரு பிரிவினைரிடையே மோதலை ஏற்ப்படுத்தும் வகையில் ஊர்வலத்தை நிறுத்தி ஆட்டம் போட்டுள்ளனர். இதனால் அரசு விதித்த நிபந்தனையை அலட்சிய படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அரசு நடுநிலையாக என்ன நடவடிக்கை எடுக்கும்?

நன்றி : vkalathur.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக