Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 8 அக்டோபர், 2014

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நெருக்கடி:”ஸ்கைப்’ உள்ளூர் சேவை நவம்பர் 10 முதல் கட்!

புது டில்லி: “ஸ்கைப்’ இணையதள வசதி மூலம் உள்ளூர் செல்போன், தொலைபேசி அழைப்புகளுக்கான சேவை நவம்பர் 10 ஆம் தேதியுடன் இந்தியாவில் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

“ஸ்கைப்’ என்ற வசதி மூலம் இணையத்தின் வழியாக உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கு வாடிக்கையாளர்கள் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேச முடியும். ஸ்கைப் மென்பொருள் வசதி மூலம் வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். இதுபோன்ற அழைப்புகளுக்கு இணையத் தொடர்பு பயன்பாட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம், மலிவான கட்டணத்தில் பார்த்துப் பேசி மகிழ முடியும் என்பதால், மிகுந்த வரவேற்பை “ஸ்கைப்’ பெற்றது.
வருமானம் பாதிப்பு:
அதேநேரத்தில், ஸ்கைப் சேவையினால் தங்களது வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாக இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகக் குற்றம்சாட்டின. இந்த நிலையில், ஸ்கைப்’பின் தாய் நிறுவனமான மைக்ரோசாப்ட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
உள்ளூர் வசதி கட்:
நவம்பர் 10 ஆம் தேதியுடன் ஸ்கைப் வசதி மூலம் இந்தியாவில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகள் இடையேயான உள்ளூர் அழைப்பு வசதி ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள செல்போன்கள், தொலைபேசிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ளசெல்போன்கள், தொலைபேசிகளுக்கும் ஸ்கைப் வசதி மூலம் இலவசமாகப் பேசிக்கொள்ளும் வசதி தொடர்ந்து நீடிக்கும்.
மேலும், ஸ்கைப் மூலமான வை-பை, குறுஞ்செய்தி வசதிகளை இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாப்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாய்ஸ் அழைப்புகளை இனி அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ் அப்., அறிவித்துள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக