Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 11 அக்டோபர், 2014

மோடியின் தூய்மையான இந்தியா திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சாந்தினி சவுக்!

புதுடெல்லி: மோடியின் ’சுச் பாரத்(தூய்மையான இந்தியா)’ திட்டத்தில் டெல்லியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வர்த்தக மையமான சாந்தினி சவுக்கை புறக்கணித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பா.ஜ.க ஆளும் மாநகராட்சி கவுன்சில், டெல்லியை சுத்திகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் சாந்தினி சவுக்கின் பக்கம் தமது பார்வையை செலுத்தவில்லை என்று அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாந்தினி சவுக்கில் ஒடுங்கிய தெருக்களிலெல்லாம் குப்பைக்கூழங்கள் இப்போதும் குவிந்து கிடக்கின்றன.முக்கிய சாலையில் கடந்த சில தினங்களாக சாக்கடை நிறைந்து வெளியே கழிவுநீர் ஒழுகுகிறது.இதர பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் திட்டம் ஆரம்பித்த பிறகும் இதுதான் நிலைமை.இதனால் பல வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அன்றாடம் நகரத்தை சுத்தப்படுத்தும் வழக்கம் நகரத்தின் இதர பகுதிகளில் நடந்தபோதிலும் சாந்தினி சவுக்கை புறக்கணித்துள்ளனர்.தெருவில் நெரிசல் காரணமாக கழிவுகளின் மீது காலை அழுத்தாமல் நடந்து செல்ல முடியாது.
டெல்லியில் நெரிசல் மிகுந்த வர்த்தக மையங்களில் ஒன்று சாந்தினிசவுக்.’தூய்மையான இந்தியா’ திட்டம் ஆரம்பித்த உடன் தங்களுடைய நிலைமை மாறும் என்று சாந்தினிசவுக்கில் உள்ள வியாபாரிகளும், அங்கு வசிப்போரும் நம்பியிருந்தனர்.ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை. செங்கோட்டை, ஜும்ஆ மஸ்ஜித் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் சாந்தினிசவுக்கில் உள்ளன.செங்கோட்டையின் முக்கிய வாசலான லாஹோரி கேட் சாந்தினி சவுக்கில் தான் உள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக