Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்: காங்கிரஸ் !

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கிய இந்தியர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ரோத்தகி ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளதால், கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட இயலாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மோடி சமூக ஊடகங்களிலும், தனது பிரசார கூட்டங்களிலும் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உண்டு. அந்த பெயர்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏன் வெளியிடத் தயங்குகிறது என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.
ஆனால், தற்போது கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறது.
இதற்காக குறைந்த பட்சம் தங்களது ஆட்சியின் செயல்பாட்டுக்கும், சொல்லுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையாவது நீங்கள்(மோடி) தைரியமாக மக்களிடம் சொல்லி இருக்கவேண்டும்.
பாராளுமன்ற தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று இதனை ஒரு தேர்தல் பிரச்சினையாகவே பா.ஜனதாவும், மோடியும் கிளப்பினர். ஆனால், இப்போது பெயர்களை வெளியிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவிக்கிறது.
இதன் மூலம் தனது, அரசியல் லாபத்துக்காக பா.ஜனதாவும், மோடியும் இப்பிரச்சினையை பயன்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்காக பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக