Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

ஹஜ் பயணிகளுக்கு இந்திய தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் சேவை!

புனித ஹஜ் எனும் கடமையை நிறைவேற்ற உலகெங்கிலுமிருந்து பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித மக்கா நகரம் செல்கின்றனர்.

ஹஜ்ஜின் முக்கிய நாட்களில் ஒன்று அரஃபா தினம். இந்நாளில் அனைத்தும் முஸ்லிம்களும் இன நிற மொழி உடை பேதமின்றி வெள்ளாடை அணிந்தவர்களாக ஒரே இடத்தில் ஒன்று கூடி ”லப்பைக் அல்லாஹீம்ம லப்பைக்” என்று தல்பியா கூறியவர்களாக ஏக இறைவனை போற்றுவதாகும்.

நேற்று (3.10.2014) அரஃபா தினமாகும். 25 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேற்று இரவு முதல் அரபாவில் ஒன்று கூடலாயினர். அந்தி சாயும் வரை தங்கியிருந்து இறைவனை போற்றுவதோடு பிராத்தனைகளிலும் ஈடுபட்டனர். மஸ்ஜித் நமீராவில் அரஃபா தினத்தின் குத்பா உரை நடத்தப்பட்டது. இந்த குத்பா உரையை சவுதி பேரறிஞர் அப்துர் ரஹ்மான் ஆலு சேக் அவர்கள் நடத்தினார்கள்.

அரஃபாவில் இந்திய மக்களுக்கு சேவைகள் புரிவதற்காக இந்தியா பிரடர்னிடி போரத்தின் நூற்றுக்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் முஜீப் தலைமையில் ஒன்று கூடினர்.
இந்திய ஹாஜிகளை இரயில் நிலையங்களிலிருந்து அரபாவின் கூடராங்களில் கொண்டு சேர்ப்பது. வழி தவறியவர்களை அவர்களுக்குரிய கூடாரங்களுக்கு கொண்டு சேர்ப்பது. முதியோர்களை சக்கர நாற்காலி மூலம் உதவுவது என தங்களது சேவைகளை திறம்பட செய்தனர்.

மேலும் ஹாஜிகளுக்கு தேவையான வழிகாட்டல்களை அவர்களின் சொந்த மொழியிலேயே கொடுத்தனர்.
மேலும் ஹாஜிகள் நேற்று இரவு அரஃபாவிலிருந்து முஸ்தலிபாவிற்கு சென்றனர், இரவில் தங்கி காலை மினாவிற்கு திரும்பினர். முஸ்தலிபாவிலும் இந்தியா பிரடர்னிடி போரத்தின் (IFF) தன்னார்வ தொண்டர்கள் ஹாஜிகளுக்கு உதவினர்.
இந்திய தன்னார்வு தொண்டு நிறுவனத்தின் இந்த சேவையை இந்திய தூதரகம், மக்கா ஹஜ் கமிட்டி அமைப்பாளர்கள் மற்றும் ஹாஜிக்கள் பெருமளவில் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக