Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 14 அக்டோபர், 2014

அட்டெஸ் டேஷன் தொல்லை, இனி இல்லை!

அட்டஸ்டேஷன் எனப்படும் சான்றளிப்பு நடைமுறையைத் தமிழக அரசு கைவிட்டுள்ளது. அசல் சான்றிதழ்களைத் திருத்தி, போலியாக நகல்களை உருவாக்குவதைத் தடுக்கும் விதமாக, நகல்களில் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளிடம் கையொப்பம் பெறும் நடைமுறை இருந்து வந்தது. இதன் மூலம், அதிகாரிகளுக்கும் வேலைப் பளு அதிகரித்தது. விண்ணப்பதாரர்களும் அலைச்சல் ஏற்பட்டது. இதிலும் அதிகாரிகள் சிலர், ஒரு நகலில் கையொப்பம் இட, இவ்வளவு தர வேண்டும் என்று நிர்பந்தித்ததும் உண்டு.
என்னதான், இவர்கள் அசல் சான்றிதழ்களை ஒப்பிட்டுப் பார்த்து, கையொப்பம் இட்டாலும், சான்றிதழ் சரி பார்ப்பு என்ற ஒன்று தனியாக நடந்து வந்தது. எனவே, உண்மையில் இந்த சான்றளிப்பினால் பெரிய பயன் எதுவும் இல்லை.
இந்நிலையில், இந்த நடைமுறையைத் தமிழக அரசு மாற்றியுள்ளது. அரசுத் துறை அதிகாரிகள் இனி ஆவணங்களுக்குச் சான்றளிக்க வேண்டாம் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுக்குப் பதிலாகச் சுயசான்று ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை ஒன்றைக் கொண்டு வர, மத்திய அரசு உத்தேசித்து இருப்பதன் அடிப்படையில் தமிழக அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளது. இனி விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களில் அவர்களே கையொப்பம் இட்டுச் சமர்ப்பிக்கலாம்.
சுயசான்று ஆவணங்களுடன் கல்வி நிறுவனங்கள் அல்லது அரசின் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தின்போது, அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக