Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 15 அக்டோபர், 2014

குடும்பத்தினர் துன்புறுத்தியதால் லவ் ஜிகாத் என பொய்யான புகார் அளித்ததாக இளம்பெண் வாக்குமூலம் !

மீரட்: உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்கள் கற்பழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு கிளம்பிய நிலையில் அங்கு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் அம்மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் மதராசாவில் அடைத்து வைத்து கும்பல் ஒன்று தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இப்புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளியில் வேலை செய்து வரும் அப்பெண் தனது வீட்டிற்கு திரும்பும் வழியில் கும்பல் ஒன்று தன்னை கடத்தி, அங்குள்ள மதராசாவில் வைத்து கற்பழித்ததுடன், இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குடும்பத்தினர் துன்புறுத்தியதால் பொய்யான புகார் அளித்ததாக தற்போது அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஒரு இஸ்லாமிய இளைஞரை காதலித்தாகவும், அது பற்றி தெரிந்ததால், தனது பெற்றோர் தன்னை அடித்து துன்புறுத்தி இவ்வாறு புகார் அளிக்கவைத்ததாகவும் அப்பெண் போலீசில் கூறியுள்ளார்.
இத்தகவலை மீரட் நகர எஸ்.எஸ்.பி. ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக