Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 24 அக்டோபர், 2014

விகளத்தூரில் நடைபெற்ற கபாடி போட்டியில் நமதூர் அணி முதல் இடம்..

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிச்சாரத்தின் ஒருபகுதியாக 
இன்று (23.10.2014) கபாடி போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியை வி.களத்தூர் ஜாமாஅத் செயலாளர் 
A.பஷீர் அஹ்மத் அவர்கள் துவக்கி வைத்து சிறிது நேரம் பேசினார்கள். 
அதனைதொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

சிறியவர்களுக்கு தனியாகவும்,பெரியவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் நடந்தன.மொத்தம் 16 அணிகள் விளையாடிது. 

சிறியவர்கள் போட்டியில் இறுதி சுற்றில் வி களத்தூர்  டைகர் வாரியர்ஸ், ரைடர் வாரியர்ஸ் வெற்றிகளை பெற்றார்கள்.

பெரியவர்கள் போட்டியில் இறுதி சுற்றில் லப்பைகுடிகாடு அசார் பிரதர்ஸ், வடகரை அணியும் மோதின.வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடினார்கள்.இறுதியில் லப்பைகுடிகாடு அசார் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று 
முதல் பரிசை வென்றது. 

வடகரை அணி இரண்டாம் பரிசை வென்றது.
வருகிற 01.11.2014 ம் தேதி நடைபெறும் தெருமுனை பிரச்சாரம் & பரிசளிப்பு விழாவில் இரு அணிக்கும் பரிசு வழங்கப்படும்.

இந்த விளையாட்டு போட்டியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

வருகிற 26.10.2014 ம் தேதி சிறுவர்களுக்கான விளையாட்டுபோட்டி நடைபெறுவதாக பாப்புலர் ப்ரண்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.






1 கருத்து: