Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மகாராஷ்டிரத்தில் ஒவைஸி கட்சி வெற்றி – பறிபோகும் முஸ்லிம் வாக்கு வங்கி: காங். கவலை!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம் கட்சியான அகில இந்திய மஜ்லீஸ்-இ-இத்தாஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி இரு தொகுதிகளில் வெற்றிபெற்றுள் ளது. இதன்மூலம் தனது முஸ்லிம் வாக்கு வங்கி பறிபோயுள்ளதால் காங்கிரஸ் கட்சி கவலையடைந் துள்ளது.
ஹைதராபாத்தில் முஸ்லிம் களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம். இது, மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் மும்பையிலுள்ள 14 தொகுதிகள் உட்பட மொத்தம் 28
இடங்களில் போட்டியிட்டது. இதில், மத்திய அவுரங்காபாத் மற்றும் பைகுலா ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அவுரங்காபாத்தில் மகாராஷ்டி ராவின் பிரபல பத்திரிகையாள ரான சையது இம்தியாஜ் ஜலீல், சிவசேனா கட்சியின் வேட் பாளரைத் தோற்கடித்துள்ளார். பைகுலாவில், வழக்கறிஞரான வாரீஸ் யூசூப் பத்தான், பாஜக வேட்பாளர் மது சவாணை தோற்கடித்துள்ளார்.
காங்கிரஸுக்கு 6-வது இடம்
மத்திய அவுரங்காபாத் தொகுதி, முஸ்லிம் மற்றும் தலித் வாக் காளர்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும். இங்கு காங்கிரஸ் ஆறாவது இடத்துக்கு தள்ளப் பட்டு விட்டது. பைகுலாவில், காங்கிரஸ் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் 14 தொகுதிகளில் 12 தொகுதிகளை காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கைப்பற்றுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை காங்கிரஸுக்கு 5 இடங்களே கிடைத்தன. தேசியவாத காங்கிரஸுக்கு ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை.
ஆனால், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. மேலும் மூன்று தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும், ஒன்பது தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
இது, மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்குகளை அதிக அளவு பெற்று வந்த காங்கிரஸை கவலை கொள்ள வைத்துள்ளது.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியானது, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு சில இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி ஆவார். இக்கட்சிக்கு, தெலுங்கானாவில் ஏழு எம்எல்ஏ-க்கள், ஒரு எம்.பி. உள்ளனர். உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடாகாவிலும் போட்டியிட இக்கட்சி முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக