Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 25 அக்டோபர், 2014

பெரம்பலூர் - மங்கள மேட்டில் கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதல் !

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் உள்பட 2 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.
திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு என்ற இடத்தில் அதிகாலை 3 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அவ்வழியில், பஸ்சுக்கு முன்னால் நூல் பண்டல்களை ஏற்றிய லாரி ஒன்று போய் கொண்டிருந்தது. அப்போது, லாரியை ஓவர்டேக் செய்ய பஸ் டிரைவர் முயன்றபோது, இடதுபக்கமாக வந்த லாரி திடீரென்று சாலையின் நடுவே வந்தது. இதில், எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதிய பஸ் சுமார் 30 மீட்டர் தூரம் இடித்தபடி சென்றது. பஸ்சின் முன்பகுதி நொறுங்கி லாரிக்குள் புகுந்தது.இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்திருந்த கண்டக்டர் சுதாகர்(46), பயணி கோவிந்தராஜ் (36) ஆகிய 2 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த மங்களமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



நன்றி தினகரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக