Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 14 அக்டோபர், 2014

விசாரணைக்காக அழைத்து வந்த சையத் முகம்மது துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற எஸ்.ஐ. -ராமநாதபுரத்தில் பயங்கரம்!

ராமநாதபுரம் கோட்டை காவல் நிலையத்தில் இன்று மாலை விசாரணைக்காக அழைத்து வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் சப் இன்ஸ்பெக்டர். இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ளது எஸ்.சி. பட்டணம். இப்பகுதியைச் சேர்ந்தவர் சையத் முகம்மது. இவருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீஸார் சையத் முகம்மதுவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதை ஏற்று முகம்மது விசாரணைக்குப் போனார். இன்று மாலை 6 மணியளவில் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென காளிதாஸ், துப்பாக்கியை எடுத்து சையத் முகம்மதுவை சுட்டு விட்டார். இதில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முகம்மது உயிரிழந்தார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக