Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

துபாயில் ஹஜ்ஜூப்பெருநாள் ... நமதூர் மக்களும் !


அமீரகம் துபையில்  04/10/2014 சனிக்கிழமை புனித தியாகத் திருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.துபாய் நேரப்படி காலை 6.35 மணிக்கு ஹஜ்ஜுப் பெருநாளைக்கான தொழுகை
சிறப்புடன் நடந்தது. டேரா துபை ஈத்காவில் நடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையில் நமதூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இங்குள்ள அதிகபட்ச பள்ளிவாசல்களில் பெருநாளுக்கான தொழுகை நடத்தப்பட்டாலும், துபை டேரா பகுதியில் வசிக்கும் நமதூர்  சகோதரர்கள் அநேகமானோர்களும் மற்றும் பிற ஊர்க்காரர்களும், பிற நாட்டவர்களும் இங்குள்ள ஈத்கா மைதானத்தில் தொழுவதற்கு விரும்பி வருவார்கள். காரணம் அனைத்து நண்பர்கள் சொந்தபந்தங்களை ஒன்றாக ஓரிடத்தில் சந்தித்து பெருநாள் வாழ்த்தினை பகிர்ந்து கொள்ள ஏற்ற இடமாக நகருக்கு மத்தியில் இந்த டேரா ஈத்கா மைதானம் அமைந்துள்ளது.



இஸ்லாமிய வரலாற்றுக்கு ஒரு மகத்துவம் உண்டு.உரைகளின் மூலம் கேட்டு உணர்ச்சி வசப்படுவதோ, பக்தி பரவசமோ அல்ல.நிகழ்கால சூழலுக்கு ஏற்றவாறு நமது வாழ்க்கையில் அமல்படுத்துவதற்கான பாடங்களாகும்.இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் நமது வாழ்க்கையிலும் மலரவேண்டும்!அத்தகையதொரு வல்லமையை அல்லாஹ் நம் அனைவருக்கு தந்தருள்வானாக!அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா முபாரக்!நம் அனைவரது நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!
தகப்பல்லாஹு மின்னா வ மின்கும்





















புகைப்படம் முகநூலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக